பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மருது பாண்டியர்

24 / 10 / 2023 மருதுபாண்டியர் நினைவுகள் எப்போதும் கண்ணீர்வர வைப்பது, அவர்களின் வாழ்வும் போராட்டமும் கலங்க வைப்பது என்றால் அவர்கள் தியாக வரலாறு கடுமையாக மறைக்கபட்டது என்பது இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி ஆம், இங்கே ஜாலியன் வாலாபாக்கில் செத்தவர்கள் தெரியும், ஆனால் மருதுபாண்டியரோடு கொல்லபட்ட 800 பேர் பற்றி வரலாறு பேசாது அப்படி ஒரு பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, சிவகங்கையில் 800 பேரை ஒரே நேரம் பிரிட்டிசார் கொடுமையாக கொன்றொழித்த கொடுமை மருதுபாண்டியரோடு […]

அமித்ஷா – இரண்டாம் வல்லபாய் படேல்

22 / 10 / 2023 பாரத தேசத்தை ஒரே தேசமாக இணைக்கும் தேசாபிமான பிறப்புக்கள் எப்பொழுதும் ஒவ்வொரு காலத்தில் பிறந்து கொண்டே இருக்கும், அது இத்தேசத்தை ஒரே தேசமாக நிலைக்க வைக்க தன் வாழ்வை அர்பணிக்கும் மாபெரும் சவால் எடுத்து இந்த பாரத கண்டத்தை ஒரே கண்டமாக நிறுத்தும், அந்த அதிசயம் விக்ரமாதித்தன் காலத்தில் இருந்து உண்டு, பட்டேல் வரை உண்டு நம் கண்முன்னும் அப்படி ஒரு சாட்சி உண்டு, அவர்தான் இரண்டாம் வல்லபாய் பட்டேல் […]

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம்

20/ 10/ 2023 தசரா பண்டிகை தேசமெங்கும் கொண்டாடபட்டாலும் தமிழகத்தில் அது விமரிசையாக கொண்டாடப்படும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயம். இந்துஸ்தானில் வெகு சிறப்பாக தசரா கொண்டாடபடும் இடங்களில் அது முக்கியமானது, அதுவும் பல வேடம் அணிந்த பக்தர்கள் விரதம் இருந்து காணிக்கை திரட்டி அதனை அம்மனுக்கு செலுத்தும் உன்னத பக்தி வேறு எங்கும் காணமுடியாதது இன்று கடலோர சிறு ஊராக குலசேகரபட்டினம் சுருங்கிவிட்டாலும் அது மிக மிக பழமையானது, காவேரிபூம்பட்டின காலத்திலே அது உண்டு, அதற்கு […]

ராஜராஜ சோழன்

25 / 10 / 2023 சிவன் தன் அடியாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனை விடமாட்டார்.  அவன் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அப்படித்தான் தேடி வந்து ஆட்கொள்வார். சுந்தமூர்த்தி நாயனாரை அப்படித்தான் மணமேடையில் ஆட்கொண்டார், சமணராக அப்பர் சுவாமிகளை ஆட்கொண்டார், இன்னும் யார் யாரையெல்லாமோ எதிர்பாரா நேரம் ஆட்கொள்வார். தான் ஒருவனை குறித்துவிட்டால் எத்தனை பிறவிகள் என்றாலும் அவனை விடாமல் பிடித்து கொள்வார், தன் அன்புகுரியவன் என்னென்ன இந்த உலகத்துக்கு தன்மூலம் செய்யவேண்டுமோ அதை சரியாக […]

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் – அம்மா

20 / 10 / 2023 “நா(யே)னையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.“ என்ற வரிகளுக்கு அபிராமி பட்டருக்கு பின் சாட்சியாக வாழ்ந்த ஆத்மா அது. சிவந்து கனிந்த ஆத்மா அது. செவ்வானத்தில் ஜொலித்தக் கொண்டிருந்த விண்மீன் ஒன்று வீழ்ந்துவிட்டது. செந்நிற பூங்கொத்தில் இருந்து பக்தித்தேன் வழங்கிய மலர் ஒன்று காலத்தால் வாடி வீழ்ந்துவிட்டது. செந்தாமரையாய் நின்று தேவியினைத் தாங்கி நின்ற […]

கைசிக ஏகாதசி

ஏகாதசிகளில் வைகுண்ட ஏகாதசி போல சிறப்பானது கைசிக ஏகாதசி, அந்த கைசிக அல்லது கைசிகேய ஏகாதசி அழகான வரலாற்றை கொண்டதுஅதுதான் தென்முனையில் இருக்கும் நெல்லை சீமையின் முக்கிய திவ்யதேசமான திருக்குறுங்குடி ஸ்தலத்தையும் அதனை அடுத்த நம்பிமலையில் இருக்கும் நம்பி ஆலயத்த்தின் மகா சிறப்பையும் போதிக்கின்றதுஅவ்வகையில் இன்றைய நாள் நெல்லை மாவட்டம் நம்பிமலையில் இருக்கும் நம்பியாண்டவருக்கானதுதமிழகத்தின் அழகான இடங்களில் அந்த நம்பிமலையும் ஒன்று, மிக மிக தொன்மையான காலத்திலே நம்பிக்கு அந்த மலையில் நம்பி தீர்த்தம் அருகே அருவிகரையில் […]

தேவி மஹாத்மியம் : 12 / 13 (இறுதி பகுதி)

(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும், தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள். விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்று கொள்ளுதல் அவசியம்.) இந்த தியானத்தோடு தொடங்கலாம். “கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, […]

தேவி மஹாத்மியம் : 11 / 13 – தேவீ ஸ்துதி

(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி. தேவியின் மாஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது. தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்) “ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ […]

தேவி மாஹாத்மியம் : 10 / 13 – சும்ப நிசும்ப வதம்

த்யானம் – தேவி துதி “ஓம். முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன். ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், […]

தேவி மாஹாத்மியம் : 09 / 13 – ரக்த பீஜ வதம்

த்யானம் – தேவி துதி “செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்” சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications