பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அஞ்சலி போதுமே

நாடு இருந்தால்தான் இங்கு ஆரியம் திராவிடம் தலித்தியம் பெரியாரியம் அம்பேத்காரியம் வெங்காயம் ஆதிதமிழரியம் , இட ஒதுக்கீடு தட ஒதுக்கீடு இன்னும் ஏகபட்ட இம்சைகள் எல்லாம் பேசமுடியும் உண்மையில் இம்மாதிரி இம்சைகளுக்கு வாழ்வு அளித்துகொண்டிருப்பது இந்தியா எனும் மாபெரும் நாடே ஒருவேளை இவர்கள் நினைத்தது போல தனி திராவிட நாடோ தனி தமிழ்நாடோ, தனி தலித்நாடோ கிடைத்தால் என்னாகும்? ஒன்றும் ஆகாது இவர்கள் அரசியல் செய்ய ஒன்றுமே இருக்காது, தலைவெடித்து செத்துவிடுவார்கள் தலை என்ன? இதோ காஷ்மீரில் […]

அவசியமா?

காஷ்மீர் தாக்குதலுக்கு நிர்மலா சீத்தாராமன் பதவி விலக வேண்டும் என சில அரைவேக்காடுகள் பேசிகொண்டிருக்கின்றன‌ சரி அவரை பதவி விலகிவிட்டு யாரை அமர்த்த வேண்டும் என்றால் முக ஸ்டாலினை என்பார்கள 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவும் இருந்தது, காந்தகார் விமான கடத்தல் முதல் கார்கில் போர் வரை அப்பொழுதுதான் நடந்தது அப்பொழுதெல்லாம் ஒரு திமுகவினர் அந்த வாஜ்பாய் அரசை குற்றம் சொல்லவில்லை காரணம் இவர்கள் அந்த அமைச்சரவையில் இருந்தார்கள் அதனால் நாட்டுபற்று நிரம்ப வழிந்து “ஒற்றுமையே பலம், […]

கருப்பு நாள் 14/02/2019

கோவையில் கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லபட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கும் போதேகாஷ்மீரில் அதே பாகிஸ்தானிய கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் நம் வீரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள் இந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உருவாக்கமான ஜெய்ஷ் இ முகமட் எனும் தீவிரவாத அமைப்புக்கும் இந்தியாவுக்கும் கடுமையான மோதல் எப்பொழுதும் உண்டு 1994ல் அதன் தலைவனான மசூத் அசாரை பிடித்து சிறையில் இட்டது இந்தியா, அதன் பின் கொஞ்சகாலம் அடங்கி இருந்தார்கள் வாஜ்பாய் காலத்தில் அவர்களாலும் அவர்களின் சகல பாடிகளான லஷ்கர் போன்ற இயக்கங்களாலும் கார்கில் […]

ரோமாபுரி ராட்சசன் : 03

கால் எனப்படும் பகுதி இன்றைய பிரான்ஸும் அதை சார்த்த எல்லை பகுதியாக இருந்தது, அட்டகாசமாக ஆடினான் மகா அற்புதமான போர் அது எந்த ரோமபடையும் வெல்ல முடியாத அந்த கவுல் பகுதியினை மிக அழகாக கைபற்றிகாட்டினான் ஜூலியஸ் சீசர் அவன் வெறும் தளபதி மட்டுமல்ல கட்டடம், கலை, இலக்கியம் இன்னும் பலவற்றில் ரோம் வீரர்களை பயிற்றுவித்திருந்தான், இதனால் ஜூலியஸின் படை காட்டுபடை அடியாளாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் அற்புத படையாக இருந்தது ஏன் கவுல் பகுதியினை ஜூலியஸ் […]

இன்றைய துளிகள் …

ஏராளமான சமூக பணிகளை செய்திருக்கின்றார் அனில் அம்பானி : செய்தி பாருங்க அமித்ஜி, அனில் அம்பானிக்கு நாம எவ்வளவு செஞ்சிருப்போம், எப்படி எல்லாம் உதவியிருக்கோம்? ஆனா அதை எல்லாம் வெளியில் சொல்லமுடியுமா? இதுதான் அரசியல் ஆமா மோடிஜி கட்டட‌ அஸ்திவாரமும் மரத்தோட‌ வேரும் வெளியில் தெரியுமா என்ன? ************************************* தமிழகத்தில் பாஜக அமைப்பதுதான் பலமான கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன் திருமலை நாயக்கர் மகால் தூணில் கூட்டணியாக ஏறி அமர்ந்து கொள்வார்கள் போல… ************************************************************************ வருடமெல்லாம் காதலர் தினம் […]

சிதறல்கள்

கருணாநிதி தமிழர் இல்லை என்பது திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே வரும் ஒருவித செய்தி ராம சந்திரன் மலையாளி என திமுக கொக்கரித்த காலத்தில் கலைஞர் எப்படி தெலுங்கு வம்சம் என பலத்த ஆதாரங்களோடு சொன்னது அதிமுக, அதெல்லாம் வரலாறுகலைஞரே அதுபற்றி அலட்டிகொள்ளவில்லை என்பதுதான் உண்மை குஷ்பு அதை புதிதாக ஒன்றும் சொல்லவில்லை, தமிழகம் சொன்னதைத்தான் ஏன் சொல்வதைத்தான் சொன்னார் அதற்குள் திமுக காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் நெருக்கடி கொடுத்து குஷ்புவினை கண்டிக்க போகின்றது என திமுக உபிக்கள் […]

காதல் கீதம்

எத்தனை கவிஞர்கள் வரட்டும் உருகி உருகி காதலிக்கவும் அக்காதல் தோற்றுவிட்டால் கதறி கதறி பாடவும் ஒரு கவிஞன் தமிழில் உண்டென்றால் அது சாட்சாத் டி.ராஜேந்தர் “ஒரு தலை ராகம் முதல்” ஏராளாமான படங்களில் அவர் எழுதிய அளவு காதலின் வலியினையும் சோகத்தையும் அவர் எழுதிய அளவு இன்னொருவன் எழுத முடியாது வர்ணனை, வார்த்தை, ஆழம், பாசம், சோகம், ஏக்கம் என கலந்து கட்டி அவர் அடித்த அளவு இந்த நூற்றாண்டில் இன்னொருவன் இல்லை கண்ணதாசன் பாடலில் காதலிலும் […]

காதலர் தினம்

போராடங்களுக்கு பஞ்சமில்லா நாடு இந்தியா, ஆனால் எதற்கு போராடவேண்டுமோ அதற்கு நிச்சயம் போராடமாட்டார்கள், அதாவது விட்டுவிடலாம் ஆனால் சில போராட்டங்களுக்கு மூளையினை விற்றுவிட்டு முட்டாள்களாக வருவார்கள் அதிலொன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம் இவர்கள் சொல்வதென்ன? காதலர் தினம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. நாங்கள் கலாச்சாரம் காக்க கிளம்பியவர்கள் விடமாட்டோம் இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு […]

ராகுல் & ப்ரியங்கா

அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார் ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் “இந்திரா வம்சத்தை வேறறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன‌ முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் […]

இன்றைய துளிகள்…

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் காட்டில் புலியின் நடமாட்டம் : இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி இதுவும் மோடிஜியின் சாதனை, காங்கிரஸ் ஒழித்த புலிகளை மோடி காப்பாற்றினார் என இனி பலர் கிளம்புவார்கள் ______________________________________________________________________________ மகாத்மா காந்தி சுட்டுகொல்லபட்டதை பேசியபொழுது கதறி அழுதார் வைகோ ஆனால் ராஜிவ்காந்தி கொல்லபட்டது பற்றி எல்லாம் அன்னார் பேசவும் மாட்டார், அழவும் மாட்டார் அதனால் உருப்படவும் மாட்டார் _____________________________________________________________________________ தலைவி குஷ்பு மீது மறுபடியும் சர்ச்சை கிளப்ப கிளம்பிவிட்டார்கள் சதிகாரர்கள், சண்டாள பாவிகள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications