பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி என்னமோ சொல்லிவிட்டார்

ரஜினி என்னமோ சொல்லிவிட்டார் அது ஈயம் பூசியது பூசாதது என பல திமுகவினர் கிளம்பியாயிற்று இதை தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் கலைஞர் கருணாநிதி அவரின் பதில் எல்லாமே தலையினை பிய்க்கும் அளவுக்குத்தான் இருக்கும், திராவிடம், ஈழம், பெரியாரியம் இன்னும் ஏகப்பட்ட இடங்களில் ஈயம் பூசியது அவர்தான் உதாரணத்துக்கு ஈழபோரில் பிரபாகரன் கொல்லபட்டால் வருந்துவீர்களா? “பிரபாகரன் அல்ல யார் கொல்லபட்டாலும் வருந்துவேன்” ஆயிரகணக்கில் சாகின்றார்களே “ஆம், வருந்தி கொண்டே இருக்கின்றேன்” தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு […]

மனுநீதி ஆட்சிமுறை எங்கே இருந்தது

இந்த மனுநீதி ஆட்சிமுறை எங்கே இருந்தது என கேட்டால் அதுதான் பிராமண சட்டம் அதுதான் ஆண்டது என்கின்றார்கள் பிராமண அரசன் என எவனுமில்லை தமிழக வரலாற்றுபடி சேர சோழ பாண்டியன், களபிரர், பல்லவர், சாளுக்கியர், கடை ஏழு வள்ளல்கள்,நாயக்கர், இஸ்லாமியர், வெள்ளையன் என யார் ஆட்சியிலும் மனுநீதி அரச கட்டளையாக இருந்ததுமில்லை அவரவர் சட்டங்களை எழுதினார்கள் பாண்டியனோ, சோழனோ, பல்லவனோ, நாயக்கனோ ,இஸ்லாமிய நவாப்போ மனுதர்ம கொள்கையில் சிறிய சட்டம் கூட இயற்றவில்லை இப்பொழுதும் அப்படி சட்டமில்லை […]

அவன் இந்துவும் இந்தியனுமாக ஆகிவிடவே கூடாது

தமிழகத்தில் இஸ்லாமியர் அக்காலத்தில் இருந்து உருது மற்றும் அரபுமொழி படிப்பார்கள், அது தவறே இல்லை 1960க்கு முன்பு வரை லத்தீன் கத்தோலிக்க ஆலயங்களில் வழக்கில் இருந்திருக்கின்றது, அந்த இடத்தை பின் ஆங்கிலம் பிடித்து கொண்டது இங்கு அரேபிய மொழிகள் கற்கலாம், ஐரோப்பிய மொழிகள் கற்கலாம், ஆனால் இந்தி மொழியும் சமஸ்கிருதமும் கற்கவே கூடாது விடவே மாட்டார்கள். தமிழன் அரேபியனாகலாம், ஐரோப்பியனாகலாம் ஆனால் அவன் இந்துவும் இந்தியனுமாக ஆகிவிடவே கூடாது

முன்னாள் நாம் தமிழர் கட்சி

திமுக ஏன் முன்னாள் நாம் தமிழர் கட்சி என அழைக்கபடுகின்றது என்றால் இந்த வெற்று சவுடாலுக்குத்தான் 1950களில் திமுக முழக்கங்கள் இன்றைய தும்பிகளின் ரீங்காரத்தைவிட சுவாரஸ்யமானவை

பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார்

பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார் முதன் முதலில் பறையர் மகாசன சபையினை தொடங்கினார், முதன் முதலில் பறையர் என்ற இதழை அந்த மக்களுக்காக நடத்தினார் அன்று அச்சு ஊடகங்களே அதிகம் இல்லா நிலையில் அவரின் இந்த முயற்சி நிச்சயம் அதிசயமானது, தாழ்த்தபட்டோருக்கான இந்தியாவின் முதல் குரல் அவருடையது அன்றே கல்வி கற்றிருந்தார், சிந்தித்தார். தென்னாப்ரிக்கா எல்லாம் சென்று மக்களின் அடிமை நிலையினை உணர்ந்தார் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக அவர் ஒலிக்க ஒலிக்க […]

ஒரு பெரியாரிஸ்ட் எப்படி பெருமைக்குரிய காங்கிரஸ் உறுப்பினராக இருக்கமுடியும்

ஒரு பெரியாரிஸ்ட் எப்படி பெருமைக்குரிய காங்கிரஸ் உறுப்பினராக இருக்கமுடியும்? பிரியாணி மாஸ்டருக்கு சைவ சித்தாந்த கழகத்தில் என்ன வேலை? ராகுல்காந்தி தானொரு பெருமைக்குரிய ஆர்.எஸ்.எஸ்க்காரன் என சொல்லமுடியுமா? இந்த கிறுக்கு செறுக்கி பயவுள்ளைக்கு ஒன்றுமே தெரியாது போல….. ஒருவேளை அட்மின் பயல் சரியில்லையோ?, அவனை மாறுகால் மாறுகை வாங்கிவிட வேண்டியதுதான்

ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது

சுவிட்சர்லாந்தில் ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது, ஆம் அங்கு மணமகனுக்கு மணமகள் தாலிகட்டி 3 முடிச்சு போட்டிருக்கின்றாள் காலம் மாறிவிட்டதல்லவா, அதனால் மனைவியே இப்பொழுது நான் ஒழுங்காக சமைப்பேன், போன் எடுக்கமாட்டேன், சத்தியமாக சந்தேகபடமாட்டேன் என பல முடிச்சுகளை போடுகின்றார்களோ என்னமோ? இது ஈழதமிழருக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் கன்னட மக்களுக்கு புதிது அல்ல சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே அங்கொரு சீர்திருத்தவாதி இருந்தார் அவர் பெயர் பசவண்ணா இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் […]

புரட்டாசியில் எதற்கு விரதம்

புரட்டாசியில் எதற்கு விரதம் என சிலர் கேட்கலாம், அவர்கள் அறிவு அவர்கள் சிந்தனை முன்னோர்கள் வகுத்து வைத்த ஏற்பாடு இப்படித்தான் சொல்கின்றது , அதாவது சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி, ஜாதகவிதிபடி அது 6ம் இடம் அது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என சாஸ்திரத்தில் சொல்லபடும் , அது வேறொன்றுமில்லை கடன், நோய் மற்றும் எதிரிக்கான இடம் இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடா விஷயங்கள் ஆனால் இந்த மூன்றும் மிகுவதோ, […]

பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம் இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள் இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள் முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு […]