பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78 “கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்களவொன்றோ வேனையவுஞ் செய்வார் – பழியோடுபாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்காமங் கதுவப்பட் டார்” காமவயபட்டவர்கள் என்னென்ன பாதகம் செய்வார்கள் என்பதை இந்த பாடலில் சொல்கின்றார் குமரகுருபரர் காமகொடும்நோய் என்பது தான் பாதித்த ஒருவனை அடியோடு மாற்றும், அது கற்றவர் கல்லாதவர் என எல்லோரையும் அவரவர் தகுதிக்கு கீழாக இறக்கி நாயினும் கீழாக மாற்றும், குலம் குணம் செல்வம் புகழ் மரியாதை என எல்லாம் அழிக்கும் அப்படிபட்ட காமம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 10

“ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டுவாசமலர் நாற்றம்போல் வந்து” இக்குறள் “ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து” என பொருள் தரும் அதாவது மலரின் உள்ளே வாசம் உள்ளது போல ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு என்பது பொருள். மலரின் மணம் இயல்பானது, ஆனால் அதை எல்லா உயிர்களும் உணர்ந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தேனிக்கள் அந்த மணத்தை தேடி சென்று தேனை எடுக்கின்றன, பக்தியுள்ளோர் அதை கொய்து பகவானுக்கு படைப்பார்கள் அப்படி […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77 “கருமஞ் சிதையாமே கல்வி கெடாமேதருமமுந் தாழ்வு படாமே – பெரிதுந்தம்இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்நன்னலந் துய்த்த னலம்” தன் கடமை தவறாமல், தன் பெருமைக்கும் அறிவுக்கும், சிறிய மாசும் நேராமல் தன் அறநெறியில் வழுவாமல் தன் உடல் நலமும் கெடாமல் தன் அழகிய இளம்கொம்பு போன்ற மனைவியுடன் இன்பம் துய்ப்பது அறிவுடையார் செயல் ஒருவன் தன் மனைவியுடன் எவ்வளவு இன்பமான வாழ்வையும் வாழலாம் ஆனால் அறிவுடையவர்கள் அந்த இன்ப வாழ்வு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 09

“நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்அனைத்துயிர்க்குந் தானா மவன்”இக்குறள் “ நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்(ற்)மலனாய் நிற்கும் அனைத்துயிருக்கும் தானாம் அவன்” என பிரிந்து பொருள் தரும் தன்னை நினைப்பவர் நெஞ்சத்துள் குற்றமற்ற பரிசுத்தமாய் (நிற்மலமாய்) நிற்பவன் சிவன், அந்த சிவன் அனைத்து உயிருக்கும் உரியவன் என பொருள் எல்லா உயிர்களிலும் சிவன் இருந்தாலும் தன்னை யார் நினைத்து தவமிருப்பார்களோ தன்னை தேடுவார்களோ அவர்கள் நெஞ்சில் குற்றமில்லாமல் மும்மலம் களைந்து பரிசுத்தமாய் வீற்றிருப்பான்சிவன் குற்றமற்றவன் , மும்மலம் எனும் மூன்று […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 76

“பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்அறனன்றே யாயினு மாக – சிறுவரையும்நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றேமெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்” இன்னொருவன் மனைவியின் உறவுக்காக அவள் வீட்டு வாசலில் காத்திருப்பது அறம் ஆகாது, அவள் தரும் இன்பம் நல்ல இன்பமாக தோன்றினாலும் அது பலன் தராது, அதனை தொடர்ந்தால் உடலும் உள்ளமும் ஒருவித அச்சமும் பயமும் கொண்ட நோயால் பாதிக்கபடும், அப்படிபட்ட நோயினை தவிர்ப்பது நல்லது என்பது பாடலின் பொருள் ராமாயணம் எனும் இதிகாசமே அடுத்தவர் மனைவியால் நிகழும் தீமைகளை […]

ஓளவை ஞான‌குறள் : 48

ஓளவை ஞான‌குறள் : 48 “மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமேவீட்டுளே நிற்கு மியல்பு” இக்குறள் “மோட்டின் நீர் நாற்றம் முளை முட்டை போலுமே வீட்டுள்ளே நிற்கும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் அதாவது மேட்டுபக்கம் இருந்து நீர் பள்ளத்துக்கு பாய்வது போலவும், மலரின் மணம் தானாக பரவுதல் போலவும், விதையில் இருந்து முளை வெளிவருவது போலவும், முட்டையில் இருந்து குஞ்சு தானாக உருவாகி வெளிவருதல் போலவும் மனதில் சிவம் இயல்பாகவே இருக்கின்றது இன்னும் ஆழமாக நோக்கினால் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75 நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் – முன்னைத்தம்ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்தீய செயினுஞ் சில. நாவில் நல்ல விஷயங்களை தழும்பாக இட்டு கொண்டவர்கள், அதாவது உயர்நெறிகளை மட்டும் போதிக்கும் பெரும் உத்தமர்கள் தங்கள் ஊழ்வினை காரணமாக சில கீழான விஷயங்களை செய்தாலும் மனம் வருந்துவர், அப்படி மனம் வருந்தி தங்கள் ஊழின் வலிமை குறித்து கலங்கி நிற்பர், இத்தகைய நல்லவர்கள் கீழான செயல்களை செய்தாலும் கீழ்மக்கள் என்றாக […]

ஓளவை குறள் : 47

“அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னைநிச்சயமா மீச னிலை” அச்சத்தையும் ஆங்காரத்தையும் மனதுள்ளே அடக்கி தவம் செய்தால் பின்னர் நிச்சயமாக ஈசன் நிலையினை அடையலாம் என்பது குறளின் பொருள் இங்கு அச்சம் என்பது ஆசையின் உச்சத்தை குறிப்பது, அச்சம் என்றால் பயம் என்றொரு பொருள் உண்டென்றாலும் அச்ச, அச்சன் என்பது தலைமை பதவியினை குறிப்பதும் அச்சு என்றால் எல்லாவற்றுக்கும் மையமான பொருளாக இருப்பதையும் குறிக்கும் அச்சம், அச்சு,அச்சன் என்பதெல்லாம் கிட்டதட்ட ஒரே பொருளே. அச்சம் என்றால் பயம் என […]

ஆம் ஆத்மியின் நிஷா சிங்…..

இந்தியாவில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கின்றது, மிகபெரும் கவனமும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கும் அந்த செய்தியினை தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் மவுனமாக்கி ஸ்டாலினாரின் இளமையிலும் நயந்தாராவின் ஹனிமூன் படங்களிலும் மூழ்கி அவ்வப்போது சமூகநீதியிலும் கலந்து வழிந்து கொண்டிருக்கின்றன‌ அந்த செய்தி உண்மையில் கடுமையானது சில நாட்களகாவே இந்தியாவில் சர்ச்சையான விஷயம் இரண்டு, முதலாவது கல்கத்தாவில் வங்க அமைச்சர் தன் காதலி மற்றும் அந்த காதலுக்கு அவசியமான பெரும் பணத்தோடு சிக்கியது, இரண்டாவது டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74 “தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும்தீயன தீயனவே வேறல்ல – தீயனநல்லன வாகாவா நாவின் புறநக்கிக்கொல்லுங் கவயமாப் போல” தீய செயல்களை செய்வாரின் செல்வம் பெரிதாக பெருகினும் தீமை தீமையே, அதனால் பெற்ற செல்வமும் தீயதே ஆகும், தீயது ஒரு காலமும் நல்லது ஆகாது கவயம் எனும் காட்டுபசு பார்ப்பதற்கு பசுபோல இருந்தாலும் அது நாவால் நக்கினாலே உயிர்கள் இறந்துவிடும், அப்படிபட்ட விஷம் போன்றது தீயவழியில் சேர்க்கபடும் பொருள் என்பது பாடலின் பொருள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications