பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா …

இந்த செல்போனை உடைக்கிறது, ஏதாவது பேசி சிக்கிறது எல்லாம் இப்போதான், இந்த 77 வயசுலத்தான் ஆனா 17 வயசுல பழனிச்சாமி கவுண்டரா படம் வரைய சென்னைக்கு கிளம்புறப்போ அப்படி இல்ல, ரொம்ப பவ்யம், பணிவு, ஒரு வார்த்தை கூட யாரையும் காயபடுத்தமாட்டேன் அந்த குணம்தான் என்ன நடிகனாக்கிச்சி, எனக்குண்ணு ஒரு ஒரு கவுரவத்தை கொடுத்திச்சு ராமசந்திரன், கலைஞர், ஜெயலலிதான்னு எல்லோரும் என்ன மதிச்சாங்க. இப்போ வரைக்கும் ஜெயாவும் கலைஞரும் கலந்துகிட்ட ஒரே கல்யாணம் என் வீட்டு கல்யாணம்தான் […]

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம்

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம், மலரட்டும் கிழக்காசியாவின் விவசாய நாடு தாய்லாந்து, நிச்சயம் வளமான பூமி ஆனால் விவசாயம் மட்டுமா வாழவைக்கும்? இன்னபிற தொழில்கள் இல்லாததால் போதையின் பாதைக்கு அது கொலம்பியா போல திரும்பும் ஆபத்து இருந்தது ஆனால் வியட்நாம் யுத்தமும் இன்னும் சில நிகழ்வுகளும் அதனை மாற்றின‌ சில பல காரியங்களை சேர்த்து சுற்றுலா நாடு என அது அறிவிக்கபட்டபின் அதன் முகம் மாறியது இன்று உலகில் சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று, […]

நிச்சயம் அந்த விளையாட்டும் ஒருபக்கம் நடந்து கொண்டேதான் இருக்கும்

பண்டைய காலங்களில் ஒரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் சில காரியங்களை செய்வார்களாம் அதாவது எதிரிநாட்டின் பசுக்கள் எங்கெல்லாம் மேயுமோ அங்கெல்லாம் சென்று அதை கொள்ளையிடுவார்களாம், கொள்ளை போன பசுக்களுக்காக அரசன் சண்டைக்கு செல்வானாம் யுத்தம் தொடங்குமாம் இது கிருஷ்ணபரமாத்மா காலத்தில் இருந்து புறநானூறு காலத்தில் தொடர்ந்து வெள்ளையனுக்கு முந்தைய காலம் வரை இருந்தது அப்படித்தான் இப்பொழுது ஈரானுடன் போரினை தொடங்க அதன் கப்பல்களை சீண்டிகொண்டிருக்கின்றார்கள் வளைகுடா பகுதியில் ஈரானுக்கும் அதன் எதிர் கோஷ்டிக்கும் அறிவிக்கபடாத கப்பல் […]

மறக்க கூடியவரா அந்த பாரதிராஜா..

அவர்மேல் சில சர்ச்சைகள் இருக்கலாம், சில இடங்களில் உணர்ச்சிவசபட்ட பேச்சு இருக்கலாம், இளவயதின் கசப்பான அனுபவங்களும் கிராமவாசிகளுக்கே உரிய சில வைராக்கியங்களும் இருக்கலாம் ஆனால் தமிழின் மிகசிறந்த இயக்குநர், இந்த தமிழக கிராமங்களின் யதார்த்தத்தை அப்படியே கொஞ்சமும் மாற்றாமல் திரையில் முதலில் காட்டியவர் என்ற பெருமை அவரை தவிர யாருக்குமில்லை கிராமத்து மனிதராக கிளம்பி கிராம வாழ்க்கையினை திரையில் காட்டி தனக்கான தனி இடம் தேடிகொண்டவர் அந்த பாரதிராஜா தமிழக சினிமாவின் வரலாற்றை கவனித்தால் புரியும், அது […]

எசமான் சொல்லுங்க..

யாரு மோடியா? ஆமாம்ஜி , டிரம்ப்ஜியா? டிரம்ப்ஜி இல்ல டிரம் D.. Donalad Trump எசமான் சொல்லுங்க.. யாருய்யா அது அத்திவரதர், ஒரே பரபரப்பா இருக்கு? அய்யா அவர் சக்தியுள்ள தெய்வமுங்க, 40 வருஷத்துக்கு ஒருவாட்டிதான் அவர் சிலைய பார்க்கமுடியுமுங்க, நினைச்சி வந்து வணங்கினா நல்லதுநடக்குமுங்க‌ இஸ் இட்? எனக்கும் ஒரே பிரச்சினை. வடகொரிய அதிபர் சீன அதிபரோட சேர்ந்து சிரிக்குறான். ஈரான பக்கமே போகமுடியல ஒரு பயலும் கூட வரமாட்டேங்குறான், சிரியாவுல தோல்வி, வென்சுலாவிலும் புட்டீன் […]

தொல்காப்பியன்

தொல்காப்பியன் என்பவர் காந்தியோடு தென்னாப்ரிக்க சிறையில் இருந்தவர் என்பதும் பின்பு சுதந்திர போராட்டத்தில் காமராஜரோடு 11 வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் இவ்வளவு நாளும் தெரியாமலே மறைக்கபட்டிருக்கின்றது. கக்கன் போலவே காமராஜருக்கு வலது கரத்தின் வலதுகரமாக அவர் உழைத்ததும் மறைக்கபட்டிருகின்றது இம்மானுவேல் சேகரன் கொலையும் முதுகுளத்தூர் கலவரமும் காமராஜருக்கு சிக்கலை ஏற்படுத்திய காலங்களில் , இந்த தொல்காப்பியனே தனி மனிதனாக சென்று எல்லா கலவரங்களையும் அடக்கியிருக்கின்றார் அந்த மாமனிதனின் புகழ் அவர் ஒரு தலித் என்பதால் மறைக்கபட்டிருக்கின்றது, […]

தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌

கோவைக்கு அடுத்தபடியாக நாகை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிகொண்டிருப்பது சோகம் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நாகையில் நடத்தும் கைதுகளும், அதை தொடர்ந்து வரும் செய்திகள் சரியானவை அல்ல‌ முன்பு இதே கிழக்கு கடற்கரைக்கும் புலிகளுக்குமான கடத்தல் போக்குவரத்தில்தான் இந்நாட்டு பிரதமரையே இழந்தோம் இப்பொழுது வேறுவடிவில் தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌ மிகபெரும் நடவடிக்கை எடுத்து இந்த களைகளை முளையிலே பிடுங்காவிட்டால் பின்னொரு நாளில் மாபெரும் விலையினை கொடுக்க நேரிடும்..

கலைஞர் மனம் வெறுத்திருந்தார்

கடைசி காலங்களில் ராமதாஸ் போன்றோருடன் எல்லாம் அரசியல் செய்த கலைஞர் மனம் வெறுத்திருந்தார் அந்த மைனாரிட்டி திமுக அரசு எனும் வார்த்தை அவரை ஈட்டியாக குத்தியெடுத்த நேரமது , காங்கிரஸின் தயவில் அவரின் ஆட்சி ஓடிகொண்டிருந்தது “நேரு, இந்திரா என பெரும் ஜாம்பவான்களோடு அரசியல் செய்த நான் இந்த ராமதாஸ் , விஜயகாந்த் போன்றோரோடு அரசியல் செய்ய வேண்டுமா?” என தன்னை மீறி கட்சியில் நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசியதாக செய்திகள் வந்தன‌ அந்த காலகட்டத்தில் கலைஞர் […]

இதிலென்ன ஆச்சரியம்?

கோப்பையினை வென்ற இங்கிலாந்து அணியில் பலர் வெளிநாட்டு வீரர்கள் : செய்தி இதிலென்ன ஆச்சரியம்? வெறும் 200 பேரோடு இந்தியா வந்த கிளைவ் இங்கேதான் கூலிக்கு ஆள்பிடித்து போர் நடத்தி இந்தியாவினை அடிமைபடுத்தினான் 1930களில் 1 லட்சம் பேரே இருந்த பிரிட்டன் படை உள்ளூர் இந்தியர்களை வளைத்து போட்டு 30 கோடி மக்களை இந்தியாவில் ஆண்டது அவர்கள் வரலாறே அப்படித்தான், இதில் அவர்களின் கிரிக்கெட் அணிமட்டும் விதிவிலக்கா?

நில உச்சவரம்பு சட்டம்

நில உச்சவரம்பு சட்டத்தில் மூப்பனார் செய்த காரியம் தெரியுமா?, உக்கடை தேவர் செய்த சாதுர்யம் தெரியுமா? விஸ்வநாத தேவர் செய்த அட்டகாசம் தெரியுமா? இதெல்லாம் 1960களிலே சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியவர் கலைஞர் நில சுவாந்தார்களின் பினாமியான டிரஸ்டுகளையும் இன்னபிற அறகட்டளைகளையின் உண்மை முகத்தையும் சட்டசபையில் கிழித்தெறிந்தவர் கலைஞர் என உபிக்கள் கடும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கின்றன‌ இதே காலகட்டத்தில் பசும்பொன் தேவரும் தனக்கு சொந்தமான நிலங்களை பலவாறு பிரித்து கொடுத்து நில சீர்திருத்த காலங்களில் சிக்கல் வராதவாறு காத்துகொண்டார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications