இந்திய தளபதி நரவானேவின் பதவிகாலம் முடிந்ததை அடுத்து அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே அறிவிக்கபட்டுள்ளார் இவர் மராத்தியர் பிராமணர் யுத்தத்துக்கு செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அபத்தம், இந்த தளபதி மராட்டிய பிராமண வம்சத்தில் வந்தவர் அடிப்படையில் மனோவியல், பொறியியல் என பல படிப்புகளை படித்த இவர் லடாக் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்தியா சமீபகாலமாக செய்திருக்கும் எல்லா கட்டுமானங்களுக்கும் அடிப்படையாக இருந்தவர், வடகிழக்கு சீன எல்லையின் காவலை உறுதி செய்தவர் அந்த அடிப்படையில் இவருக்கு பெரும் பொறுப்பு வழங்கபட்டிருக்கின்றது, […]
Happy Birthday Ajithkumar
முத்தமிழின் ஒரு வடிவம் நாடகம், அந்த நாடகதமிழ் இறைவனை மட்டும் பாடுவதாக இருந்தது ராமாயணம், மகாபாரதம், வள்ளிதிருமணம் என இந்து பக்தி காட்சிகளின் நாடகங்கள் மட்டுமே இங்கு கடந்த நூற்றாண்டுவரை வந்தது பின் அவை திரைக்கும் வந்தன, தொடக்க கால தமிழ்சினிமா எல்லாமே இந்து பக்தி படங்களே 1950க்கு பின் திராவிட கும்பல்களும், இந்து கலாச்சார எதிர்ப்பு கும்பல்களும் திரையுலகில் நுழைந்தன தமிழகத்தில் சினிமா மூலம் குழப்பம் விளைவிக்கும் கொடுமையினை அவைதான் ஏற்படுத்தின, ஆட்சியினையும் பிடித்தன ஆனால் […]
அண்ணாமலையினை இந்தியா அனுப்பியிருப்பது
தமிழக அரசு முன்பு உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டியது, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது உக்ரைனில் தனியே சாதித்தவர்கள் இங்கு அதுவும் வெறும் 39 மைல் தொலைவுக்கு ஏன் முணங்குகின்றார்கள் என்றால் அதுதான் திராவிட மாடல் இலங்கை விவகாகரத்தில் அதாவது சிக்கல்கள் தொடங்கிய 1980களுக்கு பின் இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது தமிழக பிரதிநிதிகள் அதிகம் சென்றதில்லை (1984ல் அன்றைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ்தான் அங்கீகாரமான […]
தொழிலாளர் நலத்தை பற்றி யோசித்ததிலும் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்ததிலும் இந்துமதம் உன்னதமான இடத்தில் இருந்ததுகண்ணனை அது ஆடுமேய்ப்பனவாக காட்டிற்று, பலராம அவதாரத்தை உழவனாக காட்டிற்று தொழிலாளரின் சிரமம் புரியவும் தொழிலின் அருமை சொல்லவும் சிவனே விறகுவெட்டியாகவும், மீனவணாகவும் இன்னும் பல தொழில்கள் செய்பவனாகவும் அது திருவிளையாடலில் சொல்லிற்றுதொழிலாளரை வல்லான் அடித்தால் அவனை இறைவன் அடிப்பான் என்பதை சொல்ல ஒரு நாடகமும் நடத்திற்று அன்று அந்த வைகை மதுரையில் கரைபுரண்டு ஓடிகொண்டிருந்தது, ஆடிமாதத்தில் அந்நதி பிரவாகமாய் பொங்குவது வழமைஅந்த […]
ஸ்டான்லி ராஜனை தேடிகொண்டிருப்போர்
நம்முடைய் பதிவுகள் இந்த முகநூல் பக்கமும் பதியபடும், இந்த பக்கத்தையும் உங்கள் கவனத்தில் எடுத்துகொள்ளும் படி கேட்டுகொள்கின்றோம் உங்களின் நட்பு பட்டியலில் இருப்போர் மற்றும் ஸ்டான்லி ராஜனை தேடிகொண்டிருப்போர் இந்த கணக்கில் இணையலாம் நன்றி https://web.facebook.com/profile.php?id=100080698932737
அபிராமி அந்தாதி : 34
“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார் அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் […]
மயில் விருத்தம் : 01
மயில் விருத்தம் 01 மயில் விருத்தம் பாடலை காணுமுன் அதன் தத்துவ விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும், இந்துக்களின் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு வாகனம் உண்டு அதில் பெரும் தத்துவமும் உண்டு. விநாயகரின் எலி யோகதத்துவம் போல முருகனின் மயிலும் அழகான ஆத்ம தத்துவம் மயில் முருகனை சுமந்தது என்பது ஆத்மா முருகனை மனதில் சுமக்க வேண்டும் என்பதை குறிப்பது பறவைகளில் அழகானதும் ஈர்ப்புமிக்கதுமான மயில் , உயிர்களில் சிறந்ததான மானிடரின் ஆன்மாவுக்கு குறியீடானது. விரிந்த தாமரையினை […]
திருச்சி திருவரங்கத்தில் தேர்
திருச்சி திருவரங்கத்தில் தேர் திருவிழா மிக மிக விமரிசையாக கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது எத்தனையோ கொடுங்காலங்களை தாண்டி ஆச்சரியமாக எழும்பி வந்த அந்த திருவாலயத்தில் ஈராண்டுக்கு பின் தேர் கம்பீரமாக ஓடுகின்றது, லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பிக்கின்றார்கள் மோடியினை சில கோஷ்டிகள் பார்ப்பதை போல ஒரு பார்வையினை தனியே இருந்து பார்த்து கொண்டிருக்கின்றது அங்கிருக்கும் ஈரோட்டு ராம்சாமி சிலை நாத்திகர் ராம்சாமிக்கு இதைவிட பெரும் தண்டனையினை யாரும் கொடுத்துவிட முடியாது..
கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ்
ஒலிபெருக்கி பிரச்சினையின விட பெரியது சில கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ் சத்தமும் ஆர்ப்பாட்டமும் அக்காலத்தில் காடுகளில் அரசர்கள் மேள முரசுகளுடன் வேட்டைக்கு செல்லுதல் போல அப்படி ஒரு சத்தம் அதற்கும் சேர்ந்தார்போல் ஒரு முடிவு கட்டினால் கோடான கோடி மக்கள் நிம்மதி அடைவார்கள்