பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைய துளிகள் 25/06/2019(1)

நடிகர் சங்க தேர்தலில் மோடி தலையீடு இருக்கலாம், வாக்குபெட்டியில் முறைகேடு செய்ய ஏற்பாடு என‌மன்சூர் அலிகான் சந்தேகம் சந்தேகம் எங்கெல்லாம் செல்கின்றது பார்த்தீர்களா? சும்மாவே கள் குடித்த குரங்குக்கு கஞ்சா கொடுத்தால் என்னாகும்? ஏற்கனவே அரைகிறுக்கனான மன்சூர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தபின் இப்படி உளறாவிட்டால்தான் ஆச்சரியம்.. அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி அதிமுகவினரை விமர்சித்தால் பாஜக எம்பிக்கள் ஏன் கொதிக்கின்றார்கள்? அங்கு அடித்தால் இங்கு […]

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால்

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால் நாசாவினையும் அதற்கு படியளக்கும் அமெரிக்க அரசையும் ஆம் மாபெரும் பொருட்செலவில் பிரபஞ்ச ரகசியங்களை அறிய அமைக்கபட்ட அந்த அமைப்பு அதை எல்லாம் விடுத்து என்ன காரியம் செய்கின்றது தெரியுமா? திருநள்ளாறு ஆலயம், சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை எல்லாம் தன் செயற்கை கோள்கள் மூலம் கடும் ஆய்வினை செய்து வருகின்றது அட கொடிமரம், தெப்பகுளம் என எதனையும் அது விடுவதில்லை அந்த ஆய்வுமுடிவினை போகிற போக்கில் […]

ஏன் என்றால் இங்கு அப்படித்தான்.

கனிமொழி சிறையில் அடைக்கபட்டால், இல்லை அவர்மேல் குற்றசாட்டு வந்தவுடனே ஆளாளுக்கு குதித்தார்கள் இந்தோனேஷிய தீவினை கலைஞர் வாங்கிவிட்டார், ஊட்டி எஸ்டேட் முழுக்க வாங்கிவிட்டார் அய்யகோ போயஸ் கார்டனை தவிர எல்லா சொத்தையும் திமுக வாங்கி குவித்தது என ஒரே சத்தம் கனிமொழி சிறையில் இருக்கும் போது 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி டோவ், அதை 1 ரூபாயாக மாற்றி அடுக்கினால் நிலாவுக்கு எட்டும் டோவ் என கடும் சத்தம் எவ்வளவு செய்திகள்? எவ்வளவு கட்டுரைகள்? எவ்வளவு […]

வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]

அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்

இசை என்பது பிராமணரின் அடையாளம் என்பது கச்சேரி மேடை தாண்டி சினிமா வரை இருந்தது அது எங்கள் குல சொத்து என கொண்டாடியதை முதலில் உடைத்து போட்டவர் இளையராஜா அவரையும் முதலில் விட்டார்களா? இது இசையே இல்லை, சாவுக்குத்து மேளம் என்றெல்லாம் விரட்டினார்கள். ஆனால் நின்று சாதித்தார் இளையராஜா (ஆனால் உண்மையான காட்டு அடியினை கொடுக்கும் அனிருத் என்பவர் மேல் சர்ச்சை வராது, காரணம் அவாள் எல்லாம் வேறு வகை) இளையராஜாவின் வரவுக்கு பின்பு பிராமணர் அல்லா […]

நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை

சுதந்திரம் வாங்கி மக்களாட்சி வந்து கிட்டதட்ட 73 ஆண்டுகள் ஆகின்றது இன்றைக்கு கூட, அதுவும் வெளிநாட்டில் பணியாற்றும் பிராமண பெண் இன்னொரு இனத்துக்காரனை திருமணம் செய்யும் நிலையில் அவள் தாய்க்கு எவ்வளவு மிரட்டல்? இன்றே அதாவது மாறிவிட்ட காலங்களிலே இவ்வளவு மிரட்டல் என்றால் பாரதியார் எவ்வளவு அவமானபடுத்தபட்டிருப்பார்? பாரதிக்கு முந்தின காலங்கள் எப்படி இருந்திருக்கும்? நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை பட்டமரத்திற்கே இந்தபாடு என்றால் பச்சை மரம் என்னபாடு பட்டிருக்கும்? என் அருமை பாரதியே, […]

அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி சொன்னது தமிழக பிரச்சினை இதற்காக இலங்கை தமிழன் எல்லாம் பொங்குவதை ஏற்க முடியாது இதெல்லாம் நாம் தமிழர், தொப்புள்கொடி, 7 தமிழர் என எங்கோ திசை திருப்பும் முயற்சி ரஞ்சித் தமிழக தமிழர், அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை இதை கேள்வி கேட்க கடல் கடந்த எந்த பயலுக்கும் உரிமை இல்லை, அதை தரவும் முடியாது. ராஜ ராஜ சோழன் தமிழக தமிழ் மன்னன், அவனை சீண்டியதும் தமிழன் […]

அரசியல் ஞானம் என்பது அதுதான்

தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்குமான மோதல் பட்டவர்த்தனமாக தெரிந்தாயிற்று இனி என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை எல்லா பலங்களும் விழ்ந்து நின்ற துரியோதணன் நிலையில் தனியாக நிற்கின்றார் டிடிவி தினகரன். ஒரு 5 வருடத்திற்கு முன்னால் கூட தங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சசிகலாவோ, தினகரனோ எதிர்பார்த்திருக்க முடியாது நன்றி என்பதும், விசுவாசம் என்பதும் கொஞ்சமும் எதிர்பார்க்கமுடியாத இடம் அரசியல் யார் எப்பொழுது முதுகில் குத்துவார்கள் என்பது தெரியாது, அன்றிலிருந்து அதாவது ஜூலியஸ் சீசர் […]

எது “பொட்டைதனமான அரசியல்”?

எது “பொட்டைதனமான அரசியல்”? தாய்குலங்களின் வாக்குக்காக அம்மா அம்மா என அன்றொருவர் அலறிகொண்டிருந்த அந்த அரசியல்.. இரு பெண்களை முன்னிறுத்தி பின்னிருந்து நடராசன் என்பவர் 25 ஆண்டுகளாக செய்த அந்த அரசியல் எல்லா சர்ச்சையிலும் மகா ரகசியமாக திமுகவினை முன்னிறுத்திவிட்டு பின்னால் பதுங்கிகொண்டு ஒன்றுமே தெரியா கன்னிபோல வலம் வந்த அந்த அரசியல்.. ஒரு கொள்கையுமில்லா கட்சியாக, திட்டமே இல்லா ஆட்சியாக வலம் வந்த அந்த அரசியல்.. “பொட்டதனமான அரசியல்” என்பது அவர்களுக்கு புதிதே அல்ல.. இதில் […]

போர் ஆமாம் போர்..

நாம் தமிழர் தும்பிகள், திராவிட இம்சைகளை அடுத்து அடுத்த சுற்று சண்டை சங்கிகளோடு தொடங்கிவிட்டது.. போர் ஆமாம் போர்.. ஒரு மனிதனுக்குத்தான் எவ்வளவு சோதனை? எங்கிருந்துதான் இந்த வயலில் மட்டும் இவ்வளவு களைகள் முளைக்கின்றன என தெரியவில்லை, இங்கு மட்டும் களைகளாக பெருகிகொண்டே இருக்கின்றன‌ என்ன செய்வது? களைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை. திருவையாறும் அந்த “கரை நாடக” இசையும் பிராமணருக்கு மட்டுமானது அல்ல, அல்லவே அல்ல. அதற்கு முன்பே அந்த இசை இருந்தது, நாயக்க மன்னர்களின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications