Happy Birthday தங்க மகனே
அன்றொரு நாள் அவர் தந்தையின் நினைவுகளில் மூழ்கியிருந்தார் அப்பா, அவரென்றால் அவருக்கு பாசம் அதிகம்.
“அவரை ரொம்ப பிடிக்குமாப்பா?
ஆமா, நான் கடைசி பையன்லா அதனால ரொம்ப பாசமா இருப்பாரு
அவர் இல்லண்ணதும் எப்படி தாங்கிட்டீங்க?
அவர் இல்லாத உலகத்துல எதுக்கு வாழனும்னுதான் தோணிச்சி, ஆனா உங்க அம்மாவும் அவ கையில நீனும் இருந்தியா, அதனாலதான் இவ்வளவு நாள் இருக்கேன். .”
மகனை நோக்கும் பொழுதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஒலித்துவிட்டே செல்லும்
இன்று அவனுக்கு முதலாம் பிறந்த நாள்
தந்தையினை கையில் தாங்கி வளர்க்கும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை எமக்கு வாய்த்திருக்கின்றது, அவ்வகையில் நாம் அதிர்ஷ்டசாலி.
புனித அந்தோணியார் முதல் எல்லா தெய்வங்களும் அவனை ஆசீர்வதிக்கட்டும்
அவன் தாத்தா வாழாத வாழ்வினையெல்லாம் அவன் வாழட்டும். காலம் அவனுக்கு துணை நிற்கட்டும்
Happy Birthday Alphones Rajan….
“நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை, தாய்மனதை காத்து நிற்பேன் தங்க மகனே..”
