பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன கேள்வி?

ராகுலிடம் அதை கேட்க வேண்டும், இதை கேட்க வேண்டும் என ஏகபட்ட கேள்விகளை பாஜகவினரே எழுப்புகின்றார்கள் அதாவது அவரிடம் பல சிக்கல்களுக்கு தீர்வு உண்டு என நம்புகின்றார்கள் நல்லது ஆனால் மோடியிடம் தேசமே ஒரே ஒரு கேள்வியினைத்தான் வைக்கின்றது என்ன கேள்வி? “என்ன கிழித்துவிட்டீர்கள்? அல்லது எதை கிழிக்க போகின்றீர்கள்? எதற்காக உங்களுக்கு மறுபடியும் வாக்களிக்க வேண்டும்?”

அண்ணே யார் நீங்க?

“பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்து கண்களை குருடாக்க வேண்டும் அண்ணே யார் நீங்க? நான் ஞானவேல் ராஜா இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எடுத்தவர்தானே? எக்ஸாட்லி தட் மி மவனே, இம்மாதிரி சம்பவம் நடக்க முதல் காரணம் அந்த மாதிரி படங்கள்தான், முதலில் உமக்கு அந்த தண்டனையினை கொடுக்க வேண்டும்”

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன‌ இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது விஷயம் கசிந்தது இப்படித்தான் ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க […]

அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை ஆனால் ராணுவ கொடும்சாவு மற்றும் வெற்றிகளை பாஜக அரசியலாக்கும் அதை பற்றி எல்லாம் அக்கா பேசமாட்டார்

கலைஞர் டிவி சர்ச்சை

பொள்ளாச்சியில் கொடுமை நடந்திருக்கின்றது, ஆனால் 273 பெண்கள் 1200 வீடியோ என்பதெல்லாம் மிகைபடுத்தபட்டவை இன்னொரு விஷயமும் கவனிக்கதக்கது பொள்ளாச்சி எனும் அதிமுக கோட்டை தவிர இன்னொரு இடத்தில் இக்கொடூரம் நடந்தால் இவ்வளவு முக்கியத்துவம் வந்திருக்குமா என தெரியவில்லை நாம் இதை எந்த கோணத்திலும் சொல்லவில்லை, அக்கயவர்கள் தண்டிக்கபட வேண்டும், அந்த வேட்டை நாய்கள் வீழ்த்தபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை நக்கீரனின் அப்பணி வாழ்த்துகுரியது ஆனால் சந்தடி சாக்கில் கலைஞர் தொலைகாட்சியின் பல சர்ச்சைகள் மறைக்கபடுகின்றது அதாவது […]

நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது

நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது சிறை அவருக்கு நிம்மதியாக இருந்திருக்கும், இனி அவர் சந்திக்கபோகும் காட்சிகள் அவருக்கு நிச்சயம் மகிழ்வாய் இராது நிச்சயம் யாருக்காக இதை செய்ய முயற்சித்தார் என்பதை அவரால் ஒருகாலமும் சொல்லவும் முடியாது, சொல்லாமல் இச்சமூகத்தை எதிர்கொள்ளவும் முடியாது மிக நெருக்கடியான காலங்களை இனிதான் கடக்க போகின்றார் நிர்மலா தேவி, நிச்சயம் பழைய இயல்பான வாழ்க்கை இனி அவருக்கு வாய்க்காது

2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது

பரம வைரிகளான இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையில் ஏற்பட்ட காதல் இது. பிரிக்கபட்ட எல்லையில் அப்பக்கம் இஸ்ரேலிய இளைஞனும் இப்பக்கம் பாலஸ்தீன பெண்ணும் முத்தமிடுகின்றார்கள் அதுவும அந்நாட்டு கொடியோடு 2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது இதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்தால் என்னாகும்? சங்கிகள் மாரடைப்பிலே செத்துவிடும் அல்லது சயனைடு கடித்து செத்துவிடும்

வாசிப்பு பழக்கமா?

எல்லாம் “நாம் தமிழர்” ஆதித்தனார் தொடங்கி வைத்த பத்திரிகை மற்றும் தமிழ் வாசிப்பு புரட்சி தமிழர்களிடையே எப்படி எல்லாம் “வாசிப்பு பழக்கத்தை” அந்த ஆதித்தனார் கூட்டம் ஏற்படுத்திற்று என இனியாவது புரிந்து கொள்ளுங்கள் 70 வருடமாக திருந்தாத ஒரே கூட்டம் இந்த கூட்டம்தான்

சட்டத்தை கையில் எடுப்பது தவறான முன்னுதாரணம்

நடந்தது மிகபெரும் கொடுமை சந்தேகமில்லை, அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்தால் நாடு தாங்காது, அது சரியும் அல்ல‌ நல்லதோ கெட்டதோ சட்டத்தின் மூலம் அவர்களை தண்டிப்பதே சரி சட்டத்தை விடுங்கள், இத்தனை லட்சம் காரி துப்பிய பின்பு , இனி அவர்கள் சமூகத்தில் தலைகாட்டமுடியாது என்றபின்பு, அவன் கடக்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் அவனை மனதார கொல்லும் பொழுது அதைவிட என்ன தண்டனை வேண்டியிருக்கின்றது அதெல்லாம் விட முக்கியம் அவனை பெற்றவர்களும் அவன் குழந்தைகளும் உறவுகளும் […]

வாழ்க்கைக்கு தேவை தத்துவ கல்வி

“உன் மகளுக்கு இன்முகம் காட்டாதே, அவள் மணமாகி செல்லும்வரை அவள் மேல் கண்ணாயிரு, அவள் நடவடிக்கைகளை கண்காணித்துகொள், இல்லையேல் பிறர்முன்னால் நீ அவமானபட நேரிடும் பிரம்பை கையாளாதவன் தன் மகனை பகைக்கின்றான், அவனை சிறுவயதில் இருந்தே ஞானத்திலும் முன்னோர் மொழியிலும் வளர்க்கடவாய், ஏனெனில் பிள்ளைகள் வழியாகவே பெற்றோர்கள் தன்மை உலகிற்கு அறியபடும்” இதெல்லாம் யூதபழமொழி, சரியாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது “எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்”. நல்ல பிள்ளைகளை வளர்த்தால் 7 பிறப்பிலும் தீமை வராது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications