பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“அண்ணா நாமம் வாழ்க”

ச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் […]

வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரங்கள்

வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரங்கள், அங்கு பணியாற்றும் இந்தியர் நலனுக்காக இயங்குபவை என சொல்ல்படுகின்றது, அவர்களை தவிர யார் இந்தியருக்கு உதவ முடியும்? எனக்கு 2009ல் திருமணமானது, அதை சென்னை அரசு அலுவலகத்தில் பதிந்து சான்றிதழும் வாங்கியாயிற்று, மூத்தமகளுக்கு அதை காட்டி 2011ல் பாஸ்போர்ட்டும் வாங்கிஆயிற்று இப்பொழுது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்க சென்றால் திருமண சான்றிதழ் செல்லாதாம், 2011ல் இதே சான்றிதழுக்குத்தானே கொடுத்தீர்கள் என்றால் அந்த அதிகாரியோடு மல்லுகட்ட முடியவில்லை அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை, எனக்கு இந்தி […]

திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்” நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் […]

பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை

புழல் சிறை நவீனமான கட்டபட்டது, அதன் திறப்பு விழாவில் கலைஞர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கின்றது “இந்த சிறை சகல வசதிகளும் நிரம்பியது என்பதற்காக குற்றவாளிகள் இங்கேயே தங்க நினைக்க கூடாது..” என தனக்கே உரித்தான ஸ்டைலில் முடித்திருந்தார் திமுக ஆட்சி முடிந்து கிட்டதட்ட 8 ஆண்டுகளில் அதிமுக அரசு அந்த வசதிகளை பன்மடங்கு பெருக்கி இருக்கின்றது அதாவது கிட்டதட்ட தாஜ் ஹோட்டல் அளவிற்கு வசதிகள் நிரம்பி இருக்கின்றன, சொகுசுஅறைகளாக பல படங்கள் வருகின்றன‌ அரசு சிறையினை […]

மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா

ராஜிவ் கொலையின் பொழுதே கொலையுண்ட ராஜகுரு போன்ற காவலர்களை போல, காயம்பட்ட சில காவலர்கள் உண்டு, அதன் பின் வழக்கை விசாரிக்கும்பொழுது சாகசம் செய்து இறுதியில் வாழ்வினை தொலைத்த Jebamani Mohanraj போன்றவர்களும் உண்டு இதில் களத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா என்பவரும் ஒருவர் அவர் அப்பொழுது பெண் காவலர், ராஜிவினை தனு நெருங்கும் பொழுது ஓடி சென்று தடுத்தவர் இந்த அனுசுயா. ஆம் களத்தின் நேரடி சாட்சி. ஆனால் பெருந்தன்மையான ராஜிவ் அனுசுயாவினை பார்த்து தனுவினை அனுமதிக்குமாறு […]

சிதறல்கள்

பெட்ரோல், டீசலில் அதிக வரி கிடைக்கிறது: மாநில அரசு ரூ.6.5 வரை குறைக்கலாம்: ஆதாரத்துடன் ராமதாஸ் விளக்கம் காமெடி கருத்துக்களை சீரியசாக இவர் அடிக்கடி சொன்னதால் இப்பொழுது நல்ல கருத்தை சொன்னாலும் கேட்க யாருமில்லை ராமதாஸ் சொல்வது சரியான விஷயம், ஆனால் பழனிச்சாமியா செய்வார்? பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி கொலைகள் என கலவரத்தையும் கொலைகளையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜகவினர் திமுகவினை அடிதடி கட்சி என்பதுதான் இன்றைய காமெடி எல்லோரு அடிதடி […]

அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்

“ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை தேசிய கட்சிகள் கண்டுகொள்ளவில்லை, காவேரி பிரச்சினைக்கு காரணம் தேசிய கட்சிகள் இங்குள்ள அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள் இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கும் காரணம் மத்திய அரசு இப்படி இந்த திராவிட கட்சிகளும் அதன் கூட்டு ஒட்டு கட்சிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌” மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? சாட்சாத் இவர்களுக்கு, ின் யாரிடம் எதிர்பார்ப்பார்கள்? இவர்களிடம்தான் எதிர்பார்ப்பார்கள் எல்லா சிக்கலுக்கும் மத்திய அரசே காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு […]

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை “அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக […]

தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம் இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை […]

விநாயகர் அல்லது கணேசன்

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன். நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார். இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், . […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications