பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலக பொருளாதரமே வீழ்ந்து கிடக்கின்றது

உலக பொருளாதரமே வீழ்ந்து கிடக்கின்றது, இன்னும் கீழிறங்கலாம் என்கின்றார்கள் தென்கொரிவே கடும் இறக்கத்தை சந்தித்திருக்கின்றது, சீனா நிலை மகா மோசம், ஜப்பானிய நிலையும் தேக்கமே ஐரோப்பிய நாடுகளிலும் நிலமை சொல்லிகொள்ளும் அளவு இல்லை, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது இந்தியா எனும் கப்பல் உலக கடலில் நீந்தும்பொழுது அந்த கடல் எழுப்பும் அலைகளுக்கு கப்பல் மாலுமி ஒன்றையும் செய்யமுடியாது இந்திய நிலை அவ்வளவு ஒன்றும் மோசமில்லை, சீனா 30 ஆண்டுகளில் இல்லா சரிவினை சந்தித்திருக்கும்பொழுது இந்தியா பொருளாதாரம் […]

ஒரே கடவுள் என அறிவது சாத்தியமா?

கிறிஸ்தவருக்கு ஒரே தெய்வம், இஸ்லாமியருக்கு ஒரே தெய்வம் ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல அங்கு ஏகபட்ட தெய்வம் குளறுபடிகள் உண்டு என்பது போல ஆ.ராசா என்பவர் பேசியதாக ஒரு தகவல் சுற்றுகின்றது. ஆ.ராசா திகாரில் இருக்கும்பொழுது வந்த பத்திரிகை செய்திகள் ஏராளம், அதிலொன்று பல பெண்குழந்தைகளுக்கு பின் ஆண்குழந்தை வேண்டி ஆண்டிமுத்து என்பவர் தன் குலசாமிக்கு தவமிருந்து கடைசியாக ராசாவினை பெற்றதாகவும், அவர் பெரும் பதவிகளை அடைவார் என சாமி சொன்னதாகவும் தகவல் உண்டு ஆனால் ராசா […]

மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல்

தேனியினை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல் ஏற்பட்டிருக்கின்றது, காதலாகி கசிந்திருகியிருக்கின்றார்கள். அம்மணிக்கு இவரை காணும் ஆசை வந்து அது ஓடிவந்திருக்கின்றது, ஏர் ஏசியா போன்ற பட்ஜெட் விமானம் தன் காதலுக்காக விடபட்டது போல, தயமந்திக்கு அன்னபறவை போல என நினைத்து அம்மணி பறந்து வந்தாயிற்று அம்மணியினை நேரில் பார்த்த தமிழக காதலன் அரண்டு போய், அய்யய்யோ நீ குண்டாக இருக்கின்றாய் கருப்பாக இருக்கின்றாய் என சொல்லி கழன்று ஓட பார்த்திருக்கின்றான் பொதுவாக உலகமெல்லாம் […]

ஒருவிஷயம் உண்மை

ஐடி முடக்கபட்டது என சொல்லி இன்னொரு அடி திறந்தால் ஆயிரகணக்கான நண்பர்கள் அங்கும் வந்துவிட்டார்கள். நிச்சயம் நம்மிடம் ஏதோ எதிர்பார்கின்றார்கள். எதையோ இவன் உருப்படியாக சொல்கின்றான் என நம்புகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நினைத்தால் மனம் பதைபதைக்கின்றது தேவையில்லாமல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோமோ என்றெல்லாம் கூட யோசனை வருகின்றது, ஆனால் இவ்வளவு ஆயிரம் பேர் வந்து நிற்கின்றார்கள் என்றால் நம்மை நம்புகின்றார்கள் என்பது தெரிகின்றது. நாம் எழுதுவது அவர்களை எதையோ உணர வைக்கின்றது, தேட வைக்கின்றது அதற்காக‌ வருகின்றார்கள். […]

பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?

உலகத்துலே போர் நடக்கும் இடத்துல பன்றி வேட்டைக்கு போன ஒரே போராளி கூட்டம் நம்ம பிரபாகரன் கூட்டம்தான் ஈழம்பிடிக்க‌ போரட்டம் நடத்தினார்கள் என நாம் நினைத்தால் அவர்கள் பன்றி பிடிக்க போராடியிருக்கின்றார்கள் அவன் மாவீரன் பிரபாகரன் என நினைத்தால் அவன் பன்றி வீரன் பிரபாகரனாய் இருந்திருக்கின்றான் பன்றி பிடிக்கும் படை, மான் பிடிக்கும் படை , உடும்பு பிடி படை, முயல் தூக்கும் படை, ஆமை பிடிக்கும் படை என பல படைபிரிவுகள் இருந்திருகின்றன. கடல் படை […]

தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது

திருச்சி நகைகொள்ளை முருகனை விசாரித்த காவல்துறை தலையில் அடித்து சிரித்துகொண்டிருக்கின்றது ஆம் அவன் கிட்டதட்ட 100 இடங்களில் கொள்ளை அடித்திருக்கின்றான், அதை கொண்டு தன் அக்கா மகனை வைத்து தெலுங்கில் இரு படம் தயாரித்திருக்கின்றான், ஆனால் வெளிவரவில்லை அவனுக்கென்ன பைனான்சியர் சிக்கலா? வட்டி பிரச்சினையா? இல்லை அன்பு செழியன் போல ஏதும் மிரட்டலா? அவன் கொள்ளை அடித்து மறுபடியும் சினிமா தயாரித்திருகின்றான், அப்பொழுதுதான் சிக்கி இருக்கின்றான். கொஞ்சகாலம் பிடிபடாமல் இருந்திருந்தால் ஆக சிறந்த தமிழ் சினிமா ஒன்றை […]

அவரை வாரிசு என்பீர்கள்..

அவரை வாரிசு என்பீர்கள்.. அந்த வாரிசு கடந்த காட்டாறுகள் எத்தனை, அவன் கடந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதை காணுங்கள் பாட்டிசைக்கும் குயில்கள் இல்லை அவன் பாதையில், நாகங்கள் நிறைந்திருந்தன. தென்றலை தீண்டியதில்லை அவன் தீயினை தாண்டியிருக்கின்றான் தயவு செய்து அவன் கதையினை கேளுங்கள்..

கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு அறிவிப்பு கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது இன்ப அதிர்ச்சி, சீனாவுக்கு சாவுக்கு ஒப்பான அதிர்ச்சி தென்னிலங்கையில் ஹம்பந்தோட்டா எனும் இடத்தில் சீனா துறைமுகம் கட்டி தன் பொறுப்பில் எடுத்தது அதில் சீன கப்பல்களுடன் சீன ராணுவ கப்பல்களும் நிற்கும், அமெரிக்கா தன் கப்பலோடு அடிக்கடி அங்கு சென்று இதுவும் கப்பல்தான் உள்ளே விடு என […]

திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை

நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று புரிகின்றது. திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை, அதிமுக மிகவும் யோசிக்கின்றது , உட்கட்சி குழப்பம் முதல் பல வகையான குழப்பங்களை அதிருப்திகளை இது உருவாக்கும் என அது மாவட்டம் பிரிப்பு அது இது என சுற்றி வருகின்றது உள்ளாட்சி தேர்தல் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தும் அது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அஞ்சுகின்றது திமுக கணக்கு வேறுமாதிரியானது, நமக்கெல்லாம் தளபதி தெரியும் ஆனால் 33 குட்டி தளபதிகளும் அவர்களுக்கு […]

சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்

நாட்டை கெடுப்பதே இந்த யழவு சமூக நீதி எந்த சாதி எந்த மதமாயினும் இந்தியன் என்ற அளவில் அவனை பார்த்து அவன் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்துகின்றோமோ அன்றுதான் இந்த தேசம் உருப்படும் என் சாதி, என் மதம், என் மொழி என குறுகிய வட்டத்தில் பார்த்து அதை அரசியலாக்கி அந்த மகா குறுகிய கீழ்தரமான தந்திரத்துக்கு சமூக நீதி என பெயரிட்டால் இச்சமூகம் உருப்படாது கல்வி எல்லோருக்கும் பொதுவாக வழங்கபடுகின்றது, பள்ளி கல்வி எல்லோருக்கும் சமமே, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications