பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை?

உலகெல்லாம் தன் ஒற்றை கொடி பறக்க வேண்டும், உலக நாடுகள் தன் காலடியில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்க கனவு இப்பொழுது வெறிபிடித்த கட்டத்தை எட்டியுள்ளது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கபடும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது இது அப்பட்டமான அடக்குமுறை, பகிரங்கமான ஏகாதிபத்தியம் இந்தியா இறையாண்மை உள்ள நாடு , சுதந்திர நாடு தனக்கு தேவையான ஆயுதங்களை எந்த நாட்டில் இருந்தும் வாங்கும் உரிமை அதற்கு உண்டு நாம் பணம் கொடுக்கின்றோம், […]

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா?

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா, கறுப்பு பண ஒழிப்பு தோல்வியா என ஏகபட்ட கருத்துக்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை நிபுணர்கள் இப்படித்தான் சொல்கின்றார்கள், நடந்தது இதுதான் இந்தியா வளரும் நாடு, பெட்ரோல் போன்ற வளங்களோ தொழில்துறை ஏற்றுமதியோ இன்னபிற வருமானமோ பெருமளவில் இல்லை அந்நிய முதலீடும் இன்னபிற சங்கதிகளுமே நாட்டை தாங்கிகொண்டிருந்தன, அதுவும் 1990க்கு பின் தாராளமயமாக்கலில் நாடு நாலுகால் பாய்ச்சலில் மாறியது உண்மையில் 2008 பொருளாதார மந்தம், பெட்ரோல் விலை எகிறல் போன்ற […]

நாளை மலேசிய சுதந்திர தினம்

நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது. அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது. இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் […]

மூப்பன் என்ற வார்த்தைக்கு பெரியவர், வழிகாட்டுபவர் என பொருள்

தமிழகத்தில் உண்மையான மக்கள் அபிமானிகளும் , காந்திய வாதிகளும், தேசியவாதிகளும் நிரம்ப இருந்தனர், அவர்களில் நாம் கண்ட முக்கியமான தலைவர் மூப்பனார் பெரும் பண்ணையார், அதுவும் காவேரிகரையில் பண்ணையார். கிட்டதட்ட அரசகுடும்பம் போன்றது அது, செட்டிநாட்டு மன்னர்களுக்கு சற்றும் குறையாத செல்வாக்கு கொண்டது அவர் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்ற வகையில் அதில் தொடர்ந்தார் மூப்பனார் அரசியலுக்கு வந்து கோடி குவிப்போர் மத்தியில் நேரு போலவே பெரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து உண்மையான தொண்டனாக வந்து நின்றார் […]

விசால் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்

அறிவாலயத்து வாட்ச்மேன் வேலையினை இப்படியா கேட்பது? 1967க்கு பின் சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும் சசிகலா அதை தவறவிட்டார் அப்படி சினிமா பிடியில் இருந்து தமிழக அரசியல் விடுபட்டது சினிமாக்காரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அவர்களுக்கென்ன தங்கள் துறை அரசியலை கட்டுபடுத்த வேண்டும், அதில் இருக்கும் முதல்வரை சுற்றி ஆடிகொண்டே இருக்க வேண்டும், சலுகைகளை கறக்க வேண்டும் இது பச்சை தமிழன் பழனிச்சாமியின் இரும்பு ஆட்சியில் எடுபடுமா? இதனால் சினிமாக்காரர்கள் ஒரு முடிவோடு களமிறங்குகின்றார்கள், ரஜினி […]

பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் ?

டேய் ஆரிய அடிவருடி, கொண்டை மறைக்கா சங்கி , பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? ஒரு மண்ணும் ஆகியிருக்காது, வீரமணி கோடிகளில் புரண்டிருக்க மாட்டார்.. அண்ணாவின் கல்லறை உட்பட ஒரு கல்லறையும் மெரினாவிர்கு வந்திருக்காது. அண்ணா ஒழுங்கான பேராசிரியராக இருந்திருப்பார், கலைஞர் நல்ல வசனகர்த்தாவக நீடித்திருப்பார் ராமசந்திரன் அவர்போக்கில் நடித்துவிட்டு இறந்திருப்பார். அதாவது எல்லோரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள், பழனிச்சாமி பன்னீர் உட்பட‌ தமிழகத்தில் ஊழல் இல்லா துறை உண்டா? : […]

சமூக நீதி என்றால் என்ன?

சமூக நீதி என்றால் என்ன? சமூகத்தில் யார் திறமைசாலியோ அவனை சாதி பெயரால் ஒடுக்கிவிட்டு, யாருக்கு திறமை சுத்தமாக இல்லையோ அவனை பொருத்தமற்ற பதவிக்கும் அவனுக்கு பின் அவன் சந்ததியினை சாதி பெயரை சொல்லி அமர வைப்பது சமூக நீதி எனப்படும் நாடு எக்கேடும் கெட்டு போகட்டும், நாட்டு பற்று எல்லாம் யாருக்கு வேண்டும்? என் சாதி மட்டும் வாழவேண்டும் அல்லது திறமையானவன் எல்லாம் எங்காவது ஓட வேண்டும் என்பது அதன் முக்கிய இலக்கு இவ்வாறு செய்வதுதான் […]

உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று

இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன‌ உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும் (எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது) விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை […]

கலைவாணரை பற்றி நிறைய எழுதலாம்

கலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர் “அது ஒண்ணுமில்லீங்க..காரை […]

இணையம் என்பது சுவாரஸ்யமான களம்.. அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா

இணையம் என்பது சுவாரஸ்யமான களம், அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா யாரெல்லாமோ வருவார்கள் போவார்கள், நண்பர்கள் கிடைப்பார்கள் திடீரென காணாமல் போவார்கள். சில பூக்கள் இருக்கும் தேள்கள் இருக்கும், அமைதியாக சில முதலைகளும் இருக்கும் இங்கு பொழுது போக்காக வந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டும், நமக்கு கொடுக்கபட்ட சுவரில் ஏதும் கிறுக்கலாம் , அதை பார்த்து சிலர் கருத்து சொல்லலாம் அத்தோடு முடித்துவிட வேண்டும். அதுதான் நல்லது. மாய உலகினை போலவே, இணையமும் மகா மாயமானது. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications