பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிடத்தின் மிக பெரிய உச்ச சாதனை இது

கார்பரேட்டுக்கள், தொழிலதிபர்கள்.. விவசாயிக்கு துரோகம் என சீறுமுன் சில விஷயங்களை அமைதியாக நோக்கலாம் விவசாயம் ஒன்றால் தேசம் வாழமுடியாது என்பது இக்காலத்தின் நியதி, எல்லா நாடுகளும் அதைத்தான் சொல்கின்றன, தொழில் வளம் மிக அவசியம் இப்போது உலக யதார்த்தம் இது, தொழில்வளம் ஒன்றில் வரும் வருமானத்திலே விவசாயத்தை காத்தல் வேண்டும் அல்லது முடியும் இந்தியாவில் இதை தொடங்கி வைத்தவன் வெள்ளையன் எனினும் சுதந்திர் இந்தியாவில் அடித்தளமிட்டவர் நேரு காரணம் வரி, அரசுக்கு வேண்டிய வரி, வருமானம் வெள்ளையன் […]

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன்.

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன், சிலர் முழுநேர எழுத்தாளர்கள் அது கடலில் மழை பெய்வதற்கு சமம், பாக்கெட் நாவல்கள் போன்றவை அந்த ரகம், ரயிலில் வரும் குடிநீர் பாட்டில் போன்றவை அவை அவர்களால் சமூகத்துக்கு ஆகபோவது ஒன்றுமில்லை, எழுத்து என்பது வரலாற்றை, சமூகத்தை,அரசியலை அல்லது விஞ்ஞானம் போன்ற பயனுள்ள விஷயத்தை சொல்லவேண்டும், குறைந்தபட்சம் சிந்திக்க அல்லது சிரிக்கவாவது வைக்க வேண்டும், அப்படி எழுதியவர்களே வரலாற்றில் நின்றார்கள் அரசியலுக்காக எழுதாமல் எழுத்தால் தனித்து நின்றவர் சிலர் அதில் சுஜாதாவும் , […]

உலகுக்கே வழிகாட்டுகின்றது இந்தியா.

உலகம் ஒரு விஷயத்தில் இந்தியாவினை ஆச்சரியமாக பார்க்கின்றது, விஷயம் அவ்வளவு தீர்க்கமானது ஆம், உலகின் மிகபெரிய ரயில்வே என அழைக்கபடும் இந்திய ரயில்வே கொரோனா காரணமாக சேவையினை நிறுத்தியது நமக்கு தெரியும், அதைவிட மகா முக்கிய காரியம் ஒன்றை செய்கின்றது ரயில் பெட்டிகளை மகா அவசரமாக கொரோனா மருத்துவ பெட்டிகளாக மாற்றுகின்றது, ஒரு பெட்டிக்கு 16 பேர் தங்கலாம், 20 ஆயிரம் பெட்டிகள் தயார் ஆக இந்தியாவில் 3.2 லட்சம் பேர் ரயிலிலே சிகிச்சை பெறலாம் இதில் […]

பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான்.

அந்த யூதாஸை துரோகி என சொல்வதை எல்லாம் நாம் ஆதரிப்பதில்லை, சீசரை கொன்ற புரூட்டஸுக்கும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனுக்கும் உள்நோக்கம் கெடுதலாய் இருந்தது, தெரிந்தே கொன்றார்கள் ஆனால் யூதாஸ் அப்பாவி, தெரியாமல் சிக்கி கொண்டவன், அந்த வலி காரணமாகவே அவன் செத்தான். தான் ஏமாற்றபட்டதாலே தற்கொலை செய்தான் இல்லையேல் ஒரு வட்டிகடை முதலாளியாக வாழ்ந்திருப்பான் இயேசுவின் காலம் அவர்கள் ரோமருக்கு அடிமையாய் இருந்த காலம், இன்று பாலஸ்தீனில் இருக்கும் போராளி குழுக்கள் போல அன்றும் ஏராளமான […]

நாகரீகம் எனும் பெயரில் எவ்வளவு விஷயங்களை தொலைத்துவிட்டோம்.

கிறிஸ்துவத்தை ஏற்ற முதல் ரோமை மன்னன் கான்ஸ்டான்டைன் இது 4ம் நூற்றாண்டு வாக்கில் நடந்தது, அதிலிருந்து ஐரோப்பாவில் மிக விமரிசையாக அனுஷ்டிக்க பட்ட நாள் பெரிய வியாழன் உலகபோர் காலத்திலும் பாதிக்கபடாத அந்த பெரிய வியாழன் இப்பொழுது கடுமையாக பாதிக்கபட்டு வாடிகனில் கூட வழக்கமான அனுசரிப்பு இல்லை இன்று அந்த‌ பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். அந்த யூத பண்டிகையின் கலாச்சாரம் அது, அதை […]

காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்.

இப்பொழுதெல்லாம் காலையிலே வாசலுக்கு வந்துவிடுகின்றது காகங்கள், இரு வாரங்களில் அதுவும் நமக்கு நட்பாகிவிட்டது நானும் அதுவும் ஒரே நிறம் என்பதும் காரணமாக இருக்கலாம்.. காகம் மானிட வாழ்வில் அக்காலம் தொட்டே வரும் பறவை, சாணக்கியன் வள்ளுவன் என எல்லா மேதைகளும் கவனித்த பறவை அது சாணக்கியன் சொல்வான் “பறவைகளில் தந்திர சாலி காகம்மிருகக்ங்களில் தந்திர சாலி நரிபெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி (இதை வேலைக்காரி என்றும் சொல்லலாம்)” அது தந்திரசாலி மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. பறவைகளில் […]

டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

பிரேசிலில் கொரோனா பரவுகின்றது, கொரோனாவுக்கென மருந்தே இல்லை. டெங்கி காய்சல போன்றவற்றுக்கும் மருந்தே இல்லை இந்த டெங்கி காய்ச்சலை பாராசிட்டமால் கொடுத்து கொடுத்து குறைப்பது போல, கொரோனாவுக்கு எய்ட்ஸ் மருந்து மற்றும் மலேரியாவுக்கான மருந்தை கொடுத்து குணபடுத்த முயற்சிக்கின்றார்கள் இதில் ஓரளவு பலன் உண்டு இந்த மலேரியாவுக்கான மருந்தில் ஒன்றுதான் ஹைட்ரோகுளோரோயின், அமெரிக்கா கேட்டதும் இதுதான் இந்தியா இலங்கைக்கு கொடுத்ததும் இதுதான், இப்பொழுது பிரேசில் கேட்பதும் இதுதான் இதில் பிரேசில் அதிபருக்கு அறிவு இருந்திருக்கின்றது, மகா கில்லாடியும் […]

தனித்திருப்போம், விழித்திருப்போம்!

கோரோனா நிலவரத்தை பார்க்கும் முன் சில முக்கிய உலகளாவிய கொரோனா செய்திகளை பார்க்கலாம் இந்த கொரோனா பல வகை வடிவங்களை எடுக்கின்றது, 14 நாள் தனிமைபடுத்தபட்டு அறிகுறிகள் இல்லையென்றால் கொரோனா இல்லை என்பதெல்லாம் முழு முடிவு அல்ல, அது 21 நாளுக்கு மேலும் அமைதியாக இருந்துவிட்டு சட்டென வேலையினை காட்டுகின்றது ஒரு அறிகுறியும் இன்றி ஒரே நாளில் சட்டென அது உக்கிரமாவதும், வந்தவர்களுக்கே திரும்ப வருவதுமாக அது உலகெல்லாம் மருத்துவர்களை குழப்புகின்றது சீனாவில் அது இரண்டாம் இன்னிங்ஸை […]

நல்ல இந்தியனாக, நல்ல குடிமகனாக, நல்ல வழிகாட்டி நடிகனாக நிற்கும் அஜித் குமார்

நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கணக்கு இருக்கும், அதில் சுயநலமின்றி எதிர்பார்ப்பு இன்றி அள்ளி கொடுப்பவர் வெகுசிலரே சிவகார்த்திகேயன் அதில் குறிப்பிடதக்கவர் சில நடிகர்கள் பின்னணியில் பிரிவினைவாத சக்திகள் இருந்து சிலருக்கு கொடுக்க சொல்லி குழப்பும், சிலருக்கு ரசிகர் மன்ற கணக்கு, சிலருக்கு அரசியல் கணக்கு என ஏக கணக்குகள் இந்நிலையில் கொஞ்சமும் அரசியல் கணக்கோ, ரசிகர் மன்ற அறுவடையோ எதுவுமின்றி உதவியிருப்பவர் அஜித்குமார் மனிதர் பெப்சிக்கு 25 லட்சம், பிரதமர் நிதிக்கு 50 லட்சம், தமிழக […]

தானாக வந்து சிக்கி கொள்வதில் திமுக தலமையினை மிஞ்ச ஆளே இல்லை.

தானாக வந்து சிக்கி கொள்வதில் திமுக தலமையினை மிஞ்ச ஆளே இல்லை, கொஞ்சமும் விஷய ஞானம் இல்லாமல் வந்து தலையினை கொடுப்பதும், ஆப்பசைத்த குரங்காக சிக்கி கொள்வதும், பின் அப்படியே அமுங்கி கிடப்பதும் அவருக்கு விளையாட்டு அந்த விளையாட்டுக்கு அவர் வைத்திருக்கும் பெயர் தமிழருக்கான அரசியல் அப்படிபட்ட திமுக தலைவர் நேற்று குதிக்க ஆரம்பித்துவிட்டார், ஏ மோடி அரசே உபிக்கு ஏன் அதிக நிதி? தமிழனுக்கு ஏன் குறைவு நிதி? எம்பிக்கு ஏன் இல்லை நிதி, என் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications