பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போடா ஆரிய அடிவருடி, திராவிட எதிரி

15 வருடமாக மத்தியில் திமுக இருந்ததே, காவேரியில் திமுக நீர் பெற்று கொடுத்ததா? வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது இந்த நீட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இந்த ஹைட்ரோ கார்பன்? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இந்த 10% இட ஒதுக்கீடு? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இதற்கு தமிழகம் நீதிபதிக்கே வாக்களிக்கலாமே உங்களுக்கு எதற்கு? ஏன் அதிமுக பற்றி பேசமறுக்கின்றாய் அடேய் அவனுக மகா மோசம், அவனுகள விட நீங்க மோசம், ஒரு பிரச்சினையும் உங்க ரெண்டு கட்சியாலுமே […]

இந்தியாவில் இனி ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும்

புதுபுது விஞ்ஞானிகள் கிளம்புகின்றனர், அணு என்றால் என்ன தெரியுமா? அது எப்படி வெடிக்கும் தெரியுமா அனு தத்துவம் தெரியுமா என ஏகபட்ட கோஷ்டி அதில் எவனாவது அணுசக்தி படித்தானா? சர்வதேச அணுசக்தி கமிஷனில் படித்தானா? அட குறைந்தபட்சம் பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டரில் வாட்ச்மேனாக கூட இருந்தானா என்றால் இல்லை தனக்கு சம்பந்தமே இல்லா விஷயங்களை கொஞ்சமும் கூச்சமின்றி கத்தி சொல்வதில் தமிழனுக்கு நிகர் தமிழனே ஈழபோராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத சைமன் அள்ளிவிடுவான், அதையும் சிலர் […]

அவனுகளும் அவனுக மானமும்

இளையராஜா தன்மானமில்லாத தலித், அவர் மானத்தை விட்டுகொடுத்து சினிமாவில் நிலைத்தார். தன்மான தலித்தை அங்கு வளரவிடமாட்டார்கள் இப்படி ஒரு தன்மான தலித் கூட்டம் சினிமா உலகில் சுற்றி திரிகின்றது என்கின்றன செய்திகள் அதுபற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை, ஆனால் எம்.ஆர் ராதா திரையுலகம் பற்றி சொன்னது நினைவிருக்கின்றது “டேய், அது கூத்தாடி உலகம். மானம் வெட்கம் ரோஷம் உள்ளவன் அங்க இருக்கமுடியாது, சுத்த மானம்கெட்ட தொழில் ஒன்னு உண்டுண்ணா அதுதான் கலை நாடகம் நடிப்போம் முடியும்பொழுது கதாநாயகன் […]

சின்னபுள்ளைங்க புத்தி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அந்த விசித்திரமான விபரீதம் நடந்திருக்கின்றது. 17 வயது மாணவியர் கோவிலில் திருமணம் செய்திருக்கின்றனர் இதென்ன பெண் கழுத்தில் பெண் தாலிகட்டி, பெண் காலில் பெண்ணே மெட்டிமாட்டி .. என சந்தேகித்த மற்ற பக்தர்கள் அவர்களை விசாரித்திருக்கின்றனர் வரதட்சணை கொடுமைக்கு இப்படி கொடும் புதிய வழிகாட்டும் போராட்டமாக இருக்குமோ என்ற பயமெல்லாம் பலருக்கு வந்திருக்கின்றது.. அவர்கள் வயது மற்றும் ஒருவிதமான பரிதவிப்பு எல்லாம் உணர்ந்தவர்கள் காவல்துறைக்கு விஷயத்தை சொல்லிவிட்டனர் காவல்துறை அவர்களை அள்ளி போட்டுகொண்டு […]

அத்தியாவசிய தேவைக்கு அமைதி

“அற்ற குளத்து அறுநீர் பறவை போல்..” என்பார்கள் அது சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களுக்கும் பொருந்தும் போலிருக்கின்றது சென்னையில் நீரில்லாமல் வாழமுடியாது, அதனால் கிளம்புகின்றோம் எனசொல்லும் குரல் அதிகரிக்கின்றது இவ்வளவுநாளும் வாழ்ந்த ஊராயிற்றே, சோறும் நீரும் அங்கீகாரமும் இன்னும் என்னவெல்லாம் கொடுத்த மண் ஆயிற்றே எனும் நன்றி கொஞ்சமுமில்லை நிச்சயம் அந்த 60 லட்சம் பேரும் சேர்ந்து களமிறங்கினால் ஆடாத அரசும் ஆடும், பேசாத தலமையும் பேசும் பிழைக்கத்தான் வந்தோம், ஒழுங்காக அமைதியாக பிழைப்போம், முடியாவிட்டால் ஓடுவோம் […]

கரகாட்டகாரன் படம் வந்து 30 ஆண்டு ஆகிவிட்டது

கரகாட்டகாரன் படம் வந்து 30 ஆண்டு ஆகிவிட்டது என சில ரகளைகள் நாயகன் ராமராஜனுக்கே அது மறந்திருக்கலாம் எனினும் அன்றைய காலத்தில் அது மெகா ஹிட் திரைப்படம் நிச்சயம் கரகாட்டகாரன் படம் அந்த தில்லானா மோகனம்பாள் படத்தின் அப்பட்டமான காப்பி 6 வித்தியாசம் கூட கண்டுபிடிக்கமுடியா அளவு அப்படியே எடுத்திருந்தார்கள் ஒரே ஒரு வித்தியாசம் அந்த சிவாஜி ஆடமாட்டார், இங்கு ராமராஜன் ஆடுவதாக நடிப்பார் மற்றபடி அந்த நாகேஷ் பாத்திரம் சந்திரசேகராகவும், பாலையா பாத்திரம் அப்படியே கவுண்டமணியாகவும் […]

ஜெயமோகன் சர்ச்சை

ஏற்கனவே தன் கதைகளில் நாடார்களை மிக கேவலமாக சித்தரித்தார் என்ற சர்ச்சை ஜெயமோகன் மேல் உண்டு மேலாண்மை பொன்னுச்சாமி அதை மிக பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்,சுஜாதா அதை பட்டும் படாமலும் சொன்னார் இப்பொழுது நாடார் கடையில் வம்பிழுத்து சிக்கியிருன்றார் ஆசான் ஆசானுக்கு அடி மிக நன்றாக விழுந்திருக்கலாம், மிக சாதுர்யமாக “இது திமுகவின் அடி அல்ல, அல்ல அவர்கள் இப்படி எல்லாம் அடிக்கமாட்டார்கள், நல்லவர்கள் இது குடிகாரன் ஒருவனின் அடி..” என சொல்லி தப்புகின்றார். திமுகவினரிடமும் அடிவாங்க அவர் […]

திராவிட பலூன்

இதோ திராவிட பலூன் பெரியார் ஊதி, அண்ணா ஊதி உருவாக்கபட்ட திராவிட, தமிழர் மூச்சு பலூன் தனி தமிழ் மூச்சு பலூன், சுயாட்சி பலூன் அம்மையார் துர்கா வைத்திருக்கும் பலூன் கலைஞரின் மூச்சு காற்றினால் ஊதபட்டது, கடைசி இரு வருடமாக தலைவர் அவர்கள் மூச்சினை இப்படித்தான் பாதுகாத்தோம். ஆக அதை ஏலம் விடுகின்றோம்.. தமிழுக்காக தமிழருக்காக வாழ்ந்த தலைவர் டாக்டர் கலைஞரின் மூச்சு நிரம்பிய பலூன்.. ஒரு பலூன் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்… ஏலம் ஒருதரம்.. […]

மருத்துவ உலகம் போராட வந்திருக்கின்றது

கல்கத்தாவில் நடந்திருப்பது நிச்சயம் மாபெரும் கொடுமை, காட்டுமிராண்டிதனம் 82 முதியவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் உள்ளே புகுந்து மருத்துவர்களின் மண்டையினை அடித்து உடைத்திருக்கின்றது ஒரு இளம் மருத்துவர் இறந்தே விட்டார், இன்னும் சில மருத்துவருக்கும் செவிலியருக்கும் படுகாயம், சிலர் பிழைப்பது சிரமம் என்கின்றார்கள் அது போக ஏக கலவரங்களை செய்திருக்கின்றது, காவல்துறையும் அதை தடுக்கவில்லை மேற்குவங்கம் குண்டர்களின் கூடாரமாக ஆகிவருகின்றது என்பது சோகம் எனினும் இந்த மருத்துவர் உயிரிழந்திருப்பது […]

வரலாறு அதைத்தான் சொல்கின்றது

வாஞ்சிநாதன் சாதி வெறியன், ஆஷ் துரை தலித்துக்களுக்காக நல்லாட்சி செய்த ஆங்கிலேயன். பிராமணர் எல்லோரும் சாதிவெறி பிடித்தவர்கள் ஆங்கிலேயன் சமத்துவமும் கல்வியும் கொடுத்த உத்தமன் என சிலர் கிளம்பியாயிற்று அந்த உத்தமன் ஆங்கிலேயன் ஏன் தலித்துக்களை லண்டனில் மொத்தமாக குடியேற்றி வாழவைக்கவில்லை அட லண்டன் வேண்டாம், அவன் ஆட்சியில் இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா எல்லாம் அழைத்து சென்று “இதோ நீங்கள் கண்ட சமத்துவ தேசம், சாதிவெறி பிடித்த இந்தியா உங்களுக்கு வேண்டாம், இங்கு நீவீர் வாழ்வாங்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications