பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்

மிஸ்டர் வீரமணி இந்த பாலை ஏழை குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்ற பகுத்தறிவு கேள்வியினை வைரமுத்துவிடம் கேட்டால் என்ன? ஆலய பாலாபிஷேகம் என்றால் மட்டும்தான் பகுதறிவு கேள்வி வருமா?  ·  தலைவியின் சோகத்தில் பங்குபெறும் விதமாக சங்க நடவடிக்கைகள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்…     பன்னீர் செல்வமும் 3 முறை முதல்வர், அதனால் அவருக்கும் அங்கே இடம் கிடைக்குமாண்ணே? ம்ம்ம் திகார்ல இடம் கிடைக்கும். கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை […]

சிங்கப்பூர் : 02

சிங்கப்பூர் : 02 1965ல் இருந்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ சுத்தம் அவர்களுக்கு பிரிட்டிசார் சொல்லிகொடுத்தது, அமைதியான வாழ்க்கை முறை அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. எப்படி அந்த நாட்டு மக்கள் அப்படி இருந்தார்கள் என்றால், வெகு எளிதான உண்மை. இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ சென்று, உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, உழைக்க வேண்டும் எஜமான் பிரிட்டிசார் சொன்னபடி உழைக்கவேண்டும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அக்கம் பக்கம் அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக […]

சிங்கப்பூர் : 01

சிங்கப்பூர் : 01 இன்று சிங்கப்பூர் தனிநாடாக ஆன நாள் என அந்நாடு கொண்டாடிகொண்டிருக்கின்றது, நாமும் வாழ்த்துவோம் அது மலேயநாட்டின் தென்கரை தீவு, புரியும்படி சொன்னால் ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு அடுத்து இருந்தால் எப்படி இருக்கும்?, அதே தான். அதனைவிட கொஞ்சம் பெரிய தீவு அவ்வளவுதான். சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அற்புதமான துறைமுகம் இயற்கையாய் அமைந்திருந்தது. அதன் அருமையையை உணர்ந்த பிரிட்டிசார் துரிதமாய் வளர்க்கஆரம்பித்தனர். இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை வசதியாக முன்னேற்றுவதில் பிரிட்டிசாரை அடிக்கமுடியாது, அவர்களின் தொலைநோக்கு பார்வை […]

கில்லாடி கிளைவ் – 1 பின் குறிப்பு

கில்லாடி கிளைவ் – 1  பின் குறிப்பு  இந்த கிளைவ் பற்றி சொல்லும்பொழுது ஒருவரி மறந்தாயிற்று முதலில் சென்னை பக்கம் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியர், பரங்கிமலை தாமஸ் ஆலயம், கடற்கரை செயின்ட் தாமஸ் சமாதி என வந்த கதைகளுக்கு எல்லாம் அவர்கள்தான் முன்னோடி நிச்சயம் இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வரவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு விண்ணகம் சென்றபின் எல்லா சீடர்களுக்கும் கிழக்கு பக்கம் அதாவது அரேபியா அப்படியே இந்தியா பக்கமே நற்செய்தி அறிவிக்க ஆசை இருந்தது […]

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் : திருமா

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் என திருமா சொன்னதற்கு பலர் பொங்குகின்றார்கள் கலைஞர் இந்திய இறையாண்மையினை மீறி இலங்கை புலிகளுக்கு உதவியவர், முன்பொரு தனி திராவிட நாடு கேட்டவர், டெல்லி பக்கம் வந்தவர் அல்ல, தேசிய தலைவர் அல்ல , தேசியமொழியினை ஏற்றவர் அல்ல‌ என ஏகபட்ட எதிர்வாதங்கள் நாம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம் இதே பாரத ரத்னா விருது பெற்ற ராமசந்திரன் யார்? அவரும் திராவிட நாடு கேட்ட கும்பலில் இருந்தார், இந்தி எதிர்த்தார், […]

கில்லாடி கிளைவ் : 01

கில்லாடி கிளைவ்  : 01 சாலமோன் அரசன் காலத்திலிருந்தே இந்தியா மேற்கத்தியர்களுக்கு விருப்பமான நாடு. சந்தணம், மிளகு, தந்தம். முத்து இன்னும் பல பொருட்களுக்காக அரேபிய கப்பல்கள் இங்கு காத்து கிடந்தன‌ முதலில் மேற்கிலிருந்து வந்து கிழக்கை இணைத்தவன் அலெக்ஸாண்டர், அதை தொடர்ந்தே வியாபார சாலை வலுவானது, அவன் உருவாக்கிய பரந்த சாம்ராஜ்யம் அதற்கு வழி செய்தது அக்கால வியாபாரம் இருவழிகளில் நடந்தது முதலாவது அலெக்ஸ்டாண்டர் காலத்திலே, சைனாவில் இருந்து பாக்தாத் அடைந்து துருக்கி வழியே ஐரோப்பா […]

டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன்

நேற்று அந்த கலைஞரின் அடக்க நிகழ்வில் முக ஸ்டாலின் அழுதார், முதல் முறையாக கண்ட அவரின் கண்ணீர் முகம் நெஞ்ச கலக்கத்தை ஏற்படுத்திற்று அது காண பொறுக்கவில்லை என்பதை எழுத வந்து அது சகிக்கவில்லை என மாறிற்று, பிழைதான். ஆனால் வேகமாக எழுதும் பொழுது தெரியவில்லை அதற்குள் டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன் உன் அப்பன் செத்தானே என குதிக்கின்றான் இன்னொருவன் உன்னை இனி விடமாட்டோம் , மூஞ்சில் குத்துவோம் ஆசிட் வீசுவோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றான் […]

அண்ணாவின் இதயத்தோடு மட்டுமல்ல அந்த மோதிரத்துடனும் சென்றுவிட்டார் கலைஞர்

கலைஞர் தங்க நகை அணிவதில்லை, என்றாவது கழுத்து சங்கிலி, கையில் சங்கிலி எல்லாம் அணிந்து அவரை கண்டதுண்டா ஆனால் ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருப்பார், அது சென்னையினை முதன் முதலாக திமுகவிற்கு ஒரு தேர்தலில் பெற்று கொடுத்ததற்காக அண்ணா கொடுத்த பரிசு அது அதுவரை தமிழகத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கை திமுகவிற்கு இல்லை, முதல் நம்பிக்கையினை அதுவே கொடுத்தது, அதற்கு மிகபெரும் காரணம் கலைஞர் இதே கடற்கரையில் அன்று மேடை போட்டு கொண்டாடி மோதிரம் அணிவித்து சொன்னார் […]

கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்..

எல்லாம் நிறைவேறிற்று. கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்.. இதோ அந்த கொடும் நிமிடம் நெருங்குகின்றது 60 ஆண்டுகாலம் தமிழக அரசியலையும் சில நேரம் இந்திய அரசியலையும் நிர்ணயித்த மாபெரும் சக்தி புதைக்கபட இருக்கின்றது இது திராவிடத்தின் புதைப்பா? இல்லை விதைப்பா? என்பதை காலமே முடிவு செய்யும் மகாபாரத கண்ணனை நாம் பார்த்ததில்லை, ஆனால் சிரித்துகொண்டே தன்னை நம்பிய கூட்டத்தை மிக நுட்பமாக கரை சேர்த்தவன் அவன் அந்த மாய கண்ணனை கலைஞர் வடிவில் நாம் கண்டோம், […]

ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள்

தமிழகத்தில் பிராமணர்களின் வேலை வாய்பினை கெடுத்தவர் கலைஞர் என பல பிராமணர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள் இங்கு அரசுபணியிலிருந்து , ஆலயத்திலிருந்து உங்களை விரட்டாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? இங்கே அரசு வேலை, ஆலயங்களில் மணி அடிக்கும் வேலை என இங்கே முடங்கி இருப்பீர்கள் ஆனால் இங்கே சூழல் மாறியதால் இனி எதிர்காலம் இல்லை என ஓடினீர்கள், எங்கே ஓடினீர்கள்? உலகெல்லாம் ஓடினீர்கள் கூகுள் முதல் அமேசான் வரை உயர் பதவி அடைந்த்தீர்கள், இன்னும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications