பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன துரோகி கட்சி என என்னிடம் சொன்னார் ஜெயா

ரமாவரம் தோட்டத்துல அய்யா ராமசந்திரன் எப்படி சர்க்கரை பொங்கல் கொடுத்து என்னை சாப்பிட சொன்னாரோ அப்படி ஜெயலலிதா அம்மாவினை நான் போயஸில் சந்தித்தபொழுது வெண்பொங்கலும் வடையும் சாப்பிட சொன்னார்கள், அதிலிருந்த முந்திரி ஈரான் நாட்டு முந்திரி, மிளகு அவங்க கொடநாடு எஸ்டேட்ல விளைஞ்சதாம் அரைலிட்டர் நெய் ஊற்றி பொங்கலை கொடுத்தார்கள் அப்புறம் நல்ல காப்பி, அந்த காப்பிபொடி பிரேசில்ல இருந்து வந்தது, பால் நியூசிலாந்துல இருந்து வந்ததாம், அவர் குடித்து ருசிபார்த்து பால், சீனி எல்லாம் சரிபார்த்து […]

அட பரிதாப திமுக எடுபிடிகளா..

அட பரிதாப திமுக எடுபிடிகளா.. ஜெயாவின் இன்னொரு பக்கத்தை சொன்னால் இவ்வளவு பயமா? அந்த அம்மையார் இல்லா நிலையிலும் இவ்வளவு பயமா? அதிமுக எப்படியோ மன்னார்குடியிடம் இருந்து மீண்டுவிட்டது, உங்களுக்கு ஒரு காலமும் விடுதலையே இல்லை உலகின் மிகபெரும் பயந்தாங்கொள்ளிகளும் மானம் கெட்டவர்களுமானவர்கள் நீங்களேதான்..

எதற்காக வரிந்துகட்டி முடக்கினார்கள்

எதற்காக வரிந்துகட்டி முடக்கினார்கள் என்றால், இதற்காகத்தான். இதை சொன்னதற்குத்தான் ஆம் இந்த உண்மையினை சொன்னதற்காகத்தான் முடக்கியிருக்கின்றார்கள் 1989ம் ஆண்டு சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழும்புகின்றார் கருணாநிதி, மிக மிக துணிச்சலாக கேட்கின்றார் ஜெயலலிதா “இந்நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு , அமைதிபடையாக சென்று அடுத்தநாட்டில் செத்தும் ரத்தம் சிந்தியும் செத்தும் வந்த நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிவிட்டு தேசதுரோகியான உங்களுக்கு இச்சபையில் பேசவோ நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகைதை […]

ஈழம் ஏன் நாசமாய் போனது

ஈழம் ஏன் நாசமாய் போனது என்பதற்கான விடை இனியும் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்காது அங்கும் திராவிட சித்தாந்தம் நுழைந்திருக்கின்றது, பின் எங்கிருந்து உருப்படும்? உருப்படாமல்தான் போகும் அதை அடித்துவிரட்டிய இலங்கைக்கே இவ்வளவு அழிவு என்றால், வைத்து வணங்கும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு அழிவு வந்திருக்கும்? சரி, இலங்கையில் ஏது ஆரிய பார்ப்பானியம்? சிங்களன் பார்ப்பான் இல்லை இந்துமதமும் இல்லை அவன் ஆரியனுமில்லை பின்பு ஏன் அங்கு திராவிட கழகம்? இலங்கை என்பது தென்னாட்டு பூமி சாயல் அதாவது திராவிட […]

சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?

சட்டீஸ்கரில் விடுமுறை கிடைக்கா எல்லை பாதுகாப்புபடை வீரன் 5 பேரை சுட்டுகொன்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றான் சொந்தநாட்டினை பாதுகாக்க சென்று சொந்தநாட்டுகாரனாலே சுட்டுகொல்லபட்டிருக்கின்றனர் அந்த வீரர்கள் வீரர்களின் மனநலனையும் காக்கும் பொறுப்பு உண்டு என்பது தெரிகின்றது, விஷயம் பெரிதாகின்றது இனி மேனேஜர் லீவ் கொடுக்கவில்லை என்றால் “சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?” என உருமினால் போதும் உடனே தாரளாமாக விடுமுறை கிடைத்துவிடும்

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது. கோத்தபாய இந்தியா வந்ததை பாகிஸ்தான் விரும்பவில்லை அல்லது இலங்கை தன் ஆட்டத்தை ரகசியமாக ஆடுகின்றது நேற்று இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் கோத்தபாயாவினை பார்த்து “நாம் எப்படி எல்லாம் பழகினோம், ஆனால் நீர் மோடியோடு சப்பாத்தி சாப்பிட போயிருக்கின்றீர், எம்மோடு டீ குடுக்க வரகூடாதா” என்பது போல் அழைப்பு விடுத்திருக்கின்றார் ஆம் பாகிஸ்தான் கோத்தபாயாவினை பாகிஸ்தானுக்கு வர அழைக்கின்றது, கோத்தபாய உடனே ஓடினால் இது அவர்களின் […]

நித்திக்கான நேரம்

நாம் ஆன்மீகத்தையும் யோகிகளையும் பரமஹம்சர்களையும் சுவாமிகளையும் மகான்களையும் நோக்கி பார்த்தவர்கள் என்ற வகையில் சொல்கின்றோம், மகான்களும் யோகிகளும் அதிசய வரம் சில பெற்றிருப்பார்கள் கடுமையான விரதத்தாலும் தவத்தாலும் சில அதீத வலிமையினை பெறுவார்கள், அந்த சக்தி மூலம் பல வியத்தகு காரியங்களை ஆற்றமுடியும் இது ஆன்மீகத்தின் மிக சிறிய படிநிலை இதற்கு மேல் எவ்வளவோ உண்டு, இதனால்தான் முற்றிலும் உணர்ந்தவர்கள் பஞ்ச கோலத்தில் பரதேசியாய் அலைவார்கள், ஆம் உண்மை தெரிந்துவிட்டால் நாம் வெறும் தூசு என்பது புரியும் […]

ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

மோடி எதிர்ப்பு என காங்கிரஸ்டன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்ததை விடுத்து வேறு எல்லா தேர்தலுக்கும் திமுக அஞ்சுவது தெரிகின்றது இடைதேர்தலில் இதே கூத்தை செய்தார்கள், இன்னும் சில இடங்களில் செய்தார்கள் இப்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், தமிழ்நாட்டில் எடப்பாடி தேர்தல் நடத்தமாட்டார் என சவால்விடுவதும், தேர்தல் அறிவிக்கபட்டால் நீதிமன்றம் ஓடுவதும் திமுகவின் முரண்பட்ட இரட்டை நிலை.. ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்

ஒரு திராவிட தமிழன், அதுவும் ஒரு பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான். அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி தங்க கட்டியால் சாதித்திருக்கின்றான் ஈரோட்டு ராம்சாமி, காஞ்சிபுரம் அண்ணாதுரை, திருகுவளை கருணாநிதி, வெல்வெட்டிதுறை பிரபாகரனால் முடியாதெல்லாம் அவனால் முடிந்திருக்கின்றது அந்த பச்சை தமிழன் ஒரு காவி என்பதால் இப்பாவி சமூகம் அவனை பாராட்டாமல் இருப்பது வரலாற்று சோகம்..

திமுக செய்த தில்லாலங்கடி

திமுக மோசடி என்றால் என்ன என்பதை விளக்க இந்த படம் ஒன்றே சாட்சி இந்திராவினை வணங்குகின்றார் காமராஜர் அங்கு நித்திசாமி ஸ்டைலில் மந்தகாச புன்னகையினை வீசியபடி குறுக்கே ஓடிவருகின்றார் கருணாநிதி இது முதல்படம் அடுத்து கருணாநிதியினை குனிந்து வணங்கினார் காமராஜர் என அடிப்பொடிகள் அடுத்த படத்தை வெளியிடுகின்றன இது இரண்டாம் படம் அதுவும் கேட்டால் சும்மா வணங்கவில்லையாம் “அந்த ஆளு 10 கிருஷ்ணனுக்கு சமம்ணே, அவரமாதிரி ஒரு ஆற்றல்மிக்கவன் 1000 வருஷத்துக்கு ஒருதடவைதான் வருவாருண்ணேண், தமிழருக்கு அவரவிட்டால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications