பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

திப்பு சுல்தானின் புகழை ஒழித்துகட்ட இந்த கோஷ்டி கிளம்பியிருப்பது சரியல்ல, அது கண்டிக்கதக்கது வீர சிவாஜிபோலவே மாவீரன் திப்பு திப்புவின் திறமையும் அவனின் ஆற்றலும் போரும் மத சகிப்புதன்மையும் அளப்பறியது அவனின் மைசூர் சமஸ்தானம் அன்று இன்றைக்கு ஜெர்மனிக்கு நிகரான பொருளாதர பலம் கொண்டிருந்தது முதன் முதலில் ஏவுகனை தயாரித்தது அவனே, அது இன்றும் அமெரிக்காவில் உண்டு நெப்போலியன் மதித்து போற்றிய மாவீரன் திப்புசுல்தான், உலகில் எந்த வீரனுக்கும் அந்த பெருமை இல்லை மத சகிப்புதன்மைக்கும் திப்பு […]

கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்

முத்தலாக் சட்டம் உடனே நிறைவேற்றபடுவதும், அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் எனும் வரைவு கிடப்பில் போடபட்டிருப்பதும் புன்னகைத்து கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்

உடனே வெளியேறுவது நல்லது

திப்பு கொலைகாரன் கொள்ளைக்காரன் என வரிந்துகட்டும் சங்கிகள் உடனே வெளியேறுவது நல்லது. திப்பு மைசூர் சமஸ்தானத்தை காக்க போராடினான் என முடக்கினால், வீர சிவாஜி யாரை காக்க போராடினான்? அவனுக்கு ஏன் அவ்வளவு பெரும் சிலை? பா.ரஞ்சித்தும் நீவீரும் எமக்கு ஒரே வரிசையே

House Keeping தொடங்கியாயிற்று

கவனியாது விட்ட வீடு கரையானும் பாம்புகளாலும் நிறைவது போல ஏகபட்ட சங்கிகள் இங்கு புகுந்திருக்கின்றன‌ ஏதோ பெருந்தன்மையானவர்கள், நாட்டுபற்றாளர்கள் என நினைத்தால் பூராவும் மதவெறி, அப்பட்டமான மதவெறி அப்படிபட்ட கொடூர சங்கிகளுக்கு, எபோலா நோயினை விட மோசமான கிருமிகளுக்கு இங்கு இடமில்லை House Keeping எனப்படும் பராமரிப்பு வேலையினை தொடங்கியாயிற்று

தீர்த்தகிரி

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார். பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் […]

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு

இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக பல சர்ச்சைகள் வெடித்திருகின்றன‌ வறுமையும் திண்டாட்டமும் எல்லா சாதியிலும் உண்டு சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது சாதியத்தினை சாதி அரசியலை ஊக்குவிக்கும், அதனால் சாதி ஒழியாது சர்ச்சை ஓயாது பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடே வறுமைபட்டவர்கள் வாழ வழி, சாதி என்பது ஒழிந்து போகவும் அதுவே சரி

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : செய்தி

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : செய்தி புலிகள் என்பது பலத்தின் அடையாளம் மட்டுமல்ல, புலிகளின் எண்ணிக்கையே காட்டுவளப்பத்தின் அடையாளம் வளமான காடுகள் பெருக பெருக புலிகளும் பெருகும் என்பது விலங்கு சூழியல் சொல்லும் தத்துவம் ஆக நாட்டில் புலிகள் பெருகியிருப்பது நல்லவிஷயம், ஆனால் மதவாதம் பெருகுவது ஆபத்தான விஷயம் அது இருக்கட்டும் மோடி ஏன் பியர்ஸ்ஜி என்பவருடன் காட்டுக்கு சென்றார்? புலியினை அடுத்து யானை,முதலை, காட்டுபன்றி, காட்டுமாடு எல்லாம் பெருக்கும் திட்டம் அவரிடம் இருக்கலாமோ?

மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்

நமக்கு திமுக மேல் எப்பொழுதும் ஒரு அனுதாபம் உண்டு. அதன் சில கருத்துக்களும் சர்ச்சைகளும் சிக்கலே தவிர அவர்களின் பல திட்டங்கள் அருமையானவை அண்ணாவும் கலைஞரும் தமிழ்நாட்டின் பெரும் பிம்பங்கள், எக்காலமும் அவர்களின் கருத்துக்கள் இந்தியா இருக்குமளவும் இங்கு எதிரொலிக்கும், காலத்துக்கும் அந்த குரல் தேவை இதனால் திமுகவினை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துகொள்வதுண்டு நாம் இணையத்தில் வலம் வருபவர்கள் என்றாலும் , இணையம் மாபெரும் ஊடகம் என்பதாலும் இங்கும் திமுகவின் அடையாளங்கள் எப்படி இருக்கின்றது என நோக்குவதுண்டு […]

தனி மறைமாவட்டம் வேண்டும்

அது உழைப்பவர் இயக்கம்? வேறு எவனுமே உழைக்கவில்லையா? ஆளுக்கொரு சாதியினை பிடித்து தொங்குவது, அதை சொன்னால் கிறிஸ்துவத்தில் சாதி இல்லை என சிரிக்காமல் சொல்வது நாடார் பாதிரிகளுக்கு தனி மறைமாவட்டம் வேண்டும் , அதில் அமோகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என நேரடியாக கேட்டால்தான் என்ன?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications