பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்ரபதி சாம்பாஜி : 14

சத்ரபதி சாம்பாஜி : 14 சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபட்டு மீண்டும் தங்கக்கூரை வேய்ந்து கொடுக்க உத்தரவிட்ட சாம்பாஜி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு தஞ்சாவூரிலே ஓய்வெடுத்தான். சோழர்களின் கடற்படை முதல் சிவபக்தி வரை, ஆட்சி முதல் அரசியல் வரை எல்லாமே தங்களின் போராட்டம் போல் இருந்ததை நினைந்து சிலிர்த்துக் கொண்டான். சோழர்களுக்குப் பௌத்தம், தங்களுக்கு ஆப்கானிய இஸ்லாம் என நினைத்துக் கொண்டான். சோழர்கள் வலுவாகத் தொடர்ந்திருந்தால் இல்லை பாண்டிய வம்சம் அதே பேரரசாக நிலைத்திருந்தால் இந்நேரம் மாபெரும் […]

சத்ரபதி சாம்பாஜி : 12

சத்ரபதி சாம்பாஜி : 12 சாம்பாஜி ஜான்சிரா சித்திகளை அடக்க பெரும் போரையும் தொடங்கி அதைவிட பிரமாண்டமாக பாலம் ஒன்றையும் கட்டி அத்தீவினை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இரு ராணுவ செய்திகளும், அதைவிட முக்கியமாக இன்னொரு செய்தியும் சாம்பாஜியினை அடைந்தது. ஒன்று ஔரசீங்கசீப் அனுப்பிய தளபதி ஹாசன் அலி கான் கல்யாண் நோக்கி பெரும் படையோடு வருகின்றான் என்பது. இரண்டாவது, மைசூர் மன்னன் சிக்க தேவராயா சாம்பாஜிக்கு எதிராக‌ செய்யும் கிளர்ச்சி. மூன்றாவது, சமர்த்த ராமதாஸர் தன் […]

சத்ரபதி சாம்பாஜி : 13

சத்ரபதி சாம்பாஜி : 13 ஹாசன் அலிகானை ஔரங்கசீப் பெரிய நம்பிக்கையோடு அனுப்பினான், அவனுக்குந் தனிபட்ட வகையில் ஒரு பெரிய யானையும் சில உயர்தர குதிரைகளும், கிலாட் எனும் பட்டும் தங்கமும் கலந்த மெல்லிய அங்கியும் இன்னும் பல பரிசும் கொடுத்து அனுப்பினான். அலிகான் தன் இருபதாயிரம் பேர் கொண்ட படையோடு கல்யாண் பக்கம் புகுந்தான், அவனின் முதல் இலக்கு பெரிய காடும் மலையும் இல்லாத சமவெளி பக்கம் இருந்த ராம்சேஜ் கோட்டையாக இருந்தது. அதை முதலில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 76-80

காளிதாசனின் ரகுவம்சம் : 76 அந்தத் தேவநீகனுக்கு அஹிகு என்றொரு மகன் பிறந்தான், அவன் தன் இனிய மொழியாலும் நடத்தையாலும் தன்னை சார்ந்தோரை மட்டுமல்லாமல் எதிரிகளையும் வசமாக்கினான். அஞ்சி ஓடும் இயல்புடைய மான்களும் இனிய மொழிக்கும் இசைக்கும் மயங்கி அருகே வருவது போல அவன் தன் இனிமையான சொற்களால் பகைவரையும் வளைத்து நல்லாட்சி செய்தான். அஹீகு எனும் அந்த அரசன் குறையாத தோள்வலிமை உடையவன், இளம்வயது ஆயினும் அவன் கீழோருடன் நட்பு கொண்டிருக்கவில்லை. அதனால் குடி சூது […]

காளிதாசனின் ரகுவம்சம் : 71-75

காளிதாசனின் ரகுவம்சம் : 71 அப்பெண்கள் உடுத்தியுள்ள மெல்லிய வஸ்திரங்கள் நீரால் நனைந்ததால் அவை அவர்களின் இடையோரம் ஒட்டிக்கொண்டன, அந்த ஆடையின் மேகலையில் இருந்த‌ நீர்ப்பட்ட முத்துக்கள் சந்திரன் முன் நட்சத்திரம்போல் மங்கியிருந்தன, நூல்களில் கோர்க்கப்பட்ட அவைகளின் துவாரங்களில் நீர் இருந்ததால் அவைகள் எழுப்பும் ஒலியும் மங்கியிருந்தது. கோடைக்காலத்தின் விளையாட்டாக அப்பெண்கள் நீரினை அடித்து விளையாட அவர்கள் முகத்தில் நீர் படிகின்றது, அது அப்பெண்களின் முன்நெற்றி முடியினைச் சுருக்கங்கள் நீக்கி நீண்டதாக்குகின்றது, அந்த முடியின் வழி வழியும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 66-70

காளிதாசனின் ரகுவம்சம் : 66 ராமன் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தபோது விபீஷ்ணன் சுக்ரீவன் உள்ளிட்ட எல்லா அரசர்களும் மேகம் பயிர்கள் மேல் மழை பொழிவது போல் ஏராளமான பொருட்களைக் காணிக்கையாய் ராமனுக்குக் கொட்டினார்கள். ராமனின் அழைப்பினை ஏற்று அந்த யாகத்துக்குப பூலோக முனிவர்களும் ரிஷிகளும் மட்டுமன்றி தேவலோக ரிஷியான மரீசி முதலான ரிஷிகளும் வந்திருந்தார்கள். முனிவர்களெல்லாம் அயோத்தி நகரின் வெளியே தங்கியிருந்தார்கள், அந்த அயோத்தி நகரின் நான்கு வாயில்களிலும் அப்படித் தேவலோக ரிஷிகள் குவிந்து கிடக்க […]

காளிதாசனின் ரகுவம்சம் : 61-65

காளிதாசனின் ரகுவம்சம் : 61 தான் எப்போதும் உண்மையினை மறைக்காமல் பேசுவது போல் மற்றவரும் உண்மையினை மறைக்காமல் தன்னிடம் பேசவேண்டும் என எதிர்பார்ப்பவன் என்பதால் அந்த உளவுக்காரன் உள்ளதைச் சொன்னான். “அரசே, ராட்சசனின் மாளிகையில் சில காலம் இருந்த சீதையினை நீங்கள் ஏற்றுக்கொண்டு அயோத்திக்கு அழைத்து வந்ததை தவிர எல்லா வகையிலும் மக்கள் உங்களைக் கொண்டாடுகின்றார்கள்” என்றான். தன் அன்புக்குரிய மனைவியான சீதையினைப் பற்றி எழுந்த இந்த அபகீர்த்தியானது பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பினைச் சம்மட்டி அடித்து உடைப்பதைப் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 56-60

காளிதாசனின் ரகுவம்சம் : 56 ராமன் தொடர்கின்றான். “ஓ அச்சம் கொண்டவளான சீதையே, உன்னை அந்த அரக்கன் உன்னைத் தூக்கிச் சென்ற வழியினை இந்தச் செடி கொடிகளால் வாயால் சொல்லமுடியவில்லை. அதனால் அவன் ஒடித்துப்போட்ட கிளைகள் எனும் அதன் கைகளை தளிர்கள் எனும் அதன் விரல்களைத் தொங்கவிட்டபடி அவை எமக்கு நீ சென்ற வழியினைச் சொன்னது. என் துயரைக் கண்ட இளம் மான்கள் அவை விரும்பும் இளம் புற்களைக் கூட உண்ணாமல் மேல் நோக்கிய (வானம் நோக்கிய) […]

காளிதாசனின் ரகுவம்சம் : 51-55

காளிதாசனின் ரகுவம்சம் : 51 முற்றிய காமம் மூளையினைச் சிதைக்கும் என்பதுபோல காளை போன்ற ராமன் மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகை தன் விருப்பத்தைதா தெரிவித்தாள், சீதை எனும் பெண் அங்கே இருந்தபோதும் அவளைத் தாண்டி தன் ஆசையினை வெளிப்படுத்தினாள், மலர் வாசமற்றது போனது போல அந்தச் சூர்ப்பனகை நாணமற்றுப் போனாள். அழகிய தோற்றமுடைய ராமன் தன்மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகையினை நோக்கிப் “பெண்ணே, நான் மனைவியுடன் இங்கே இருக்கின்றேன் க்ஷ, நீ தனித்திருக்கும் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 to 49

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 “வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர் வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள் வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் வாயிலே குதப்பும் வேதம் எனப் பட கடவதோ? வாயின் எச்சில் போகவென்று நீர்தனை குடிப்பீர்காள் வாயின் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே” மாந்தர்களே, உங்கள் வாய் பட்ட நீரை எச்சில் நீர் […]