பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு

ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு : செய்தி இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரும், இவர்கள் வழிதாண்டி ஈரானுக்கு சென்றவர்கள் அல்ல, மாறாக அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்று அங்கே வழிமாறி சிக்கி கொள்பவர்கள் இதில் சில நேரம் மரணம் கூட நடக்கும் இப்படி நாடு நாடாக செல்வார்களாம், ஆனால் குமரியில் துறைமுகம் கட்டினால் அப்பகுதியில் எல்லோரும் வாழலாம் எல்லோருக்கும் நல்லது என சொன்னால் குதிப்பார்கள் அது வாழ்வாதாரத்தை நசுக்கும் […]

ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது

கலைஞரின் உடல்நிலை சரியில்லை என்பது பழையவிஷயம், அதைவிட மகா முக்கியமான விஷயம் என்பது கவனிக்கபடுகின்றது அதாவது ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது, இருவரும் அங்குதான் இருக்கின்றார்கள் ஆனால் சேர்ந்து அறிக்கை விட்டதாகவோ, இருவரும் ஒன்றாக கலைஞர் உடல்நிலை பற்றி பேசியதாகவோ படமில்லை படம் என்ன? பேனர் கூட இல்லை ஆக பிரச்சினை வெடித்திருப்பது தெரிகின்றது, இதில் ஆங்காங்கே வெடியினையும் கொழுத்தி போடுகின்றார்கள் அழகிரி அந்த பதவி, இந்த பதவி எல்லாம் கேட்கின்றார் என ஆளாளுக்கு ஆருடங்கள் […]

வாழ்க தலைவி, அவரால் மட்டும் வாழ்க தமிழக காங்கிரஸ்

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஆலோசனை கூட்டமாக நடத்திகொண்டே இருக்கின்றது, கடும் ஆலோசனை செய்தது எப்படி என ஆலோசனை செய்வார்கள் போல‌ ஒரு முடிவும் அறிவித்தது போலவும் செய்தி இல்லை, ஆனால் கூட்டம் மட்டும் நடக்கின்றது இது தேர்தலுக்கு தயாராகும் கூட்டம் என்பது யாருக்கு தெரியாது, ஆகட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வெற்றிடம் இருக்கின்றது கிட்டதட்ட 1960க்கு முந்தைய நிலையினை தமிழகம் பெற்றுவிட்டது திமுக தவிர குறிப்பிட்டு சொல்லும் வலுவான கட்சி இப்போது இல்லை, திமுகவிலும் […]

அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க

அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க, காமராஜர் ரொம்ப உத்தமர், நல்லவர், தியாகி இந்த கருணாநிதிதான் அவர ஏமாத்தி தோற்கடிச்சாரு, அப்படியே தமிழ்நாட்டை நாசமாக்கிட்டாரு, அவரை பற்றி எல்லாம் எழுதாதீங்கண்ணே ஒஹோ காமராஜர் நல்லவரு அப்படித்தானே? இதுல எண்ணண்ணே சந்தேகம், அவர் ஆட்சி பொற்கால ஆட்சி அவர் என்ன கட்சி காங்கிரஸ்னே? அது நல்ல கட்சியா? என்னண்ணே இப்படி கேட்டுபுட்டீங்க, மத துவேஷம் இல்லாத இந்தியா ஒருமைபாட்ட காக்குற கட்சின்னே இந்த இந்துத்வா மாதிரி இல்ல‌ அப்போ காங்கிரஸ் […]

ஓசாமா பின்லேடன்

அவர் பெரும் பணக்காரர் வெளிநாட்டில் படித்தவர் ஆனால் பெரும் இஸ்லாமிய மார்க்கவாதி 1930களில் இருந்தே அரபுலகில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா மட்டும் காரணம் என்பதை 1980களில் ஆப்கனில் உணர்ந்தவர் அதுவரை தான் உண்டு தன் தொழில் உண்டு மார்க்கம் உண்டு என சவுதியில் இருந்தவர்தான், என்று ஆப்கனில் ரஷ்யா வந்தவுடன் உலக முஸ்லீம்களே ஒன்றுபடுவீர் என்ற அமெரிக்கா அழைத்ததோ அதற்கு முன்பாகவே ஆப்கன் சென்றவர் அவருக்கு ஒரு கனவு இருந்தது, இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் […]

அய்யா நாங்க ஈழத்தவர்கள்

அய்யா நாங்க ஈழத்தவர்கள் சொல்லுங்க‌ இப்போ நாங்கள் முள்ளிவாய்க்காலை விட பெரிய துன்பத்தை சகித்துகொண்டிருக்கோம், உங்கட்ட சொல்லணும் போல தோணுது என்ன சார்? மறுபடியும் சிங்களன் அடிக்கின்றானா? அதெல்லாம் இல்லைய்யா, இந்த பாரதிராஜா என்பவர் சீமான் அடுத்த பிரபாகரன்னு சொல்லும்பொழுது அவனை கொன்றுவிட்டு சாகணும் போல வெறுப்பா இருக்கு ஏன் அய்யா ஏன்? அவர்கள் உணவாளர்கள் தம்பி உங்களுக்கு தெரியாததில்ல, பிரபாகரன் 1985 வரை தமிழ்நாட்டுல இருந்தவர் அவர் எப்பொழுதாவது பாரதிராஜாவினை பார்த்தாரா? பேசினாரா? எமக்கு தெரிந்து […]

சூரப்பா, நீர் சூப்பரப்பா

அண்ணா பல்கலைகழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் தேர்வு கட்டுபாடு அலுவலர் உமாவும் அவர் கோஷ்டியும் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது. ஆம் மறு கூட்டல் ஊழல் 400 கோடியினை தொட்டுவிட்டதாம், இந்த ஊழலை வெளிகொண்டு வந்தவர் துணைவேந்தர் சூரப்பா என்பதை சொல்லி ஆக வேண்டும் சூரப்பா, நீர் சூப்பரப்பா இப்பொழுது மறுகூட்டல் ஊழல் 400 கோடியா இல்லை அதற்கு மேலுமா என ஊழல் பணத்திற்கு மறுகூட்டல் நடக்கின்றதாம். அண்ணா நாமம் வாழ்க…

1950, 60 அரசியலை ஆழ யோசியுங்கள்

காமராஜரை கலைஞர் ஒழித்தார், கலைஞர் காமராஜரை சரித்தார் என்றெல்லாம் புது கதையினை தும்பிகள் சொல்ல தொடங்கிவிட்டன‌ காமராஜர் அப்பழுக்கற்றவர் என்பதில் சந்தேகமில்லை, என்றாவது திமுக அவர் மேல் ஊழல் குற்றசாட்டோ இல்லை மாபெரும் பொய்களை சொன்னதா? இல்லை, கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைத்தான் சொன்னார்களே அன்றி வேறல்ல‌ காமராஜர் வாழ்வென்ன? முதலிலே அவரிடம் முதல்வர் பொறுப்பினை காங்கிரசார் கொடுத்தார்களா? இல்லை. நடந்தது என்ன? காங்கிரசில் அன்றே கோஷ்டிபூசல் அதாவது சுதந்திரத்திற்கு முன்பே தமிழக காங்கிரஸ் கோஷ்டி தகறாறால் […]

கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை

ஈழம் பற்றி என்ன சொன்னாலும் யோசிக்காத அல்லது யோசிக்க விரும்பாத சில கோஷ்டிகள், யோசிக்க அறிவில்லாத கோஷ்டிகள் இறுதியில் பிடித்துகொள்வது அவர் ஏன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்? இருக்காமல் போனால் என்ன? அடேய் பதர்களா, உங்களுக்கு நோக்கமெல்லாம் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பது, அது பழனிச்சாமி பிரதமர் ஆவதை போல முடியாத விஷயம் என்பது கலைஞருக்கு தெரியாதா? ஆனால் அவனிடம் சிக்கிய மக்களை காப்பாற்ற முயன்றார், தன்னால் முடிந்தவரை ஒரு அவகாசம் கொடுத்தார் அந்த உண்ணாவிரதத்தின் […]

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா?

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா? எங்கே தைரியம் இருந்தால், ம்ம் அது என்ன? ஆங் சத்திரிய நாடாரா இருந்தால் இதை பஞ்சாபில் மொழி பெயர்த்து பொற்கோவில் பக்கம் வைத்துவிடுங்கள் பார்க்கலாம் அடித்து அந்த அணையா அடுப்பில் போட்டுவிடுவார்கள் ஏன் சார், இந்த பஞ்சாப்தான் நாடார் ஏரியாவா? இந்த நியூயார்க், வாஷிங்டன் எல்லாம் நாடார் ஏரியா இல்லையா? சீக்கியர்களை அன்றே ஏன் கத்தியோடு உலாவ சொன்னார்கள் என இன்றுதான் புரிகின்றது, அந்த கத்திக்கு இப்பொழுதுதான் வேலை வரப்போகின்றது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications