பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் எப்படி எழுத வந்தேன்?

நான் எப்படி எழுதவந்தேன் என்றால் என்னை இழுத்து வந்தவர் அவர்தான். சேட்டை அதிகமான மந்தியினை நோக்கி கல்லெறியும் ஒருவன், அட நமக்கும் கல்லெறிய வருகின்றதே என வீசிப் பழகி, பின் ஈட்டி எறிந்து , துப்பாக்கி சுட்டு பழகுவது போல் நம் நிலைமையும் ஆகிவிட்டது. நிஜத்தில் நாம் எதுவும் எழுதியதில்லை. 10ம் வகுப்பு படித்தபொழுது எதையோ எழுதிக்காட்டி “அதிகப்பிரசங்கி” என தமிழம்மா பேப்பரை கிழித்துபோட்டது நினைவிருக்கின்றது. அதன் பின் எதையும் எழுதியதில்லை. கட்டுரை போட்டியோ, பத்திரிக்கையோ எங்கும் […]

சி. சுப்பிரமணியம்

சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாமனிதர்கள் இருந்தார்கள். கூரிய அறிவாளிகளும், தியாகிகளும் தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் கொடுத்துச் சென்ற உத்தமர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். அதனால் அடையாளம் தெரியாமலேயே மறைக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெரும் பிம்பம் மறைக்கப்பட்டது, அவரின் புகழ் மறைக்கபட்டது, அவருக்கான இடத்தை பின்னாளில் வாஜ்பாய் கொடுத்தாலும் காங்கிரஸ் கடைசிவரை கொடுக்கவில்லை. இன்றும் அவரை நினைவு கூற யாருமில்லை என்பதுதான் சோகம். சி.சுப்பிரமணியம் – தமிழகமும், தேசமும் மறக்கமுடியா மனிதர் அவர். காமராஜர், […]

சர் சி. வி. ராமன்

தமிழனுக்கு அறிவில்லை, அவன் முட்டாள், அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம் ஈரோட்டுக்காரர் சொல்லி காஞ்சிபுரத்தார் கூலிக்கு பேசிய பொய். அதை வைத்து அரசியல் அறுவடை செய்தவர் திருகுவளைக்காரர். அது அல்ல உண்மை. தமிழக இந்துக்கள் அவ்வளவு பெரும் அறிவோடும் தனித்துவத்தோடும் இருந்தவர்கள். எவ்வளவோ விஞ்ஞானங்களை இந்துமத போதனையாகச் சொன்னவர்கள். அங்கு கல்லணை, பெரிய கோவில் கட்டும் அளவு அறிவாளிகள். மருத்துவம் முதல் மகா ரகசியங்களை எளிதாகச் சொன்னவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் […]

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

தமிழகம் சிவபெருமானின் விருப்பத்துகுரிய இடம். அவரின் திருவிளையாடல் பல இங்குதான் நடந்தது. அவர் தன் பிரதான சித்தரான அகத்தியரை இங்குதான் அனுப்பி தமிழை உருவாக்கி வளரச் செய்தார். தமிழ்சங்க தலைவராக எப்பொழுதும் சிவனேதான் விளங்கினார். அந்த சிவன் ஒரு காலத்தில் தமிழகத்தை காக்க முருகனை அனுப்பினார். அகத்தியரை அனுப்பினார். பின்னும் யார் யாரையெல்லாமோ அனுப்பி கொண்டிருந்தார். அப்படி வந்தவர்களெல்லாம் பெரும்பாலும் முருகப்பெருமானின் அடியாராக அல்லது அவரின் சாயலிலே இருந்தார்கள். முருகனின் அருள் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஆம், முருகன் […]

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம். “ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார். “ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் […]

கி.வா. ஜ(கந்நாதன்)

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் கொண்ட பல இருந்தார்கள். அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லப்பட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது. அவர்களைப் போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள். இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது. புதர்மண்டிக் கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது. புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கப் பட்டிருக்கின்றார்கள். அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என […]

இரும்பு மனிதன் – சர்தார் வல்லபாய் பட்டேல்

இது ஒரே இந்துஸ்தானாக இருந்த தேசம். அதனை மொகலாயம் சிந்து நதி தொடங்கி கன்னியாகுமரி வரை தன் ஒற்றை ஆட்சியில் வைத்திருந்தது. இங்கு எப்போதும் ஒரு பேரரசு இருப்பதும் அதற்கு சிற்றரசுகள் வரிகட்டுவதும் வழமையாய் இருந்தது. அப்படித்தான் 16ம் நூற்றாண்டில் மொகலாயம் உச்சத்தில் இருந்தது. அதை எதிர்த்து பெரும் போர் தொடுத்து இனி இங்கு இந்து அரசு, ஒரே இந்துப் பேரரசு என எழும்பினான் வீரசிவாஜி. ஆனால் காலம் அவனுக்கு கருணை காட்டவில்லை. எனினும் அவன் எழுப்பிய […]

தேவர்பிரான் – தென்னாட்டு நேதாஜி, பாண்டிநாட்டுச் சிங்கம் பசும்பொன் தேவர்

தமிழகத்தின் தனிபெரும் தெய்வம் முருகப்பெருமான். அந்த திருமுருகப்பெருமான் இங்கு அரசியல், ஆன்மீகம் என எவ்வகையில் ஆபத்து வந்தாலும் தன் அடியார்கள் மூலம் இந்த மண்ணை மீட்டெடுக்க அருள்புரிவான். இதனைக் காலம் காலமாக வரலாற்றில் காணலாம். சூரபத்மன் காலத்தில் இருந்து பின் எத்தனையோ குழப்பமான காலம், சமணர் காலம், பவுத்த காலம், ஆப்கானியர் காலம் என ஒவ்வொரு காலத்திலும் முருகப்பெருமானின் அடியார்கள் மன்னர்களாக, அடியார்களாக, வீரர்களாக, சீடர்களாக வந்து இந்த மண்ணை காப்பார்கள். ஆழ கவனித்தால் இந்த மண்ணுக்கு […]

காவேரி (ஐப்பசி) துலா ஸ்நானம்

சூரியன் துலாம் ராசிக்கு வரும் மாதம் ஐப்பசி மாதம் என்பதால் அது துலா மாதம் என்றே அழைக்கபடும். அந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் என்பது பெரும் பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆடிப் புதுவெள்ளம் போலவே ஐப்பசி காவேரியும் மகத்துவமானது. காவேரி தெட்சண கங்கை அதாவது தென்னக கங்கை என அழைக்கப்படும் ஆறு. அதற்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லபை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி எனப் பல […]

ஐப்பசி பவுர்ணமி – அன்னாபிஷேகம்

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது. அதைக் கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதைச் சொல்ல விளைகின்றோம். இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல. சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம். சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை. அதாவது பக்குவப்பட்ட நிலை. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications