பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உங்கள் கதி என்னாகும் என்பதற்கு ஈழமே சாட்சி

பாலஸ்தீனம் கதறி பார்த்தது அழுது பார்த்தது ரத்தம் சிந்தி பார்த்தது ஏன் பெண்கள் அட குழந்தைகள் கூட இண்டிபாதா என வந்து கையெடுத்து வணங்கி நின்றது கலங்கா கண்களும் கலங்கின, ஆனால் இந்த உலகில் அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? திபெத்துக்கு என்னாயிற்று? அட திபெத் என்ன? வளமான ஹாங்காங் 4 மாதமாக திமிறி நிற்கின்றது பெரும் ஆர்ப்பாட்டம் ஆனால் என்னாயிற்று 2009ல் ஈழத்தில் என்னாயிற்று, இன்றுவரைதான் என்னாயிற்று? உலக நீதி என்பது அதுதான் அவனவன் அழுகையினை […]

அவனுகளும் அவனுக டிராமா பிக்பாஸும்

ஏதோ பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து ஜெனரல் சரவணன் என்பவர் சாகசமாக தப்பி வந்தது போல் சிலிர்ப்பான சம்பவத்தை பல பத்திரிகைகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌ அவனுகளும் அவனுக டிராமா பிக்பாஸும்

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது என்பது இதுதான்

அன்றே ஜெயலலிதா காஷ்மீர் பற்றி அப்படி பேசினார் இப்படி பேசினார் என ஏக குரல்கள் உண்மையில் அவர் பேசினார் ஆனால் எழுதியது சோ ராமசாமி குரலோ ஜெயாவின் குரல் அந்த 1980களில் கலைஞரிடம் தோற்றுகொண்டிருந்த ராமசந்திரனுக்கு மக்கள் ஆதரவு குறிப்பாக தாய்குலங்கள் ஆதரவினை தக்க வைக்க ஜெயா தேவைபட்டார் நிச்சயம் அந்த இடம் சரோஜாதேவிக்கானது ஆனால் அவர் மறுத்தபட்சத்தில் ஜெயாவினை இழுத்துவந்தார் ராமசந்திரன் வந்த நாளில் இருந்து ஆர்.எம் வீரப்பன் கோஷ்டிக்கும் ஜெயாவுக்கும் பொருந்தவில்லை கட்சிக்கும் முட்டல் […]

ஹிரோஷிமாவில் இன்று மனித குலம் எடுக்க வேண்டிய சபதமும் அதுதான்

அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று. சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது அது, இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், ஏதோ மூட நம்பிக்கையாளன், இந்துஸ்தான் […]

தென்னக எல்லையிலும் அந்த உரிமையை மீட்டு எடுங்கள்

அமித்ஷாவிடம் தமிழர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் அந்த கச்சத்தீவை மீட்க வேண்டாம் சர்வதேச அரசியல் படி அது முடியவும் முடியாது ஆனால் அந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அங்கு தங்கி ஓய்வு எடுக்கவும் வலை காய வைக்கவும் அதன் அருகே மீன் பிடிக்கவும் உரிமை உண்டு இந்திராகாந்தியும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் செய்து கொண்ட ஒப்பந்தம் அதை தெளிவாக சொல்லுகிறது பின்னாளில் இலங்கை அதை மீறி துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அந்த உரிமையை இல்லாமல் செய்துவிட்டது பல […]

அவமானத்துக்குரியது

என் பதிவினை பகிருங்கள் அதை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதை எடுத்து உங்கள் பெயரில் நீங்களே எழுதுவது போல் எழுதுவது எப்படி என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும் அதனால் எம் பெயரை சேர்க்காமல் என் பதிவுகளை திருடி சொந்த பெயரில் பதிவிட்டு கொண்டிருக்கும் நண்பர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் இந்த நிலை தொடருமானால் நீங்கள் யாராக இருந்தாலும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள் அவனவன் நம் பதிவுகளை திருடி அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு […]

கச்சதீவு

மிஸ்டர் அமித்ஷா அப்படியே கச்சதீவு ஒப்பந்தத்தையும் கிழித்து போட்டு அதை மீட்டெடுங்கள் பார்க்கலாம் அதை மட்டும் செய்யுங்கள், கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயம் அருகே உங்களுக்கும் ஒரு ஆலயம் அமைக்க பக்தாள்ஸ் ரெடி கச்சதீவினை மீட்ட கச்சநாதன், கச்சத்தை மீட்ட கச்சதலைவன், கட்டழகன் என ஏக டைட்டிலும் ரெடி தாமரை ராமேஸ்வரம் பக்கமாவது மலரும்.

குபீர் பெரியாரிஸ்டுகள்

பெரியார் காஷ்மீரில் இருந்து இந்தியாவினையும் பாகிஸ்தானையும் வெளியேற சொல்லி அம்மக்களே அவர்களுக்கான முடிவினை தேடசொன்னார் : குபீர் பெரியாரிஸ்டுகள் அப்படிபட்ட பெரியார் பாகிஸ்தான் காஷ்மீர் மேல் படையெடுக்கும் பொழுது தன் திராவிட படையான அண்ணா கலைஞர் நெடுஞ்செழியன் அன்பழகன் போன்றவர்களை அழைத்து ஏன் தடுக்கவில்லை தளபதி அண்ணா இருக்க என்ன கவலை? அவரும் அவர் கவலையும்.. ஆனால் அந்த பெரியார் கடைசி வரை பிரிட்டிஷ்காரனை இந்தியாவினை விட்டு போ என சொல்லவே இல்லை அவன் சென்ற அன்றும் துக்கதினம் […]

இன்னொரு வகையில் நோக்குங்கள்

அந்த 370ம் சட்டபிரிவினை இன்னொரு வகையில் நோக்குங்கள் ஆம் காஷ்மீர் பாதுகாக்கபட்ட பிரதேசம், அந்நியர் யாரும் உட்புக முடியாது, தொழில் தொடங்கமுடியாது ஏகபட்ட கட்டுபாடுகள் என அந்த பிரிவு நேற்றுவரை சொல்லிற்று இவை எதில் முடிந்தன? தலைநகரில் இருந்து தொட்டுவிடும் தூரத்திலிருந்தும், பஞ்சாபின் லூதியானா போன்ற தொழில் நகரங்கள் அருகிலிருந்தும் காஷ்மீர் வளரவில்லை வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது, காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் […]

அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்

காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் அப்செட் ஆப்பசைத்து வாலை மாட்டிகொண்ட குரங்குபோல, இல்லை வேறு எதுவோ மாட்டிகொண்ட ஆண்குரங்கு போல எல்லாம் அமைதி மயம் ஒரு குரலும் அதை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை இப்பொழுது அந்த பெண் சிங்கத்தை நினைத்து பார்க்கின்றேன், அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார் ஆம் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று பெரும் வரவேற்பை கொடுத்து தமிழக தேசநலனை காட்டியிருப்பார் ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கட்டும், தேசாபிமானமிக்க தமிழக அரசியல்வாதியாக அவர் ஒருவர்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications