இதுதான் இந்திய சட்ட திட்டம்
ஆணும் பெண்ணும் தனி அறையில் தங்குவது தவறல்ல : உயர்நீதிமன்றம் ஆனால் விபச்சாரம் சட்டபடி குற்றம் என சொல்வதும் இதே சட்டம்தான் என்பது குறிப்பிடதக்கது ஏதாவது புரிகின்றதா? புரியாது, இதுதான் இந்திய சட்ட திட்டம்.
சுத்தமான இந்து இந்தியன்….
ஆணும் பெண்ணும் தனி அறையில் தங்குவது தவறல்ல : உயர்நீதிமன்றம் ஆனால் விபச்சாரம் சட்டபடி குற்றம் என சொல்வதும் இதே சட்டம்தான் என்பது குறிப்பிடதக்கது ஏதாவது புரிகின்றதா? புரியாது, இதுதான் இந்திய சட்ட திட்டம்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் : கமலஹாசன் பரம்பரை பூசாரிக்கும், பஞ்சத்தில் பூசாரியானவனுக்கும் வித்தியாசம் உண்டு என்பார்கள். திமுக அதிமுக முதல் வகை கமலஹாசன் இரண்டாம் வகை அன்னார் இப்பொழுதெல்லாம் அந்த பூஜகுமாரியுடன் சுற்றிகொண்டிருப்பார், பாராளுமன்ற தேர்தல் என்றால் டார்ச் லைட்டை தூக்கி வந்து டிவி உடைப்பார். ஆக எழும் சந்தேகம் என்ன? பாராளுமன்றத்தில் திமுக சார்பு ஊடகங்களில் இவருக்கு விளம்பரம் கனிசமாக வந்தது, ஏன் இவருக்கு மட்டும் வந்தது? எங்கோ ஒரு ஒப்பந்தம் நடந்திருக்கின்றதா இல்லையா? […]
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டவுடன் ஆளாளுக்கு வாளை உருவி களத்தில் குதித்தார்கள், பின் திமுகவும் அதிமுகவும் ஆசைபட்டபடி நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கான தேர்தல் இல்லை என்றதும் பெருவாளியான வாள்கள் உறைக்குள் சென்றன திமுகவும், அதிமுகவும் நிம்மதி பெருமூச்சு விட்டன, கம்யூனிஸ்ட்டுகள் போன்றவை சில கோடிகள் வருமானம் போனதால் கடும் அப்செட்டில் இருந்தன இப்பொழுது ஊராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தலாம் என அறிவிக்கபட்டுவிட்டதால் ஆளாளுக்கு கிராமங்களில் உருவிய வாளோடு சுற்றிகொண்டிருக்கின்றார்கள் கிராமங்கள் போர்கோலம் பூண்டாயிற்று, இந்த போர் தெரு முதல் உள்வீடு […]
தன் மேலான குற்றசாட்டு இன்னும் தீர்க்க படாதவரை சிதம்பரம் அமைதியாய் இருப்பதே நல்லது அவருக்கு பிணை கொடுக்கபட்டிருக்கின்றதே தவிர, வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆகவில்லை அன்னார் அவர் மேலான குற்றசாட்டை ஆதார பூர்வமாக மறுக்கமுடியா நிலையில், நாட்டின் பொருளாதாரம் என்னாயிற்று தெரியுமா? என பாட்டை உரக்க பாடுகின்றார் இதெல்லாம் தன் மேலான களங்கத்தை துடைக்க அவர் நடத்தும் நாடகம் என்பது எல்லோருக்கும் புரியும் நிலையில் அவர் மேலான பரிதாபமே மேலோங்குகின்றது அமைதி காக்க வேண்டிய இடத்தில் […]
நித்திசாமி விவகாரத்தில் எல்லோரும் சொல்வதும் பொய் என்பதுதான் நிஜம், அந்த அளவு ஆளாளுக்கு பொய் சோல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் புகார் கொடுத்த கோஷ்டிகள் பல்லாண்டுகாலம் அவரோடுதான் இருந்திருக்கின்றது, சாமி போலி என தெரிய பல ஆண்டுகளா ஆகும்?, விஷயம் அது அல்ல வேறு எங்கோ சிக்கல் இருக்கின்றது சாமியாவது உண்மை சொல்கின்றது என்றால் இல்லை, என்ன இருந்தாலும் ஒரு இந்திய குடிமகன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல் நாட்டை விட்டு வெளியே இருப்பது சட்டபடி குற்றம், மக்களுக்கு ஆன்மீக வழி காட்டுவதாக […]
அது கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் பிணக்கு வந்த நேரம், மாறன்களை கட்சி விட்டு நீக்கி, கலைஞர் டிவி எல்லாம் தொடங்கபட்ட நேரம் கலைஞரின் கண்கள் பனித்து, இதயம் இனிக்கா காலம் அப்பொழுது மாறன் சகோதர்கள் தயாரித்த படத்தின் “நாக்க முக்க, நாக்கமுக்க” பாடல் பிரபலம், திரும்பும் இடமெல்லாம் அதுதான் ஒலித்தது சோ ராமசாமி தனக்கே உரிய பாணியில் சொன்னார், என்ன பாடலோ ஆனால் எனக்கு “அட்றா அட்றா மு.க… மு.க”ன்னு மட்டும் கேக்குறது….
ஒரே நாளில் இரண்டு ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவி புதிய சாதனை படைத்திருக்கின்றது சீனா பொதுவாக ஒரு ராக்கெட்டில் செயற்கை கோளை வைத்து ஏவிவிடுவார்கள், அது சென்று தன் இலக்கினை எட்டும் வரை அதையே கண்காணிப்பார்கள், இதனால் அடுத்த ராக்கெட்டை ஏவ சில வார இடைவெளி வேண்டும் சீனா இரு குழுக்களை வைத்து இருவிதமான மூலங்களை வைத்து அட்டகாசமாக சாதித்திருக்கின்றது, இதன் மூலம் அந்நாடு சொல்வதென்னவென்றால் இந்தியாவினை விட எம்மிடமும் சரமாரியாக செயற்கைகோளை ஏவும் நுட்பம் உண்டு.
ஈரான் தன் மக்களின் அதிருப்தி, தொடர்ந்து தன் கையினை கட்டும் நாடுகளை மிரட்ட வேண்டிய நிலை என இக்கட்டான நிலையில் இருக்கின்றது எங்களை வாழவிடாத நாடுகளை நாங்கள் வாழவிடமாட்டோம் என எச்சரித்துகொண்டிருக்கும் ஈரான் பெரும் போரில் இறங்கலாம் என்கின்றன செய்திகள் அமெரிக்கா ஒரு மாதிரியான படைகுவிப்பினை செய்கின்றது, இஸ்ரேல் அதன் அதிநவீன ஏவுகனையினை சோதிக்கின்றது அந்த ஏவுகனை ஈரானுக்கானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை முடிந்தவரை போரை தவிர்த்த ஈரான் ஒரு ஆட்டத்துக்கு தயாராகிவிட்டது, சில பலத்த எச்சரிக்கைகளை […]
இந்தியா இனி செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகனைகள் சோதனையினை கொஞ்சநாளைக்கு செய்வதில்லை என அறிவித்திருக்கின்றது இந்தியாவின் ஏசாட் ஏவுகனை கடந்தவருடம் சோதிக்கபட்டு முன்னூறு கிமி தொலைவில் இருந்த டம்மி செயற்கோளை தகர்த்து உலகை அசத்தியது. இந்த ஏவுகனையின் மொத்த பலம் ஆயிரம் கிமீ என உறுதிபடுத்தபட்ட நிலையில் அச்சோதனை இன்னும் தொடரும் என எதிர்பார்த்தது இந்தியா இனி சோதனை தேவையில்லை எம் தொழிநுட்பம் மேல் நம்பிக்கை உண்டு இதனால் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு களமிறங்கிவிட்டோம் என சொல்லிவிட்டது சரி, […]
டில்லியில் நடந்திருக்கும் தீ விபத்து பெரும் அசம்பாவிதமாக ஐம்பது பேருக்கு மேல் இறந்துவிட்டது பெரும் துரதிருஷ்டம் பைப் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் கம்பெனி என அறியபட்ட அந்த தொழிற்சாலையில் இன்று காலை நடந்த அந்த விபத்து இந்த அப்பாவிகள் ஐம்பது பேரின் உயிரை பறித்திருக்கின்றது உயிரிழந்தவர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகின்றது, பிரதமர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள் தென்னகம் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்திற்கு ஆயத்தமாகும்பொழுது, அக்னி வடக்கே பெரும் காவு வாங்கியிருப்பது சோகம்
We would like to show you notifications for the latest news and updates.