பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைய உலகில் “பிக் பாஸ்..”

வரவர அமெரிக்காவின் பொருளாதார தடைகளை உலகம் கண்டு கொள்வதாக தெரியவில்லை “அவனுக்கு வேலையே அதுதான், அதை எல்லாம் பார்த்தால் வாழமுடியுமா? ஆனாலும் அவனை இனி மதிக்க கூடாது” என பல நாடுகள் கிளம்பிவிட்டன. ஈரான் அதில் முரட்டு நாடு. அதுவும் ரஷ்யாவும் கை கோர்க்கின்றன‌ “உனக்கு நான் ஆயுதம் தருவேன், நீ எண்ணெய் வியாபாரத்தை எனக்கு போட்டியாக யாரும் வராத அளவு நடத்திகொள்ளவேண்டும், அமெரிக்கா கிடக்கின்றது விடு..” என்ற அளவில் ரஷ்யாவுக்கும் ஈரானுக்குமான உறவு அமைந்துவிட்டது. கிழக்கே […]

அந்த அணையினை தமிழகமே கட்டி பராமரிக்கட்டும்

மேகதாது அணைக்கு கடும் எதிர்பினை தமிழகம் கொடுக்கின்றது, பல முறை காவேரியில் பாதிக்கபட்ட மாநிலம் இன்றும் பாதிக்கபடும் மாநிலம் என்ற வகையில் தமிழக நிலைப்பாடு சரியானது ஆனால் கன்னடமோ நாங்கள் மின்சாரம் தயாரிக்க வேண்டும், இன்னும் சில காரியங்களுக்காக நீரை தேக்குவோமே அன்றி நிச்சயம் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யமாட்டோம் என சொன்னதையே சொல்கின்றது ஒரு இந்தியனாக சொல்வதென்றால் காவேரியில் வெள்ளம் வரும்பொழுது கடலில் கலந்த நீரின் அளவு எல்லோருக்கும் தெரியும் அதனால் கூடுதலாக ஒரு அணை கட்டுவது […]

மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகின்றார்

அமெரிக்காவின் இரண்டாம் சர்வ சக்தி படைத்த நபரான மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகின்றார். ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்க கூடாது வாங்கினால் எப் 21 ரக விமானத்தை தரமாட்டோம் . ஈரானிடம் இருந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் கூட வாங்க கூடாது என அமெரிக்கா மிரட்டி கொண்டிருக்கும் நிலையில் மைக் பாம்பியோவின் வருகை பெரிதும் எதிர்ப்பார்க்கபடுகின்றது மனிதர் முன்னாள் சி.ஐ.ஏ தலைவர். பெரும் ரகசியங்களின் கருவூலம். பெரும் பிரபலங்களின் ரகசியங்களை, நாடு, ராணுவ ரகசியங்கள் […]

என்னது சூடுபட்டாரா?

என்னது சூடுபட்டாரா? முதலில் இவரின் …..ல் சூடு வைத்து அமெரிக்காவின் குவாண்டமாவோ தீவு சிறைக்கு அனுப்ப வேண்டும். நாட்டை மறுபடியும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இழுத்து செல்ல ஒரு கூட்டம் கிளம்பியிருக்கின்றது, இவர்களை முளையிலே கிள்ளி கடலில் தள்ளுவதே சமூகத்துக்கு நல்லது

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார் அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது 1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம் மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் […]

விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது

இரு நாட்களுக்கு முன்பு ஈரான் மேல் போர் என உத்தரவிட்டிருக்கின்றார் டிரம்ப் முன்பே குறித்துவைக்கபட்ட இலக்குகள் மேல் முதல்கட்ட தாக்குதலை நடத்தி ஈரானை அதிரவைக்க உத்தரவிட்டிருக்கின்றார் ஆனால் ஏதோ பெரும் காரணத்துக்காக ராணுவம் தாக்க மறுத்துவிட்டது ஈரானை அடித்தால் எங்கோ உதைக்கும் என்பதும், அதன் விளைவுகள் சாதாரணமாய் இராது என்பதும் அமெரிக்க ராணுவ தலமைக்கு தெரிகின்றது இது ஈரானை தாக்க தகுந்த நேரம் அல்ல என கருதுகின்றார்கள், அப்படியே வேறு ஏதோ ஒரு முடிவுக்காக அல்லது தகவலுக்காக […]

பெரியவர் Manickavasagam Muthuswamy

அந்த பெரியவர் Manickavasagam Muthuswamy பெருந்தன்மையானவர் என்பதாலும், நிச்சயம் தவறாக கருதமாட்டார் என்பதாலும் எழுதுகின்றோம் அவர் வள்ளியூரின் முதல் மருத்துவர், 1950களிலே மருத்துவரானவர், ஆனால் சாதியால் பிற்படுத்தபட்டவர் அக்காலங்கள் கடுமையானவை என்பார்கள், அந்த அக்ரஹாரத்தில் மற்ற சாதியினர் நடமாட முடியாது என்பதும், தெரியாமல் அந்த வீதியில் நுழைந்துவிட்டால் செருப்பை கையில் எடுத்து குனிந்தபடி மற்றவர் நடக்க வேண்டும் என்பதெல்லாம் அக்கால விதியாம் அந்த காலத்திலே அக்ரஹாரத்து பிராமண பெண்ணுக்கு இவர்மேல் காதல் வந்திருகின்றது “நம்பியவரை கைவிடல் மானிட தர்மமாகாது..” என […]

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர். சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் […]

சிக்கல் தீர்ந்துவிடும்

அவன் கருப்பனாக இருக்கட்டும், ஆப்ரிக்க வம்சமாக இருக்கட்டும் ஆனால் மனிதன், எல்லோரையும் போன்ற மனிதன். அவன் சுதா ரகுநாதனின் மகளை திருமணம் செய்வதில் யாருக்கு என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை சுதா ரகுநாதன் பத்ம விருது வாங்கியவராம், இந்த மும்மூர்த்திகள் எனப்படும் திருவையாறு கோஷ்டியில் தலமை பாடகியாம் மகளின் திருமணத்தை அங்கீகரித்தார் என்பதற்காக அவர் பத்ம விருதை திருப்பி கொடுக்க வேண்டுமாம், திருவையாறு சந்நிதியில் பாட கூடாதாம். நவீன தீண்டாமை என்பது இதுதான். அவன் இந்துமதம் தழுவுகின்றான் […]

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம்

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம் பல உண்டென்றாலும் அவரின் மிக சிறந்த நடவடிக்கை என்பது மாவட்டங்களின் பெயர்களிலிருந்தும், போக்குவரத்து கழகங்கள் பெயரிலும் இருந்த தலைவர்கள் பெயரை நீக்கியது முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, சிக்கல் 1990க்கு பின் சாதிய சங்கங்களும் கட்சிகளும் அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தபின் வந்தது பெரும் தலைவர்கள் சாதிய அடையாளமாக பார்க்கபட்டு, சாதி தலைவர்கள் பெயரில் மாவட்டம் வேண்டும், போக்குவரத்து கழகம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது அது போராட்டமுமானது யோசித்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications