பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : கந்தகோட்டம் ஆலயம், சென்னை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கந்தகோட்டம் ஆலயம், சென்னை. சுமார் 400 வருடங்களுக்கு முன்பிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது என்றாலும் அந்த மூலவர் சிலையின் வரலாற்றை அறிந்தவர்களில்லை. எப்போதோ யாராலோ அழிக்கப்பட்ட ஆலயத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட முருகன் தன் அடியார் மூலம் பின்னர் மீண்டு வந்து இந்த ஆலயத்தில் அமர்ந்தார். அவ்வகையில் இந்த ஆலயம் 400 ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கலாம். ஆனால், மூலவர் சிலை மகா தொன்மையான காலத்தைச் சேர்ந்தது. இடையில் வந்த சமண பௌத்த காலமோ, […]

முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சிறிய மலையில் அமைந்திருக்கின்றது இந்த வள்ளிமலை தலம். இங்குதான் முருகப்பெருமான் வள்ளியினை சந்தித்தார் என்பதால், திருத்தணியில் வள்ளியுடன் திருமணம் நடந்தாலும் அந்தத் திருமணத்துக்கான எல்லாக் காட்சியும் இங்குதான் நடந்தது என்பதற்கான சுவடுகளும் ஆதாரமும் நிரம்ப இருப்பதால் இந்தத் தலம் முருகப்பெருமானின் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது. தன் பூர்வ ஜென்மத்தின் வாசனையால் முருகனை மணக்க வள்ளி திருமால் பாதத்தை வழிபட்ட இடம் இதுதான். […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் வல்லக்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ள ஆலயம் இது. இதன் தொன்மை முருகப்பெருமான் காலத்தோடு தொடர்புடையது. முருகப்பெருமான் காலத்தில் சூரபத்மன் மட்டுமல்ல, ஏகப்பட்ட அசுரர்கள் தொல்லை கொடுத்து ஆடினார்கள். அப்படியான அசுரர்களில் வல்லன் என்பவனும் ஒருவன், அவனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் இது, அவன் பெயரிலே வல்லன் கோட்டை என்றாகி பின் வல்லக்கோட்டை என நிலைத்துவிட்டது. இந்தத் தலம் தேவர்களின் அரசன் இந்திரனால் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம். வேலூர் மாவட்டம் இராணிபேட்டை அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். குன்று ஒன்றின் மேல் அழகுற எழுந்தருளியிருக்கும் இந்த ஆலயம் புராண காலத்துடன் தொடர்புடையது. அசுரனால் விரட்டப்பட்ட இந்திரன் இம்மலையில் ஒளிந்திருந்தான், அவனைக் காக்க வந்த முருகப்பெருமான் இந்திரனையே மயிலாகக் கொண்டு அசுரனை ஒழித்து அவனுக்கு மீண்டும் தேவலோகப் பதவியினை வழங்கினார். அதிலிருந்து இங்கு முருகப்பெருமான் ஆலயம் ஸ்தாபனமானது. இங்கு மலைப்பிளவில் தானே உருவான சுயம்பு விநாயகர் இன்னும் விசேஷம். […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலூர் முருகப்பெருமான் ஆலயம். தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மிக முக்கியமானது திருச்சிராப்பள்ளி அருகே அமைந்திருக்கும் வயலூர் முருகப்பெருமான் ஆலயம், இது மிக மிகத் தனித்துவமானது. இதன் வரலாறு உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் தொடங்குகின்றது. அப்போது அப்பக்கம் வயல்வெளிக்குச் சென்ற சோழமன்னன் தாகம் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு கரும்பைக் கடிப்பதற்காக வெட்டியபோது அதிலிருந்து இரத்தம் கொப்பளித்தது. அஞ்சிய மன்னன் அங்கே நின்று பெரும் தவறு நடந்ததற்காய் வருந்தினான். பின் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அண்மித்து மலையில் அமைந்திருக்கும் ஆலயம் இந்தக் குழந்தை வேலப்பர் ஆலயம், பழனி போல இதற்கும் தனித்துவமான வரலாறும் தொன்மையும் உண்டு. இது போகர் எனும் பெரும் முனிவரால் உருவாக்கப்பட்டது, அவர்தான் பழனிமலை முருகனையும் ஸ்தாபித்தார், அப்படிப் பழனிப் போலவே நவபாஷாணத்தால் உருவான சிலை இது. சித்தர்களின் தலைவர் முருகப்பெருமான், சித்தர்கள் வழிபடும் ஞானப்பண்டிதர் அவர்தான். சித்தபரம்பரை என்பது அகத்தியர் தொடங்கிவைத்த குருகுலம், அந்த […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர். (இந்த ஆலயத்து வரலாறும், இளையனார் வேலூர் வரலாறும் ஒன்றுபோல் சொல்லப்பட்டாலும், முருகப்பெருமான் தன் வேல் ஊன்றி நின்ற இடம் இதுதான், யுத்தம் நடந்த இடம் இளையனார் வேலூர் என்றாலும் முருகப்பெருமான் வேலூன்றி சிவனை வழிபட்ட இடம் இதுதான்.) சரித்திரத்தில் மட்டுமல்ல தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் ஆலயம். இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உத்திரமேரூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. உத்திரவாகினி எனும் நதி […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் இந்த முருகப்பெருமான் ஆலயம். இதன் பழமை போகர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. சித்தர்களில் முக்கியமானவரான போகர் இந்த மலையில் தவம் செய்தும் மூலிகை ஆராய்ச்சிகள் செய்தும் வந்தார். அப்படியான போகரின் பெயரால் இந்த இடம் போகனபள்ளி என அழைக்கப்பட்டது, போகர் தங்கிய இடம் என அதற்குப் பொருள். அந்தப் போகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம் இது, போகர் காலத்தில் இருந்தே […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தேனி பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ஆலயம். தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அமைந்திருக்கும் ஆலயம் இது. இதன் வரலாறும் அங்கு முருகப்பெருமான் குடிகொண்ட காட்சியும் சிலாகிப்பானவை. ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மாபெரும் இராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினான் இராஜராஜ சோழன். தஞ்சாவூரில் மாபெரும் சிவாலயம் எழுப்பிய அந்த உன்னதமான சிவபக்தனுக்கு எதிரிகளை அடக்கும் அவசியமும் இருந்தது. அவ்வகையில் அவனின் எதிரிகளாகச் சேரர்கள் இருந்தார்கள். மேற்கு மலையின் கணவாய்களில் முக்கியமானதான குமுளி வழி பிரதானமாய் அவர்களுக்கு […]

முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி.

முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி. முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் தன் உருவில்தான் காட்சியளிப்பார். ஆனால் ஒரே ஒரு தலத்தில் மட்டும் சுயம்புவாய் சிவலிங்கத்துடன் காட்சியளிப்பார். அந்த அபூர்வ ஆலயம் இந்த வில்வாரணி மலை எனும் நட்சத்திர கிரி. இதன் அன்றைய பெயர் வில்வ ஆரண்யம், அதாவது வில்வ மரக்காடு என பொருள், அந்த வில்வ ஆரண்யம் என்பதே விவராணி என மருவிற்று இந்த ஆலயத்தின் பெருமை அருணாச்சல புராணம், காஞ்சி புராணம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications