பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்க ராஜதந்திரிகள் தலையில் அடித்து கொண்டிருக்கின்றார்கள்..

நம்ம ஊர் முக ஸ்டாலின் ராகுல் காந்தி போலவே நாக்கில் சனி கொண்டவர் டிரம்ப் அன்னார் மறுபடியும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார் நேட்டோ நாடு எனும் வகையிலும், ரஷ்ய கருங்கடலுக்கு அருகாமை நாடுஎனும் வகையிலும் துருக்கியில் அமெரிக்க ராணுவ முகாம் உண்டு, இன்றும் உண்டு சிரியாவில் அமெரிக்க மூக்கு உடைந்திருக்கும் நிலையில் துருக்கி மேல் பொருளாதார தடை விதித்திருகின்றது அமெரிக்கா, இதனால் துருக்கியில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது டிரம்பிடம் கேட்டுவிட்டார்கள் […]

அமெரிக்காவுக்கு இது மாபெரும் தோல்வி

சில தந்திர நகர்வுகளும், அவற்றின் பின்னால் இருக்கும் திட்டமும் ஆச்சரியமானவை, இப்படி எல்லாம் கூட திட்டமிடுவார்களா என வியந்து சிலாகிக்க கூடியவை அப்படி மாபெரும் ராஜதந்திரமான விஷயம் சிரியாவில் நடந்திருக்கின்றது, வாயே திறக்காமல் மிக ராஜதந்திரமாக மாபெரும் வெற்றிபெற்றிருக்கின்றது ரஷ்யா உங்களுக்கு தெரியாததல்ல சிரியாவில் நடக்கும் குழப்பமும் அங்கு ஐ.எஸ் இயக்கத்தை அடக்க போகின்றேன் என அமெரிக்கா வந்து நங்கூரமிட்டதும் அதை தொடர்ந்து ரஷ்ய படைகள் வருகையும் நடந்தது ஒருபக்கம் சிரியா ஈரான் ரஷ்யா கூட்டணியும் மறுபக்கம் […]

ஈரான் முன்னிலை வகிக்கின்றது

மீன் பிடிப்பதை போல கப்பல் பிடி விளையாட்டில் இறங்கியிருக்கின்றது ஈரான், இப்பொழுதும் ஒரு கப்பலை இழுத்து சென்றிருக்கின்றார்கள் காரணத்தை கேட்டால் அது கடத்தல் எண்ணெய் என்கின்றார்கள், யார் கடத்தினார்கள்? யாருக்காக கடத்தினார்கள் என்றால் ஈரானிடம் சரியான பதில் இல்லை மாறாக சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் என சொல்லிவிட்டு கப்பலை துறைமுகத்தில் கட்டிகொண்டிருக்கின்றது ஆக ஹோம்ஸ் கடற்சந்தியில் கப்பல்பிடி விளையாட்டு தீவிரமாக நடக்கின்றது 1:2 என்ற எண்ணிக்கையில் இப்பொழுது ஈரான் முன்னிலை வகிக்கின்றது

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 1

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 1 அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை. ஏனென்றால் சுமார் 30 வருடங்களாக அந்த தேசத்தை ஆட்டிப்படைத்த பரமபிதா பரலோகம் அடைந்துவிட்டார். யார் அந்தப் பரமபிதா? அவர் சர்வவல்லமை கொண்டவர் என மக்கள் நம்பினர். தனக்குத் தானே பரமபிதா என்று பெயரிட்டுக்கொண்டவர் அவர். […]

கப்போஸ்தலரனா சைமன் எழுதிய சுவிஷேசம் : அதிகாரம் 2

கப்போஸ்தலரனா சைமன் எழுதிய சுவிஷேசம் : அதிகாரம் 2 பரமபிதாவுக்கு எதிராகவும் வடகிழக்கு தேசத்தின் ஜனங்களுக்கு எதிராகவும் படையெடுக்கும் மேற்றிசை சேனைகளின் அட்டூழியங்கள் அதிகரித்தன. இதனால் பொதுஜனங்கள் அல்லலுற்றார்கள் என்பதை அறிந்த நீதிமான்களுக்கு நிகரான எட்டு ஸ்திரிகள் மேற்திசை சேனைகளுக்கு எதிராக உபவாசம் இருக்கத் தொடங்கினர். இதை அறிந்த பரமபிதா உபவாசங்கள் இருப்பதால் மட்டும் பொதுஜனங்கள் மீட்சியடையப் போவதில்லை. என் வார்த்தைகளைக் கேட்டு அதையே விசுவாசித்து அதன்படியே பின்பற்றுவதனால் மட்டுமே அக்காரியம் நடக்கும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் […]

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 3

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 3 அவ்வேளை அவரது சீடர்களோ வடகீழ் தேசத்தின் எல்லையுள் வாழும் பன்னிரு வயது கடந்த எல்லா குழந்தைகளையும் தம் சேனைகளில் சேர்ப்பித்து அவர்களுக்கு நச்சுக்குப்பிகளை பரிசாகக் கொடுத்தனர். அவற்றை அவர்களின் கழுத்தில் அணிவித்து பரமபிதா சந்தோசம் அடைந்தார். அச்சேனைகளில் இருந்து ஸ்திரீகளை மட்டும் தேர்ந்தெடுத்து இராப்போசன விருந்தளித்து அவர்களை குண்டுகாவிகளாக மாற்றி மகிழ்வது பரமபிதாவின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிற்று. அந்த ஸ்திரீகளும் பரமபிதாவுடன் விருந்துண்ணும் பாக்கியம் பெற்றதை எண்ணி […]

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 4

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 4 கீழ்த்திசை நோக்கி தமது சேனைகளை ஏவிவிட்டார். வடக்கில் இருந்து புறப்பட்ட அவரது சேனைகள் ஒரு பெரியவெள்ளி நடுநிசியில் கீழ்திசையின் எல்லையில் உள்ள ஓர் ஏரி அண்டையில் வந்து பாளையம் இறக்கினார்கள். அங்கே மிகப்பெரிய படுகொலை ஒன்று சம்பவித்தது. சுமார் முன்னூற்றிப் பத்து கீழ்த்திசை வீரர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அன்றிலிருந்து எஞ்சிய கீழ்திசை வீரர்களும் அத்தேசத்து ஜனங்களுமாக இணைந்து பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக புரட்சி செய்யத் தொடங்கினர். கிழக்கு […]

கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 05

கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 05 அதற்கு அவள் பிரதியுத்தரமாக என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்ணடாயிற்று. “அப்படியே உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார். அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார். அவரது சீடர்கள் பரமபிதாவின் கரங்களை பற்றி ஆறுதல் […]

முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த […]

ஜெயலலிதா பாணி இது

மக்கள் இல்லாத உள் அரங்கத்தில் இப்படி ராஜாக்கள் பாணியில்தான் அமர்ந்திருப்பார் போல… ஜெயலலிதா பாணி இது. அந்த அம்மையார் ஒரு பெண் அவர் தனித்து அமர்ந்ததில் அர்த்தமிருந்தது, இவர் ஏன் ?? மனிதர் தந்தையிடம் பாடம் படிக்காமல் அவரின் அரசியல் எதிரியிடம் பாடம் பயின்றிருக்கின்றார் அதற்காக காப்பியடிப்பது கூட இப்படியா? பின்னர் எடப்பாடி ஏன் 5 வருடம் நிம்மதியாக ஆளமாட்டார்?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications