பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மு.க.அழகிரி திடீர் மிரட்டல்

தி.மு.க.வில் சேர்க்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல் தமிழகத்திலே, ஏன் உலகிலே என்னை கட்சியில் சேர்க்காவிட்டால்.. என மிரட்டும் ஒரே நபர் அழகிரியாகத்தான் இருப்பார் வரலாற்று வினோதம் இது மிரட்டுபவர் கலைஞர் இருக்கும்பொழுது மிரட்டி இருக்கலாம், அப்பொழுதெல்லாம் எங்கே இட்லி சுட்டுகொண்டிருந்தார் என தெரியவில்லை அழகிரி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அது அவருக்கு நல்லது சம்பத் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினார் திமுக நிலைத்தது ராமசந்திரன் மாலிக்காபூர் கையில் சிக்கிய மதுரையாக கட்சியினை […]

அமிர்தலிங்கம் யாரென தும்பிகளிடம் கேளுங்கள்?

ஏன் அமிர்தவிங்கம் கதையினை சொன்னாய் என பல கேள்விகள் அமிர்தலிங்கமும் ஈழமும் பிரிக்க முடியாதது, முதலில் தமிழகத்திடம் ஆதரவு கேட்டுவந்தவர் அவரே அவரையும் சந்திரஹாசனையும் நம்பியே, இவர்களை மீறி போராளிகள் செல்லமாட்டார்கள் என நம்பியே இந்தியா அவர்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் அளித்தது (புலிகள் அவர்களையும் கொன்று, இந்தியாவினையும் பகைத்து எல்லாம் நாசமாக்கினர்) கலைஞருக்கும் அவர்மேல் பெரும் மரியாதை இருந்தது, என்று அமிர்தலிங்கம் கொல்லபட்டாரோ அன்றே கலைஞர் புலிகளை கை கழுவினார் 2009ல் சட்டமன்றத்தில் ஈழசிக்கல் குறித்து உருக்கமாக […]

நடிகர்களிலே பச்சோந்திதனம் மிக்கவர் சத்யராஜ்

இருக்கும் நடிகர்களிலே பச்சோந்திதனம் மிக்கவர் இவர்தான் திமுகவினை இவர் எப்படி எல்லாம் திட்டினார், புலிகளுக்கு எப்படி எல்லாம் வக்கலாத்து வாங்கினார்? மைக் கிடைக்கும் இடமெல்லாம் தமிழனை தமிழன் ஆளவேண்டும் என்பார், இன்னும் மகா ஆபாசமாக கூட பேசியிருக்கின்றார் புலி ஆதரவு கும்பல்கள் எல்லாம் அகபடும்நிலையில் , இந்த மாதிரி கும்பல்கள் பிடித்து உள்ளே போடபடும் நிலையில் அந்தர் படி அடித்து ஸ்டாலின் பக்கம் வந்து நிற்கின்றார் ஏம்பா பாரதிராஜா, உங்கள் கும்பலில் ஒரு மானஸ்தன் கூடவா இல்லை?

ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலருக்கு ஏக மகிழ்ச்சி

கலைஞர் வரிகளில் சொல்லவேண்டும் என்றால் “கண்கள் பனித்தது, இதயம் கனித்தது” இந்த மனமும், இந்த உறவும் என்றும் தொடரட்டும்   ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலர் பத்திரிகைக்குத்தான் ஏக மகிழ்ச்சி அவருக்கு “பட்டாபிஷேகம்” என மகிழ்கின்றது, நன்றி தடை பல கடந்து, பல காலம் காத்திருந்து ராமன் பட்டாபிஷேகம் முடிந்தபின்புதான் நாடு செழித்தது என்கின்றது புராணம் அப்படி இனி தமிழகமும் செழிக்கும் என குறிப்பால் சொன்ன தினமலருக்கு வாழ்த்துக்க ள்   பதவிக்காக எனது கையை பிடித்து […]

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் […]

கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி சென்ற சைமன்

பிரபாகரன் ஒரு மலையாள வம்சம், அதாவது வேலுபிள்ளையின் தந்தை வழி உறவினர்கள் இன்றும் கேரளாவில் உண்டு வெள்ளையன் இலங்கையினை ஆண்டபொழுது மலையாளிகள் இன்று அரபு நாட்டில் இருப்பது போல அங்கு செல்வாக்காய் இருந்தனர், புர்ச்சி தலைவர் ராமசந்திரன் குடும்பமே அங்குதான் பிழைக்க சென்றிருந்தது அப்படிபட்ட மலையாள குடும்பங்களில் ஒன்றுதான் பிரபாகரனின் குடும்பமும் அந்த கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி கொண்டு சென்றிருக்கின்றார் சைமன் சைமன் யாரென்றால் அவரும் மலையாளிகள் சந்ததி என்றே தெரியவருகின்றது ஆக மலையாளி படத்தை […]

தமிழிசை அக்காவிற்கு எல்லாம் கொஞ்சம் மெதுவாகத்தான் புரியும் போல‌

தமிழிசை அக்காவிற்கு எல்லாம் கொஞ்சம் மெதுவாகத்தான் புரியும் போல‌ ஆம், கலைஞரின் அருமை பெருமை எல்லாம் இப்பொழுதுதான் புரிந்து, திமுகவினரே திகைக்கும் அளவு புகழ்ந்திருக்கின்றார் கலைஞரின் அருமைகள் இப்பொழுது தெரிந்தது போல் முன்னமே தெரிந்திருந்தால் அக்கா நிச்சயம் திமுகவில்தான் இணைந்திருப்பார் அட இனியும் என்ன? இப்பொழுது கலைஞரின் பெருமை புரிந்துவிட்டதால் விரைவில் அக்கா திமுகவிற்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.. காவேரி கடைமடைக்கு நீர் செல்வதில் கால்வாய் சிக்கல் தவிர மீத்தேன் சிக்கலும் உண்டு என்கின்றன செய்திகள் அதாவது மீத்தேன் […]

அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி

அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வருவதில் பல வகையான கருத்துக்கள் நாம் கண்டித்தது Go Back அமித்ஷா என முன்பு முழங்கியவர்களையன்றி வேறு யாரையுமல்ல‌ தேசிய கட்சிகள் ஒன்றும் எதிர்கட்சிகளோ, எதிர்களோ அல்ல. கொள்கைகள் வேறாயினும் எல்லோர் நோக்கமும் இந்தியா வளம்பெற வேண்டும் என்பது, தமிழகம் ஒன்றும் இன்னொரு நாடு அல்ல, அதுவும் இந்திய மாநிலமே.. திமுக பல இக்கட்டான நிலைகளை கடந்திருக்கின்றது. இந்திரா காலத்தில் அது அவரோடு மல்லுகட்டிற்று, நடக்க கூடாத விஷயங்கள் நடந்தன‌ அதில் […]

போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின்

போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின் – எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை : செய்தி எந்த பெரும் கட்சியும் அதன் இரும்பு தலைவன் இறந்தபின் தடுமாறும் , உடையும், சிதறும் அதன்பின் நிலைபெறும் சிலது காணாமலே போகும் ஒரு கப்பல் அலையில் சிக்கி கொண்டு அது தடுமாறுவது போல் ஆடும், அதன் பின் சீரடையும் திமுகவின் அத்தைகைய சிக்கல் அண்ணா விடைபெறும்பொழுது இருந்தது , இதில் பாடம் கற்றார் கலைஞர் ராமசந்திரன் விடைபெற்ற பொழுது , […]

பூரண தமிழினம் என எதுவுமில்லவும் இல்லை.. எல்லாம் கலப்பு

ஒரு சர்ச்சை ஓடுகின்றது, தினமணி பத்திரிகை ஏதோ தமிழ்தேசியம் தொடர்பான கட்டுரையினை நிறுத்தி வைத்ததாகவும், அது இதோ என பலர் ஆங்காங்கே பதிவேற்றிகொண்டிருகின்றார்கள் விஷயம் வேறு ஒன்றுமல்ல இந்திய தேசியம் என தினமணி பத்திரிகையின் கட்டுரைக்கு பதிலாக தமிழ் தேசியம் என எழுதி தமிழகம் இந்திய தேசிய அங்கமாக இல்லை என யாரோ பதிலுக்கு எழுதினார்களாம், தினமணி பிரசுரிக்கவில்லையாம் இப்படி ஒரு சர்ச்சை ஓடினாலும் அவர்கள் சொல்ல வருவது தமிழகம் தனி தேசம், இந்தியாவொடு இருந்ததே அல்ல. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications