NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும்
NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும் : அமித்ஷா
நிச்சயம் இது நாட்டில் அவசியம் செய்ய வேண்டிய பணி, ஒரு நாடு நாடாக இயங்க இது மகா அவசியம். மாபெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது என்றோ செய்ய வேண்டிய பணி
இது அசாமையும், வங்கத்தையும் குறிவைக்கும் செயல் என எவனாவது சொன்னால் அதைவிட பைத்தியகாரதனம் இருக்க முடியாது
காஷ்மீரில் எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு ஊடுருவல் கோஷ்டிகள் இருக்கின்றன என்பது தெரியாது, பீகார் பக்கம் நேபாளிகள் போக்கு வரத்து உண்டு
தெற்கே தமிழ்நாட்டில் ஈழ அகதிகளின் முறையான கணக்கு இல்லை, திருப்பூரும் சென்னையும் சர்வதேச சமத்துவபுரமாக எல்லா நாட்டு மக்களாலும் நிரம்பி கிடக்கின்றது
யார் இந்தியர்? யார் அந்நிய நாட்டவர் என தெரியாத அளவு குழம்பி கிடக்கின்றது நிலை
சில ஆப்ரிக்கர்கள் தமிழர் போலவே திரிகின்றனர், வங்கதேசத்துக்காரன் வங்கமாநிலத்தவன் போல் அலைகின்றான், பர்மாவின் ரொஹிங்கியா அகதிகளும் அவ்வாறே
நேபாளிகளும் இன்னும் பலரும் வடகிழக்கு மாநிலமக்கள் போலவே வருகின்றனர், இதெல்லாம் இங்கு பாதுகாப்பு உட்பட பல மிரட்டல்களை ஏற்படுத்தும்
இந்நிலையில் மகா அவசியமான பணியினை மத்திய அரசு முன்னெடுக்கின்றது, இது பாதுகாப்பு, மக்கள் நல திட்டம் உட்பட எல்லா விஷயங்களுக்கும் மகா மகா அவசியமானது
விரைவில் கணக்கெடுப்பு முடிக்கபட்டு உரிய ஆவணமில்லாதோரை அகதிகளாக்கி ஐ.நா அகதிகள் குழு மூலமாக பிரச்சினையினை தீர்க்கவேண்டும்