பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்

1967ல் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைய இருந்ததையும் அதை அண்ணாவும் அவர் அமைச்சரவையும் விரட்டி அடித்த கதையும் தற்போது வெளிவருகின்றன‌ விஷயத்தை கிளறியிருப்பது நம்பி நாராயணன் எனும் மூத்த விஞ்ஞானி எனும் வகையில் அது உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் 1967 காலத்தையும் கவனித்துபார்க்க வேண்டும் அப்பொழுது இந்தியாவினை மகா வெறுப்புடன் பார்த்த நாடு அமெரிக்கா, 1965 பாகிஸ்தானிய போரில் இந்தியா வென்றதும் சோவியத் […]

கவனிக்கதக்க விருது

சுதந்திர தின விழாவில் அபினந்தனுக்கு விருது கொடுத்தது வரவேற்கதக்க விஷயம், இன்னொரு கவனிக்கதக்க விருது ஒன்று உண்டு அது சாதுர்யமான செயல்பாட்டுக்கு கொடுக்கபடும் யுத் சேவா விருது, பெற்றிருப்பவர் மிந்தி அகர்வால் எனும் பெண் அதிகாரி அம்மணி என்ன செய்தார்? கடந்த பிப்ரவரி 27ல் அவர்தான் பாகிஸ்தான் இந்தியாமேல் தாக்குதல் நடத்த வருவதை அவதானித்திருக்கின்றார், அதாவது அன்று காலை பாகிஸ்தான் வான்பகுதி மூடல் எனும் அறிவிப்பு அவருக்குள் பொறியினை தட்டியிருக்கின்றது சட்டென்று பயணிகள் விமானம் இயக்க தடை […]

நமக்கெல்லாம் அது வேணாம்..

யோவ், ஆப்கானிஸ்தானெல்லாம் கட்டி அழ முடியாதென அமெரிக்காவும் ரஷ்யாவுமே தலைதெறிக்க ஓடிவிட்டன, நமக்கெல்லாம் அது வேணாம்.. தாய்லாந்து எனும் உல்லாசபுரியினை நீக்கிவிட்ட உன்னை வன்மையாக கண்டிக்கின்றோம் தாய்லாந்தை இணைப்போம், தடையற்ற இன்பம் காண்போம்

உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது

இங்கு என்னதான் காஷ்மீர.. என சிலர் ஒப்பாரி வைத்தாலும் உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது ஆம் பாகிஸ்தான் விரக்தியின் உச்சத்துக்கு போய்விட்டது, நேற்று அவர்களின் சுதந்திரதிருநாள் வாழ்த்து மொகாரி ராகம் ஆகிவிட்டது சீனா ஏதாவது உருப்படியாக செய்யும் என அது மிக எதிர்பார்த்த நிலையில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு பின் சீனா காட்டும் அமைதி பாகிஸ்தானுக்கு பலத்த அதிர்ச்சி வழக்கமாக சுதந்திரநாள் என்றால் இந்தியாவினை பிளப்போம், காஷ்மீரை மீட்போம், இஸ்லாமியரை காப்போம் என்றெல்லாம் கோஷமிடும் […]

அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல.

உலகமே புலிகளை தடை செய்து மொத்தமாக சேர்ந்து அவர்களை மண்டையில் போட்ட காலத்தில் தமிழகத்தில் சிலதுகள் ஒப்பாரி வைத்துகொண்டிருந்தன‌ உலகம் அந்த கோஷ்டிகளை ஒருமாதிரி பார்த்தது, “என்னடா இது? உலகுக்கே ஒரு இயக்கம் பிடிக்கவில்லை என்றால் இவர்களுக்கு மட்டும் எப்படி பிடிக்கின்றது?” என விசித்திரமாக பார்த்து கடந்தது இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் உலகமே இந்தியா பக்கம் நிற்கும் பொழுது தமிழகத்தில் சில குரல்கள் கேட்க “அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல..” என மறுபடியும் பார்த்து அசட்டு […]

திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம் அந்த குடும்பத்தில் ஒரு நாய் வளர்த்திருக்கின்றார்கள், குறிப்பாக அந்த குடும்பத்து தலைவி அந்த நாயினை பாசமாக வளர்த்திருக்கின்றார். தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடனில் குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடிவிட்டான் அந்த குடும்ப தலைவன். மிகுந்த கடனும் அவமானமும் சூழ ஒருகட்டத்தில் தற்கொலை செய்கின்றாள் அந்த பெண். வீழ்ந்து கிடக்கும் அவள் அருகில் காவல் இருக்கின்றது அவள் வளர்த்த நாய் அவள் சடலத்தின் அருகே யார் சென்றாலும் குரைகின்றது, கடிக்க […]

சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்?

சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்? உங்கள் நாட்டின் சம்பிரதாயம் என்ன என நேருவிடம் கேட்டார் மவுண்ட்பேட்டன் அதாவது சம்பிரதாய சடங்குகள் ஏதும் உண்டா என்பது மவுண்ட்பேட்டனின் கேள்வி, நேருவிடம் அதற்கு பதில் இல்லை அவர் ஆத்திகர் ஆத்திகராயினும் பெரும்பான்மை மக்களின் மனம் புண்படாவண்ணம் ஏதும் செய்தாக வேண்டும், காந்தி வேறு ஒரு மாதிரி என எண்ணிய நேரு ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் ராஜாஜி தேர்ந்த சாஸ்திர ஞானி என்பதால் சட்டென சொன்னார், தமிழக வழக்கபடி ஆட்சிமாற்றத்தின் […]

உங்கள் அன்பிற்கும் தேடலுக்கும் நன்றி…

அந்த ஐடி தற்காலிகமாக முடக்கபட்டாலும் இந்த ஐடிக்கு வந்துவிட்டோம் என்றவுடன் ஏராளமான அன்பர்கள் ஓடிவந்து சேருகின்றார்கள் அனுதினமும் இவ்வளவுபேர் நம்மை நோக்கிகொண்டுதான் இருந்திருக்கின்றார்கள் என்பதும், நம்மை தேடிக்கொண்டிருந்திருக்கின்றார்கள் என்பதும் இப்பொழுதுதான் புரிகின்றது “அந்த ஐடியினை முடக்கிய சண்டாளனே, நீ வாழ்க…”, உன்னால்தான் பல விஷயங்கள் தெரிகின்றன‌ நிச்சயம் வெட்டியாக எழுதவில்லை, ஏராளமானோரின் அபிமானத்தை பெற்றிருக்கின்றோம், நம்மை நம்பி பின் தொடர்கின்றார்கள் என்பதே மிக்க மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான விஷயம் உங்கள் அன்பிற்கும் தேடலுக்கும் நன்றி… வாழ்க தலைவி குஷ்பு.. […]

உம்மை பெற்றதில் பெருமை கொள்கின்றது நாடு

என்ன சொல்லுங்கள், அன்று தேர்தலுக்கு ஆதரவு எனும்பொழுதும் மூப்பனார் எனும் தேசியவாதியினைத்தான் அவர் ஆதரித்தார் எந்த குறுகிய மாநில கட்சியினையும் மகா குறுகிய பிரிவினை சித்தாந்த கட்சிபக்கம் அவர் தலை வைத்தும் படுக்கவில்லை இன்றும் இந்தியனாக தன் கருத்தை சொன்னார், சர்ச்சைகள் வந்தபொழுதும் நல்ல இந்தியனாக அதில் தொடர்ந்து நிற்கின்றார் தேசாபிமானியும் மிக சிறந்த உறுதியினை நாட்டுபற்றில் காட்டும் ரஜினிகாந்த் என்பவரை வாழ்த்துகின்றோம் உம்மை பெற்றதில் பெருமை கொள்கின்றது நாடு..

ஒப்பாரி வைத்து அழுதிருக்கின்றார் பெரியார்

அன்றே சுதந்திரம் பெறுவது பொறுக்காமல் ஒப்பாரி வைத்து அழுதிருக்கின்றார் பெரியார் அவர் வழி வந்தவர்களுக்கு மட்டும் தேசம் ஒன்றாக இருப்பது பொறுக்குமா என்ன?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications