பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் ஏன் ஒழிந்து நாசமாயிற்று?

திமுக காட்டிய பிரிவினைவாதமும் குறிப்பாக ஈழவிவகாரங்களில் இந்திய ராணுவத்தை அவர்கள் அவமதித்த விதமும் ராஜிவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லா விஷயங்கள் அமைதிபடை சென்றபொழுது பிரபாரனின் வளர்ப்பு தந்தையான ராமசந்திரனே அமைதியாக இருந்தபொழுது திமுக குதித்தகுதியினை அவர் ரசிக்கவில்லை ராமசந்திரன் மறைந்தபின்பு முரசொலிமாறன் மூலமாக ஆண்டன் பாலசிங்கம் திமுகவுக்குள் ஊடுருவியதையும் அதன் பின் திமுகவின் ஆட்டம் அதிகமாக இருந்ததையும் கண்டு மனம் நொந்தார் ராஜிவ் விபிசிங் அரசில் திமுக அமைதிபடையினை வாபஸ் பெற்றபொழுது அதை வன்மையாக கண்டித்தார் ராஜிவ் பிரபாகரன் […]

அப்படி ஒரு வெறிபிடித்த மிருகம் அவன்

அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப் முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க தனி தீவில் அடைத்திருக்கின்றது, மகா ஆபத்தானவன் அவன் அவனை போலவே புலிகளில் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சிவராசன், ஒற்றைகண் சிவராசன் அவன் இயற்பெயர் […]

ராஜிவின் கனவு நனவாக வேண்டும் என இப்பொழுது நினைப்பவர் யாருமில்லை

சென்னை திருப்பெரும் புதூரில்தான் ராஜிவ் கொல்லபட்டார், அவரின் நினைவிடம் அங்குதான் அமைக்கபட்டிருக்கின்றது நிச்சயம் காந்தி, இந்திரா கொலைகளுக்கு பின்னர் பரிதாபமானதும் அதே நேரம் கொடூரமானதும் ராஜிவின் மரணம் நிச்சயம் தமிழக முதல்வர்கள் அங்கு அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும் ஆனால் தமிழக முதல்வர்கள் யாராவது சென்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை ஏனென்றால் அதுதான் அரசியல் ஜெயாவும் கலைஞரும் அதில் மிக கருத்தாய் இருந்தார்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்ட காட்சிகள் பழனிச்சாமி அட்டகாசமாக விளைவுகளை பற்றி கவலை இன்றி ஆள்கின்றார் […]

ராஜிவ் நிச்சயம் இந்திய வரலாற்றில் தவிர்க்கமுடியாதவர்

ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர். 16 […]

அந்த செய்தி மிக சுவாரஸ்யமானது

அந்த செய்தி மிக சுவாரஸ்யமானது மருத்துவ சிகிச்சையால் கணவன் நலம்பெறாமல் போகவும் மனமுடைந்த பெண்மணி ஒரு மாந்ரீகனை நாடியிருக்கின்றாள் அவனும் வழக்கம் போல உன் நடு வீட்டுக்குள் தகடு புதைக்கபட்டுள்ளது, பணம் கொடுத்தால் பூஜை செய்ய நான் ரெடி ஆனால் தகட்டை நீதான் தோண்ட வேண்டும் என சொல்லிவிட்டான் பெரும் தொகையினை வாங்கிவிட்டு அவனும் சுருட்டை குடித்தபடி கிளம்பிவிட்டான் இந்த அப்பாவி பெண் அவன் சொன்னபடி நடுவீட்டில் தோண்டியிருக்கின்றாள் அதுவும் தகடு தகடு என காக்கிசட்டை சத்யராஜ் […]

தமிழக அவமானம்

காஷ்மீர் விவகாரத்துக்காக டெல்லியில் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக அறிவித்திருக்கும் போராட்டம் , தமிழக அவமானம் கலைஞர் மீனுக்கு தூண்டிலிட்டவர், அவர் மகனோ தவளைக்கும் முதலைக்கும் தூண்டிலிட்டுகொண்டிருக்கின்றார் அதையும் சில பதர்கள் ஆஹா, ஓஹோ என சொல்லிகொண்டிருக்கின்றன, அவர்கள் அறிவு அவ்வளவுதான் சீனபோருக்கு பின்பு தடை செய்யபடும் நிலையிலிருந்த திமுகவினை அண்ணா மீட்டு தேசியத்தில் கலந்தார் ராஜிவ் கொலையில் சிக்கிய திமுக தடை செய்யபடும் அளவுக்க்கு சென்ற பொழுது வைகோவினை பலிகொடுத்து கலைஞர் கட்சியினை காத்தார் இருமுறை […]

அவனுகளும் அவனுக சுயமரியாதையும்

வெள்ளையன் காலத்தில் அவர்கள் பெயர் சுய மரியாதைக்காரர்கள், நம்மை போன்றவர்கள் பெயர் சுதந்திர போராட்ட தியாகிகள் சுதந்திர இந்தியாவில் அவர்கள் திராவிடன் நாம் இந்தியர் பின்பு நேரு காலத்தில் அவர்கள் இனமான தமிழர், நாம் ஆரிய அடிவருடி இந்திரா காலத்தில் அவர்கள் மானமுள்ள தமிழர்கள், நாம் அடிமை புத்தி கொண்ட கூட்டம் ஈழசிக்கல் உருவெடுத்த காலத்தில் அவர்கள் வீரதமிழர்கள், நாம் தமிழின துரோகி இப்பொழுது அவர்கள் திராவிட தமிழர்கள், நாம் சங்கி ஆக அவர்கள் அதே பிரிவினை […]

மேலும் புதிய மாவட்டங்கள் அறிவிக்கபடலாம்

மேலும் புதிய மாவட்டங்கள் அறிவிக்கபடலாம் , தமிழக அரசு சூசகம் போகிற போக்கை பார்த்தால் ஊருக்கொரு மாவட்டம் இருக்கும் போல‌ மாவட்டங்கள் அதிகவாவது விரைவில் மாநிலம் இரண்டாக பிரியும் என்பதற்கான அறிகுறி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றார்களோ என்னமோ? அதற்கென்ன? ஏற்கனவே சேர, சோழ, பாண்டிநாடு என்றும் கடையேழு வள்ளல்கள் என பலரும் பல நாடுகளை ஆண்ட‌ மாநிலம்தானே தமிழகம்..

மிஸ்டர் திருமா? இதெல்லாம் என்ன வகை அரசியல்?

இஸ்லாமியருடன் திருமா நோன்பிருக்கட்டும் ஆனால் என்றாவது இந்துக்கள் விரதநாட்களில் இருந்தாரா என ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விக்கு மிக விவரமாக பதில் சொன்னார் திருமாஎன்ன சொன்னார்?எந்த இந்துவாவது என்னை வைகுண்ட ஏகாதசி போன்ற நோன்புக்கு அழைக்கின்றார்களா என கேட்டார்?இஸ்லாமியர் மட்டும் இவரை காலில் விழுந்தா அழைத்தார்கள்?ஆனால் அதே திருமாவுக்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பொழுது மட்டும் இந்துக்கள் ஆலயத்தை தேடி சென்று அவர்கள் ஆதரவினை கேட்க முடிகின்றதுவோட்டுக்கு என்றால் இவர் தேடி ஓடுவாராம், ஆனால் விரதம் என்றால் […]

வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்..

தொடக்கத்தில் இருந்தே திமுக என்பது சலம்பல் கட்சி, காலத்திற்கும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் சுத்தமாக பொருந்தாத வாதங்களை வைத்து வெட்டி அரசியல் செய்தது வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்.. அதை வைத்து போராட்டங்களை தூண்டி ஏதோ செய்துகொண்டிருந்தது அந்த அரசியலுக்கு பெரியாரிசம் திராவிடம் என சொல்லிகொண்டும் இருந்தது பெரியார் இருந்தபொழுதே அவரை பிரிந்து அரசியல் நடத்திய திமுக பின்பற்றியது பெரியார் கொள்கை ஆம் சத்தியமாக அதுதான், ஏதாவது புரிகின்றதா? புரியாது. ஒரு பிரச்சினைக்கும் அது முடிவு சொன்ன […]