பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லச்சித் பொர்புக்கான் சிலையினைத் திறந்து வைத்தார் பாரத ப்ரதமர் மோடி

மோடி அசாமில் மொகலாருக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்திய லச்சித் பொர்புக்கான் சிலையினை திறந்துவைத்தார என்பது தேசாபிமானிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி லச்சித் பார்புக்கானின் வரலாறு அசாத்தியமான ஒன்று இவன் வரலாறு எங்கே தொடங்கி பெரும் போராயிற்று என்றால் வழக்கம்போல் எல்லா வம்பையும் இழுத்த அவுரங்கசீப் காலத்தில் இருந்து தொடங்குகின்றது நாம் சிவாஜி தொடரில் இந்த மாவீரன் வரலாற்றை சுருக்கமாக சொல்லியிருந்தோம், சிவாஜி தொடரை நாம் சிவாஜியின் கதையாக மட்டும் சொல்லவில்லை,அக்கால கட்டத்தில் இந்துஸ்தானம் முழுக்க என்ன […]

மகா சிவராத்திரி நாளில் சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், வேறு எதுவும் நினைவில் இல்லை, சிவன் கொடுத்த ஆயுதமுமில்லை. செய்த கடும் தவத்தின் நினைவுமில்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இந்தப் போரும் வெற்றியும் மிகப் பெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள். யுத்தத்தில் துரியனை அடித்துக் கொன்று […]

மகா சிவராத்திரி நாள் தத்துவமும் விரதமும்

இந்த பாரத கண்டத்து சனாதன தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஆன்மீகம், அறிவியல், உளவியல், பிரபஞ்ச தத்துவம், தெய்வீகம் எல்லாம் கலந்த வாழ்வியல் நெறி. ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் பலமாகி உறுதியாகி இறைவனை அடைய பிரபஞ்ச விதிகளுக்குட்பட்ட பல வழிகளைச் சொன்ன மதம் இந்துமதம். அதை வழிபாடு, விழா, கொண்டாட்டம், அனுசரிப்பு என பல வகைகளில் தெய்வத்தின் பெயரை முன்னிறுத்திச் சொன்னது. அதில் ஒன்றுதான் மகா சிவராத்திரி நாள். இந்நாளை விழா எனச் சொல்வதை […]

விஜயநாராயணம் சிவாலயம்

நெல்லை மாவட்டத்தில் சிவராத்திரிக்கு செல்லுமிடங்கள் ஏராளம் உண்டு, தாமிரபரணி நதிக்கரை முழுக்க சிவாலயங்கள் உண்டு. நெல்லையப்பர் ஆலயம் முதல் திருப்புடை மருதூர் என ஏகப்பட்ட சிவாலயங்கள் உண்டு, அங்கெல்லாம் நாள் முழுக்க இரவு முழுக்க சென்று வழிபடலாம். நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சிவாலயம் விஜயநாராயணம் சிவாலயம். அந்த ஊர் மகாபாரத்தோடு தொடர்புடையது. அர்ஜூனன் வந்து தவமிருந்து வழிபட்ட இடம் என்பதால் விஜயநாராயணம் என்றாயிற்று. பெருமாளுக்கும் சிவனுக்கும் மிக மிக மூத்த ஆலயங்கள் அங்குதான் உண்டு, அங்கிருக்கும் […]

இன்று மகா சிவராத்திரி, திருமுறைப் பதிகப் பாடல்கள்.

இன்று மகா சிவராத்திரி, ஒவ்வொரு இந்துக்களும் முன்னோர் போதித்த மரபுபடி அதனை கட்டாயம் பின்பற்றுதல் அவசியம். இந்துமதம் மகா சுதந்திரமானது ஆனால் அந்த அதிதீவிர சுதந்திரமேதான் அதன் பல வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று கண்டிப்பும் கட்டுபாடும் இல்லா மதம் காலவோட்டத்தில் தடுமாறும், இந்துமதத்துக்கும் அந்த சோதனை வந்தது ஆனால் அதனை தாங்கிபிடித்த விஷயங்கள் பல உண்டு இந்துமதம் பல்லாயிரம் தூண்களில் நின்றிருக்கும் மண்டபம், லடசகணக்கான வேர்களில் நிற்கும் மதம் அதனால் வழிபாடுகள் அவசியம், அதுவும் கோவில் சென்று வழிபடுதல் […]

பஞ்ச மயானத் தலங்கள் : நாலூர் மயானம் திருமெய்ஞானம் 06 / 06

ஐந்தாம் மயானம் – திருநாலூர் மயானம் கும்பகோணம் குடவாசல் அருகே அமைந்திருக்கும் திருநாலூர் மயானம் எனும் திருதலம்தான் பஞ்ச மயான தலங்களின் கடைசி மயானம் இன்று சிறிய ஆலயமாக அதிகம் அறியபடாத ஆலயமாக இருந்தாலும் அதுதான் தமிழகத்தின் தொன்மை மிக்க ஆலயம் என அறியபடுகின்றது நாலூர் என்பது நான்கு வேதங்களும் வந்து வழிபட்ட இடம், நால்வேதியூர் என்பதே நாலூர் என மாறிவிட்டது, வேதங்கள் வந்து வழிபட்ட ஆலயம் என்பதால் அது மகா மகா தொன்மையானது பலாச மரங்கள் […]

பஞ்ச மயானத் தலங்கள் : திருக்கடவூர் மயானம் 05 / 06

நான்காம் மயானம் – திருக்கடவூர் திருமெய்ஞான ஆலயம் இந்த திருக்கடவூர் மயானம் என்பது அந்த பிரசித்தியான திருகடையூர் அபிராமி ஆலயத்தை அன்மித்திருக்கும் ஆலயம். முன்காலத்தில் இதுதான் திருகடையூரின் அடையாளம். இங்குதான் அந்த பல பிரசித்தியான புராணங்கள் நடந்தன, அந்த அபிராமி அன்னை குடியிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இதற்குப் பிந்தையது. முதல் தலம் இந்த மயான கோவில். குங்குமகலய நாயனார் இந்த ஆலயத்தில் குங்கலிய பூஜை செய்தார் இங்குதான் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என எல்லோரும் வந்து பதிகம் […]

பஞ்ச மயானத் தலங்கள் : காசி மயானம் 04 / 06

மூன்றாம் மயானம் – காசி ஆலயம் வாரனாசி எனும் காசி மாநகரம்தான் இந்துக்களின் மகா புண்ணிய ஷேத்திரம், ஒவ்வொரு இந்துவின் பெரும் கடமையில் முக்கியமான காசியினை தரிசித்தல் என்பது அங்குதான் நிறைவடைகின்றது காசி இன்றி இந்துக்களின் மதம் இல்லை, வழிபாடு இல்லை, தாத்பரியமில்லை, அவர்களின் ஆதி அடையாளமும் நம்பிக்கையும் ஆதாரமுமானது அந்த காசி. இந்துஸ்தானம் அந்த காசி எனும் புள்ளியில்தான் இணைந்தது, இனம் மொழி என பல்வேறு மக்களாய் இருக்குமம் இந்துஸ்தான் இந்துக்களை இந்து எனும் ஒரு […]

பஞ்ச மயானத் தலங்கள் : சீர்காழி மயானம் 03 / 06

இரண்டாம் மயானம் – சட்டநாதர் ஆலயம் தென்னக ஆலயங்களில் மிக மிகப் பழமையான ஆலயம் சீர்காழி, காழி என்றால் மகா உறுதியானது அசைக்கமுடியாது எனும் பொருளில் வரும். அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, சீர்காழி என சொல்லபட்டாலும் ஏகபட்ட புராண சம்பவம், சிவனும் அன்னையும் வந்து நடத்திய நாடகங்கள் என பல நடந்திருப்பதால் அந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு பிரமன் வழிபட்டதால் அது பிரமபுரம். மூங்கில் வடிவில் இறைவன் வந்ததால் அது வேணுபுரம் சூரபத்மனுக்கு அஞ்சி […]

பஞ்ச மயானத் தலங்கள் : கச்சி மயானம் 02 / 06

முதல் மயானத் தலம் – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயானத் தலம். இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications