பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 06

“வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமேஒத்துளே நிற்கு முணர்வு” மிக சிறிய விதையில் பெரும் செடியும் மரமும் உள்ளே அடங்கி இருக்கின்றது ஆனால் அது சரியான மண்ணும் நீரும் காற்றும் கிடைககும் வரை முளைத்து வளராது அப்படியே மனதில் சிவம் இருக்கின்றது, அது உரிய பயிற்சியும் யோகமும் தவமும் செய்தால் சிவம் விஸ்வரூபமாக வளர்ந்து வியாபிக்கும் மிக சிறிய ஆல விதையில் பெரும் மரம் இருப்பது போல, சிவம் மனதில் அடங்கியிருக்கின்றது, நீரும் மண்ணும் விதையினை முளைக செய்வது […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 72

“பகையின்று பல்லார் பழியெடுத் தோதிநகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்றுமெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற்கைவிதிர்த் தஞ்சப் படும்” எந்த காரணமும் பகையும் இல்லாமல் அடுத்தவரின் பழிகளை குற்றங்களை தவறுகளை மட்டும் சொல்லி நகைத்து திரிபவனால் எந்த பயனுமில்லை, அவன் அடுத்தவரின் வலியினை கண்டு மகிழ அவர்களை அடிக்கும் தன்மையினை கொண்டவன், அப்படிபட்டவனை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி வைத்தல் வேண்டும் இல்லையேல் அவனால் கலகம் ஏற்படும் என்பது பாடலின் பொருள் அடுத்தவரையே நகைத்து திரிபவனால் கலகம் உண்டாகும், அவனை ஆதரித்தால் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 04

“பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்குமழுத்தினா லீச னிலை” இக்குறள் “பழுத்து இனிரதம் போல் பரந்தெங்கும் நிற்கும் அழுதினால் ஈசநிலை” பழுத்த பழத்தை பிழிந்தால் இனிய சாறு கிடைப்பது போல கனிந்த மனதை பக்தி யோகத்தால் பிழிந்தால் ஞானசாறு ஊறும் அங்கு ஈசன் நிலையினை உணரலாம் என்பது குறளின் பொருள் கனிந்த மனம் என்பது பக்தி நிரம்பிய மனம், இறைபக்தியில் கனிந்த பக்குவபட்ட நிலையில் இருக்கும் மனதில் ஈசன் நிலைகொள்வார் என்பது ஒளவையார் கொடுக்கும் போதனை

விநாயகருக்கும் தமிழகத்துக்குமான

தமிழக இந்துக்களை குழப்பி அவன் இந்து அல்ல இந்தியன் அல்ல, அவன் மதமோ வழிபாடோ அற்ற ஒரு மடையன் என சொல்லவிரும்புவது சிலரின் வாழ்வியல் நோக்கம், 18ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் சாதி மோதல் இல்லை, பிராமண துவேஷம் இல்லை தமிழருக்கு தீபாவளி கிடையாது, தமிழருக்கு கோகுலாஷ்ட்டமி கிடையாது, ராமநவமி கிடையாது என சொல்லும் கும்பலெல்லாம் இல்லை இவையெல்லாம் பிரிட்டிஷ் கிறிஸ்துவ மிஷனரிகாலத்தில் உருவானவை வெல்லமுடியா யானையினை பட்டினிபோட்டு பிடிக்கவேண்டும் என இந்துமத அழிவுக்காக இட்டுபட்ட கதைகள் இவை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 03

“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்இரும்புண்ட நீரு மியல்பு” இக்குறள் “கரும்பினில் கட்டியும் காய்பாலில் நெய்யும் இருண்ட நீரும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் கரும்புக்குள்தான் கட்டி வெல்லம் ஒளிந்திருக்கின்றது, ஆனால் அது கரும்போடு விளையாது. கரும்பை பிழிந்து சாறு எடுத்து அதனை காய்ச்சினால் கட்டி வெல்லம் கிடைக்கும் பாலுக்குள் நெய் உண்டு, ஆனால் பாலோடு கறக்கமுடியாது. பாலை பக்குவபடுத்தி கடைந்து எடுத்தால் நெய் கிடைக்கும் அப்படியே இரும்பு கடினமானது ஆனால் அதை வெப்பத்தில் உருக்கும் பொழுது […]

அமெரிக்காவில் அய்யா ராம்சாமி ….

அமெரிக்கா எப்பொழுதுமே இனவெறி கொண்ட நாடு, பொதுவாக ஐரோப்பியருக்கு தாங்களே உயர்ந்தவர்கள் எனும் மேட்டிமை மனம் மனதால் உண்டு, கிரேக்கருக்கும் ரோமருக்கும் இருந்த அந்த உயர்ந்த மனப்பான்மை அவர்களுக்கும் உண்டு, ஹிட்லர் கூட அப்படித்தான் உருவாகியிருந்தான் இதனால் ஐரோப்பியரை தவிர எல்லோரையும் தாழ்வாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தும் தன்மை அவர்கள் ரத்தத்திலே உண்டு, என்னதான் இயேசுவின் அன்பு சமதர்மம் என பேசினாலும் அந்த உயர்ந்த மனப்பான்மை வெறியினை மாற்றவே மாட்டார்கள் அது அவர்கள் உலகெல்லாம் ஆளும்பொழுது தெரிந்தது, […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 02

“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமேநூலின்க ணீச னுழைந்து” இக்குறள் “பாலின்கள் நெய் போற் பர்ந்தெங்கும் நிற்குமே நூலின் கண் ஈசன் நுழைந்து” என பிரிந்து பொருள் தரும் பாலுக்குள் நெய் இருப்பது போல எல்லா இடத்திலும் சிவன் நிறைந்து பரவி இடையேளியே இல்லாமல் தொடர்ந்து (நூலாக பிணைந்து) வியாபித்திருக்கின்றார் என்பது பொருள் சிவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றார், நம் உடலிலும் இருக்கின்றார் ஆனால் பாலுக்குள் நெய் போல மறைந்திருக்கின்றார், பாலை பக்குவபடுத்தி தயிராக்கி கடைந்தால் நெய் வருவதை […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 70

“செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார்நயத்தகு நாகரிக மென்னாம் – செயிர்த்துரைப்பின்நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல்எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று” தன்னிடம் அடைக்கலமாகி உதவி கேட்டு வருபவனிடம் தன்னால் முடியாத ஒன்றை முடியும் என சொல்லி அதாவது இரக்கம் கொண்டு தன்னை நல்லவன் என காட்ட‌ அவன் கோரிக்கையினை ஏற்று ஆனால் காரியத்தை முடிக்காமல் இழுப்பது எப்படியானது என்றால் ஒருவன் மனம் நோகாமல் இருக்க அவன் தலையினை வெட்டுவதற்கு சமம் ஒருவனுக்கு உதவ முடியவில்லை என்றால் முடியாது என முதலிலே […]

அபிராமி அந்தாதி 48

“சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிபடரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே” பட்டர் தன் முதல் வரியில் “சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்” என பாடி தொடங்குகின்றார் அதாவது “ஒளிவிடும் (சுடரும்) கலைமதி (பிறை நிலா) ஒட்டி நிற்கும் (ஒன்றும்) சடைமுடி குன்று மே;ல்” என சொல்கின்றார், மலையின் மேல் நிலா இருப்பதையும், மலையின் உச்சியில் இருந்து அருவிகள் நீண்டு விழுவதையும் […]

ஆச்சார கோவை : 43

ஆச்சார கோவை : 43 “உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்திமிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள்அட்டமியும் ஏனைப் பிறந்த நாள் இவ் அனைத்தும்ஒட்டார் உடன் உறைவின்கண்” ஆச்சாரகோவை கணவன் மனைவியோடு கூடும் காலத்துக்கும் சில ஆச்சாரங்களை சொன்னது, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல காரணங்களுக்காக சில பொழுதுகளில் சில நாட்களில் தாம்பத்யம் கூடாது என்றது அதற்கு குழந்தைபேறும் இன்னும் சில காரணங்களும் வலுவானவை, குறிப்பிட்ட நாட்களில் குழந்தை உருவானால் அது ஆரோக்கியம் குன்றியதாக இருக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications