ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 03
“உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்கருவேது மில்லை தனக்கு” இக்குறள் “உருவங்கள் எல்லாம் அறுத்து உருமாற்றில் கருவேதும் இல்லை தனக்கு” என பிரிந்து பொருள் தரும். இங்கு உருவங்கள் என்பது உலக மாய மயக்கங்களுக்கு காரணமான விஷயங்களை சொல்வது இந்த மாய மயக்கங்களுக்கு ஐம்புலன்களே காரணம் என்றாலும் மனம், சித்தம்,புத்தி, அகங்காரம் எனும் அந்த நான்கு விஷயங்களுமே மூலகாரணம் இந்த நான்கு உருவங்கள் எனப்படும் மூல சிந்தனைகளைகளை மாற்றி இந்த நான்கிலும் சிவனை நிறுத்தி, மனமும் சித்தமும் புத்தியும் […]