பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் சிரிப்பு பெருகுது முகத்தினிலே..

இந்திய தமிழகத்தின் அரசியல்வாதிகளை நினைத்தால் இதுவரை உலகில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும், காமெடி நாடக ஆசிரியர்களும் பிச்சைவாங்க வேண்டும் போலிருக்கின்றது அவ்வளவு வகைவகையான காமெடிகளை செய்கின்றார்கள் முதல்வர் ஸ்டாலினின் காமெடி தனி ரகம், அவரின் தலை அலங்காரம் முதல் சூட்டிங்க் குழறுபடி இன்னும் என்னென்ன காமெடி அவரால் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்கின்றார் அதை சிரிக்காமல் செய்வதுதான் அவரின் பிரத்யோக ஸ்டைல், எல்லா காமெடியிலும் மக்களை சிரிக்க வைத்துவிட்டு மோடிமுன் மட்டும் அவர் சிரிப்பதுதான் காமெடியின் ஹைலைட் […]

சீன கப்பல்

சீன கப்பல் இலங்கைக்கு வருவது பற்றி இலங்கை அரசும் சீன அரசும் விளக்கம் அளித்துள்ள நிலையில் இந்தியா தன் கவலையினை வெளிப்டுதும் சம்பிரதாயத்தை செய்திருக்கின்றது உண்மையில் அக்கப்பல் ஒரு ஆராய்ச்சி கப்பல் என அடையாளபடுத்தட்ட உளவு கப்பல் , பெரிய பெரிய வட்ட ஆண்டனாக்களுடன் வலம் வரும் அக்கப்பல் சீன செயற்கைகோள் நகர்வு இதர தகவல் தொடர்புகளை சரிபார்ப்பதற்காக வரும் கப்பல் என சீன தரப்பில் சொல்லபட்டாலும் அதனால் சுமார் 700 கிமீ தூரம் வரை உளவுபார்க்கமுடியும் […]

சீன அரசு ஒரு விஷயத்தில்

சீன அரசு ஒரு விஷயத்தில் வசமாக சிக்கிவிட்டது அது சிக்கிவிட்டதெல்லாம் அமெரிக்காவிடமோ ரஷ்யாவிடமோ அல்ல மாறாக தன் சொந்த மக்களிடையே சிக்கிவிட்டதுதான் சோகம் சீனாவின் பொருளாதாரம் ஆடிகிடக்கும் நேரம், அந்நாட்டில் பெரும் தொழில்முடக்கம் டிரம்ப் கால் தடைகள் கொரோனா கால குழப்பம் அதுபோல சீன அரசின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழறுபடி என பல சிக்கல்களில் மக்களின் கவனத்தை திருப்ப சில அதிரடி விவகாரங்களை சீனா எழுப்பும் அதில் ஒன்றுதான் தைவான் தைவானுக்கும் சீனாவுக்கும் முரண்பாடு என்னவென்றால் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 52

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்விஅருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்கருமமே கண்ணாயி னார்” இங்கு கர்மம் என்பது அவரவர் மனதில் உதிக்கும் திட்டமாயிருக்கின்றது, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையான சிந்தனையினை கொண்டிருக்கின்றான், கர்மா அந்த சிந்தனையின் வழியாகத்தான் வாழ்வை இழுத்து செல்கின்றது பாடலின் பொருள் என்னவென்றால், தன் கர்மம் இதுவென ஒருவன் உணர்ந்து முடிவெடுத்தால் அவன் உடல் நோவு வருத்தம் பாரான், பசியினை பொறுத்துகொள்வான், எந்த இடையூறு வந்தாலும் தாங்குவான், இதை முடிக்கமுடியுமா […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 04

“எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்தபல்லோர்க்கு முண்டோ பவம்” இக்குறள் “எல்லார்க்கும் ஒன்றே சிவமாவது என்று உணர்ந்த பல்லோர்க்கு உண்டோ பவம்” என பிரிந்து பொருள் தரும் “பவம்” என்றால் பிறப்பு அல்லது உலக வாழ்க்கை என பொருள் அதாவது எல்லா உயிர்லிலும் சிவமே உள்ளது, எல்லா உயிரும் அதன் இயக்கமும் சிவ வடிவம் என்ற உண்மையினை உணர்ந்தோருக்கு பிறப்போ உலக வாழ்க்கையோ அடுத்து இல்லை அவர்களுக்கு பிறவி இல்லா முக்தி நிலை கிட்டும் என்பது பாடலின் பொருள் […]

இந்திய சுதந்திர வரலாறு : 04

கலீபக்களின் பெரும்படை சிந்துபகுதியினை கைபற்றி மேற்கொண்டு நகர்ந்தபொழுது மேவாரில் இருந்து கிளம்பி சென்ற பாப்பா ராவல் பெரும் போரை நடத்தினான் அந்த போல் பொதுபுயுகத்துக்கு பின்னரான 738ம் ஆண்டுவாக்கில் நடந்திருக்கலாம், அவரின் பெரும் எதிர்ப்பு கலீபா படையினரை முன்னேறவிடாமல் தடுத்தது பாப்பார் ராவல் கலீபாக்களை அனாசயமாக எதிர்ப்பதை அறிந்த இந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஆதரவளிக்க எதிரிபடைகளை பின்வாங்க வைத்தார் ராவல் ஒரு கட்டத்தில் இந்திய எல்லையில் இருந்தே அவர்களை விரட்டி மேற்கொண்டு அவர்கள் வந்துவிடாமல் இருக்க […]

அல்மான் அல் ஜவஹரி கொல்லபட்ட விதம்

ஆப்கானிஸ்தானில் பின்லேடனின் வலதுகரமும் அல்கய்தாவின் இரண்டாம் தலைவருமான அல்மான் அல் ஜவஹரி கொல்லபட்ட விதம் இதுதான் அவன் பின்லேடனை போல பாகிஸ்தானிலேதான் 20 ஆண்டுகளாக பதுங்கி இருந்தான் ஆனால் பின்லேடனை போல நெருக்கமாக பாகிஸ்தான் ராணுவமுகாம் அருகே தங்கவில்லை மாறாக பழங்குடிகள் மத்தியில் கடும் காடுகளும் மலைகளும் குகைகளும் நிரம்பிய இடத்தில் மறைந்திருக்கின்றான் அமெரிக்கா ஆப்கனை காலிசெய்தபின் அவன் ஆப்கனுக்கு திரும்பியிருக்கின்றான், காரணம் பாகிஸ்தானை எக்காலமும் நம்பமுடியாது என சகலகலா வில்லனுக்கு தெரியும் தாலிபன்களின் பலமான ஹக்கானி […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 51

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 51 “கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்மூல மறிந்து விளைவறிந்து – மேலுந்தாம்சூழ்வன் சூழ்ந்து துணைமை வலிதெரிந்தாள்வினை யாளப் படும்” ஒரு செயலில் இறங்கும் பொழுது காலம் அறிந்து, செய்யும் இடம் அறிந்து, அதனால் ஏற்படும் விளைவு அறிந்து, அதனை எப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டு, அதை செய்வோரின் வலிமை அறிந்து இறங்க வேண்டும் இந்த பாடலின் பொருளைத்தான் தன் குறளில் 491ம் அதிகாரமாக இடனறிதல் என பாடிவைத்தான் வள்ளுவன்.

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 02

“ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்ஒருவனே பல்குணமு மாம்” இக்குறள் “ஒருவர்க்கு ஒருவனே ஆகும் உயிர்க்கெல்லாம் ஒருவனே பல் குணமுமாம்” என பிரிந்து பொருள் தரும் இறைவன் எனும் பரம்பொருளான சிவனுக்கு ஈடு அவனே, அவன் ஒப்பற்றவன். அவன் தன்னில் ஒரு குணத்தோடு விளங்குகின்றான் அதே நேரம் ஒவ்வொரு உயிரிலும் ஒவ்வொரு குணத்தோடு விளங்குகின்றான் என்பது பொருள் இவ்வுலகில் எல்லா உயிரும் சிவ வடிவம் சிவனின் தன்மையினை கொண்டிருக்கின்றது எனும் ஞான வரிகளை இங்கு போதிக்கின்றார் ஒளவையார் இந்த […]

விக்டர் பவுட்

உலகில் மிகபெரிய கவனத்தை பெற்றிருக்கும் விஷயம் அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய கைதி விக்டர் பவுட் என்பனை ரஷ்யா விடுதலை செய்ய கோரியது அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் எதிரெதிர் தரப்பின் முக்கிய கைதிகள் சிக்குவார்கள், நேரம் பார்த்து இருவர் லாபத்தினை பொறுத்து பரிமாறவும் செய்வார்கள் இப்பொழுது உக்ரைன் யுத்தமுஸ்தீப்பிலும் ரஷ்யா தங்களிடம் போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய அமெரிக்காவின் விளையாட்டு வீரர்களை விடுதலைசெய்ய முன்வந்து அப்படியே தங்கள் நாட்டு விக்டர் பவுட்டை கோருகின்றது யார் இந்த விக்டர் பவுட் என்றால் சுமார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications