பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடன்பட்டான் நெஞ்சம் போல

இந்த தேர்தலை நிதானமாக எதிர்கொள்கின்றது திமுக, ஆம் அவர்களுக்கு இப்பொழுது எம்பிக்கள் என யாருமில்லை, இனி கிடைப்பது அவர்களுக்கு லாபம் 10 தொகுதி கிடைத்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆம் ஒன்றுமே இல்லாமல் இப்பொழுது இருப்பதை விட சில கிடைத்தாலும் மகிழ்ச்சி காங்கிரஸின் நிலையும் அப்படியே சிக்கல் அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இருக்கின்றது. 37 என்ற மாபெரும் எண்ணிக்கையுடன் வலம் வந்த கட்சி அதிமுக, அதை பறிகொடுக்க போகின்றார்கள் பரிதாபம் தினகரன் என்பவர் வெல்லவில்லை என்றால் சந்தி சிரித்துவிடும் , […]

சுயநல கூட்டம்

தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கின்றது, மக்களின் மனவோட்டம் பற்றியும் கணிப்புகள் வரதொடங்கியிருக்கின்றன‌ பெருவாரி மக்கள் இத்தேர்தலில் தனக்கு வேண்டிய கட்சியோ நபரோ வெற்றிபெற்றால் தனக்கு என்ன கிடைக்கும் அல்லது தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தவிர வேறு சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை அப்படி பழக்கபட்டுவிட்டது இச்சமூகம் இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் , இந்நாட்டை வழிநடத்த சரியான தலமை எது? என்பதைபற்றியோ யார் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது என்பது பற்றியோ சிந்திக்க யாரும் தயாராக இல்லை எல்லோர் நோக்கமும் […]

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள்

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன‌ ஆண்டிபட்டி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மகாராசனும் அதிமுக வேட்பாளர் லோகிராசனும் சகோதரர்களாம் இவர்களின் அன்னை யாருக்கு வாக்களிப்பார்? தினகரனுக்காக இருக்கலாம் எந்த விருதுநகரில் மாணிக் தாகூர் என்பவரிடம் வைகோ தோற்றாரோ அந்த மாணிக் தாகூருக்காக அங்கு பிரச்சாரம் செய்ய செல்கின்றார் வைகோ இது போக அங்கிள் சைமன் காமெடி வேறு, ஒரு ஆடியோவில் தும்பி ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது அங்கிள் கண்டிக்கின்றார் ஒரு கட்டத்தில் களமாடுவது யார் என்பதில் தும்பி […]

தேர்தல் துளிகள் 18/03/2019 (3)

அர்ரே பழ்னிசாமி நம்பிள் ராம்சந்தரோட காவல்காரன் படம் பார்த்தான் உடனே நம்பிள் காவல்காரன்னு பேர் வச்சிட்டான், தேங்க்ஸ் பையா அடடே, இது தெரிஞ்சா மாட்டுக்கார வேலன் சிடி கொடுத்திருப்பேனே அச்சா, அப்டியும் இருக்கா? உடனே நம்ப யோகிக்கு சிடி அனுப்பி வைங்க மேன், அவரும் பெயரை மாத்துவார்.. உன் தந்தை தெய்வம் தானய்யா…. எந்நாளும் உம்மோடும் எம்மோடும் அவர் மனம் வாழட்டும் “தாய் இல்லாத நேரம்தான் நீங்க தாய் கழகத்துக்கு வருவீங்கண்ணு அப்பா அடிக்கடி சொல்லுவாருங்க…”

தேர்தல் துளிகள் 18/03/2019 (2)

இருபக்கமுமே பாராளுமன்ற தேர்தலை பற்றி சொல்ல விஷயமே இல்லை அதிமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என திமுக தரப்பு கேட்டால் எதிர்கோஷ்டி ஒரே வார்த்தையில் இவர்களை அடக்கிவிட முடியும் ஆம் ஒற்றை வார்த்தை போதும் 10 வருடம் மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக இருந்தது, ஆனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த அந்த மன்மோகன்சிங் ஏன் வரவில்லை? எவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தால் அவர் வராமல் இருந்திருப்பார்? இந்த கேள்விக்கு காங்கிரசிடமே பதில் இல்லை எனும்பொழுது திமுகவிடம் எப்படி இருக்கும்? பாஜகவில் வாரிசு […]

சத்தமே இல்லை

அந்த 37 எம்பிக்களும் என்ன கிழித்தார்கள் என திமுக தரப்பு பெரும் குற்றசாட்டை முன்வைக்கின்றது சரி அதற்கு முன்பிருந்த திமுக எம்பிக்கள், 40/40 எடுத்த காலங்களில் எல்லாம் தமிழகத்திற்கு பெரிதாக என்ன செய்தார்கள், 15 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்தார்கள் என கேட்டால் சத்தமே இல்லை சத்தம் வரவும் வராது திமுக மத்தியில் இருந்தால் ஒன்றுமே செய்யாவிட்டாலும் விளம்பரம் கடுமையாக இருக்கும், அவர்களின் பிரச்சார ஊடக பலம் அப்படி மற்றபடி பெரிதாய் ஒன்றும் இருக்காது, […]

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல் இன்றைய காலத்தில் அல்ல எந்த காலத்திலுமே தவிர்க்க முடியாதது சுருக்கமாக சொல்லிவிடலாம், அதிகாரம் எங்கெல்லாம் உண்டோ அதை காக்கும் ஆசையும் எல்லோருக்கும் உண்டு மன்னர்களுக்கு பின் அவர்கள் வாரிசுகள் வருவது அப்படித்தான் ஜனநாயகம் என சொல்லிகொண்டாலும் கட்சி அரசியலும் அதிகாரம் தக்க வைக்கும் போட்டியே, மன்னர்காலம் போல ஆயுத வெட்டு குத்து இல்லை என்றாலும் மறைமுக வெட்டு குத்துக்கள் அதிகம் வாரிசு அரசியல் வடகொரியாவில் இருந்து இலங்கையின் பண்டாரநாயகே, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் , […]

தேமுதிக வேட்பாளர் பட்டியல்

இன்று பிரேமலதாவின் பிறந்தநாளையொட்டி தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபடுகின்றது “எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலைஅட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனைஉண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்கொண்டானைக் கொல்லும் படை” கணவன் சொல்லுக்கு அஞ்சாது ‘அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன், காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் கொடிய‌ நோய், கணவனுக்கு சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் குணத்தை கொண்ட பெண்டீர் கணவனுக்கான கொலைகருவி ஆவார்.

சகிக்கமுடியாததாக தெரியவில்லை

புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவரை புரட்சி தலைவரென்றும், தியாகத்திற்கு அர்த்தமே தெரியாதவரை தியாக தலைவியியென்றும், ஒரு களமும் காணாதவரை தளபதி என்றும் சொல்லிகொண்டிருப்பதை விட சவுக்கிட்டார் ஒன்றும் சகிக்கமுடியாததாக தெரியவில்லை அப்பக்கமும் ஒருவன் கரும்பை கடித்துகொண்டு நானே செந்தமிழன் என்கின்றார், அவரையெல்லாம் விட்டுவிடுவார்கள்

இவர்களுக்கு யார் கொடுத்தார்?

திராவிட பெயர்களான பேரறிஞர் , கலைஞர், புரட்சி தலைவன், தலைவி, தியாக தீபம் போன்ற பெயர்களை பற்றி சொன்னால் அதெல்லாம் அடுத்தவன் கொடுத்ததாம்? மகாத்மா, நேதாஜி, மூதறிஞர், கர்மவீரர் என்ற பட்டங்கள்தான் மக்களால் வழங்கபட்டது இவர்களுக்கு யார் கொடுத்தார்? மூதறிஞர் ராஜாஜி என அவர் அழைக்கபட்டால் இவர்கள் பேரறிஞர் என அண்ணாவினை அழைத்து கொண்டார்கள், இவர்கள் அழைக்காமல் ஐ.நா சபையா அழைத்தது? தளபதி என பாகிஸ்தான் அரசா பட்டம் கொடுத்தது? புரட்சி நடிகன் என அவரை திமுகவினரே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications