பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்பகராமன் பிள்ளை எனும் பாரத இளஞ்சிங்கம்..

அந்த சிறுவன் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தான், 1891ல் பிறந்த அவனுக்கு அப்பொழுது 13 வயதாகியிருந்தது அவன் தந்தை சின்னசாமி பிள்ளை திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான பணியில் இருந்தார், அந்த சமஸ்தானம் இன்றைய கன்னியாகுமரி வரை நீண்டிருந்தது, சென்பகராமனின் சொந்த ஊர் திருவனந்தபுரத்து புத்தன் சந்தை பகுதியாகும் அக்காலத்தில் அல்ல இக்காலத்திலும் கேரளத்தில் பிறந்தவர்கள் சிலம்பம், களறி போன்ற கலைகளை பழகுவது மரபு, சென்பகராமனும் அதில் கற்று தேர்ந்திருந்தார், வர்ம கலையும் அவருக்கு தெரிந்திருந்தது அவரின் தந்தைக்கும் […]

சுப்பிரமணிய சுவாமி

பாரத கண்டத்தில் எக்காலமும் ஒரு முனிவன் தனித்திருப்பான், அவன் தர்மத்திலும் சத்தியத்திலும் நிலைத்திருப்பான், தர்மம் அவனில் குடிகொண்டு அவனை காத்து நிற்கும் எவ்வளவு வல்லமை பெற்றவன் ஆண்டாலும், எத்தனையோ வரம்பெற்றவன் ஆண்டாலும் அந்த முனிவனை ஒன்றும் செய்யமுடியாது, அவன் தன் கண் அசைவிலே அதர்மக்காரனை ஆட்டிவைப்பான், அவன் பெயரை கேட்டாலே அதர்ம கும்பல் பெரும் அச்சம் கொள்ளும் இந்த முனிகள் ஒவ்வொரு காலமும் இருந்தனர், துர்வாச முனி முதல் அந்த பாரம்பரியம் தொடர்ந்து வந்தது நம் கண்முன் […]

நீதிநெறி விளக்கம் : 84

“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார்கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் – பண்ணோடுபாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்வீடில் புலப்பகையி னார்” பெண்மையின் அழகை கண்டு வியக்கமாட்டார், பெண் அழகின் சிறப்பை தன் வாயால் சொல்லமாட்டார், பெண்களை தன் நெஞ்சில் பதியுமாறு நோக்கமாட்டார், பெண்களின் அழகிய குரலின் பாடல்களை கேட்கமாட்டார், உயர்ந்த செயல் அல்லாததை பாராட்டமாட்டார், தன் ஐம்புலன்களையும் அதன் போக்கில் விடாமல் (வீடில்) அதனை அதன் செயலுக்கு விரோதமாக்கி (பகையினர்) அடக்கி வைத்திருப்பார் நல்ல துறவிகள் துறவி என்பவன் ஐம்புலன்களையும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 06

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 06 “அனைத்துருவ மாய வறிவை யகலில்தினைத்துணையு மில்லை சிவம்” இக்குறள் “அனைத்து உருவமாம் ஆய அறிவை அகலில் தினைதுணையும் இல்லை சிவம்” என இக்குறள் பிரிந்து பொருள்தரும். எல்லா உருவமாகவும் விளங்கும் சிவத்தை அறிந்துகொள்ள முடியாமல் சிவனை தேடினால் அந்த சக்தியினை அடையவோ உணரவோ முடியாது என்பது பாடலின் பொருள் அதாவது சிவம் எல்லா வடிவிலும் எல்லா உயிரிலும் காணபவை […]

தேசத்தை அழித்த காதல்….

நாதா என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? மேனகையே, இங்கே நாம் சந்தித்து பேசவேண்டாம், பலருக்கு பொறுக்காது. தனியே வா, அதோ அந்த மரத்தடியில் அமர்ந்து பேசலாம்.. வந்துவிட்டேன் சொல்லுங்கள் சுவாமி என்ன எழுதுகின்றீர்கள்? மேனகையே நான் இந்த வார வீரசிவாஜி தொடரை இறுதி செய்து கொண்டிருக்கின்றேன் எப்பொழுதும் ஆன்மீகம், அரசியல், வீரசிவாஜி என்றால் எப்படி நாதா? இந்த காதல் ரசம், காவிய கூட்டு, மயக்க சோறு இதெல்லாம் எழுத கூடாதா? மேனகையே அதற்கும் எமக்கும் தூரம் அதிகம், அதெல்லாம் […]

நீதிநெறி விளக்கம் : 83

“முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார்நிறையு நெடுநாணும் பேணார் – பிறிதுமொருபெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்கற்பின் மகளிர் பிறப்பு” ஒழுக்கம், தன் குடும்பபெருமை, தன் கணவனுக்கு மட்டுமே உரித்தான நிலை ஆகியவற்றை எணாமால், தனக்குள்ள பொறுப்பு தன் உடன்பிறந்த குணமான நாணம் ஆகியவற்றை நினைக்காமல் ஏதோ ஒரு காரணத்தால் மற்றொருவனோடு உறவு கொண்டாடும் பெண்களும் உண்டு, அப்படிபட்ட பெண்கள் பிறப்பே பாவம் என்பது பொருள் தன் நிலை தன் குடும்பத்து நிலை குலபெருமை நாணம் இவற்றை மறந்துவிடும் பேதையர்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 05

“பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகிவிண்ணாகி நிற்கும் வியப்பு” இக்குறள் “பெண் ஆண் அலி என்போர் அன்றி இலாதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு” என பொருள் பட பிரியும். அந்த பரம்பொருள் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் அல்லாத திருநங்கை (அலியும்) அல்ல அது பிரபஞ்சம் முழுக்க பரந்து வியாபித்திருக்கும் பெரும் சக்தி என்பது பொருள் ஆம், பரம்பொருள் எனும் தெய்வ சக்தி உருவமில்லாதது ஆண் பெண் அலிதன்மை என எல்லாவற்றையும் தாண்டிய ஒரு சக்தி […]

செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை

தமிழக மதுகொடுமை நிலை முன் எப்பொழுதும் இல்லா வகையில் உச்சத்தை எட்டியிருக்கின்றது, பெண்களுக்கான தனி பார் என அதிரவைத்த தமிழகம் இப்பொழுது பள்ளி மாணவிகள் குடித்து வீழும் காட்சிகளை காண தொடங்கியிருக்கின்றது இது மாபெரும் வீழ்ச்சி, ஒரு உன்னத நாகரீக சமூகம் வீழ்ந்து சரிந்திருப்பதின் கண்ணீர் காட்சி இங்கு எல்லாமே மாறிவிட்டது, வந்தவழி தெரியாமலும் செல்லுமிடம் தெரியாமலும் நடுகாட்டில் திகைத்து நின்று மரங்களில் முட்டிமோதி பள்ளத்தில் விழும் அவலம் தொடர்கின்றது மது என்பது ஒவ்வொரு நாட்டிலும் அதன் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 04″

“தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது” இக்குறள் “தனக்கோர் உருவில்லை தான் எங்குமாகி மனத்தகமாய் நிற்கும் அது” என பிரிந்து பொருள் தரும்அதாவது முக்திநிலை எனும் பெருநிலைக்கு ஒரு உருவமோ வடிவமோ இல்லை அது எங்கும் நிறைந்திருப்பது போல மனதினுள்ளும் நிற்கின்றது, மனதால் அந்த முக்தியினை உணர்ந்து முழுமையான நிறைவை உணரலாம் என்பது குறளின் பொருள்இந்த அதிகாரம் உயர்ந்த ஞானநிலையினை போதிக்கின்றதுமுக்தி என்பது எங்கோ இருப்ப்பது அல்ல, அதற்கு உருவமும் வடிவமும் இடமும் இருப்பதல்ல, […]

நீதிநெறி விளக்கம் : 82

நீதிநெறி விளக்கம் : 82 “கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும்பொற்றொடி நல்லார் நனிநல்லர் – மற்றுத்தம்கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர்யாவர்க்குங் கேடுசூ ழார்” கற்பில்லாத குலமகளிரை விட தன் உடலையும் அதன் இன்பத்தையும் விற்று வாழும் விலைமகளிர் மிகவும் உயர்ந்தவர்கள், கற்பில்லா குலமகள் தன் கணவன் சுற்றம் என எல்லோரையும் ஏமாற்றுகின்றாள் இன்னும் அவளால் பெரும் அவமானமும் வரலாம். ஆனால் விலைமகள் உடலை விற்பவளாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மையாக இருக்கின்றாள் அதனால் அவளே சிறந்தவள் என்பது பொருள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications