பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயத்தை எப்படி பார்க்கின்றீர்கள் என எம்மிடம் கேட்டால் விஷயம் மிக மிக ஆழமானது துரதிருஷ்ட வசமாக இதுபற்றி தமிழக ஊடகம் சொல்லவில்லை, முன்பு சோ.ராமசாமி காலத்தில் மிக சரியாக ஈழவிவகாரங்களை சொன்ன துக்ளக் பத்திரிகையும் சொல்லவில்லை ஏன் தமிழக பாஜக செய்திகளே சொல்லவில்லை இதையெல்லாம் சொல்லவேண்டிய தமிழக பாஜகவின் ஐடி பிரிவும் வார் ரூம் வானரங்களும் உள்கட்சியில் சண்டையிடுவதெல்லாம் பாஜகவின் சாபம் அல்லது நோய் விஷயம் அவ்வளவு முக்கியமானது, […]

பெரோஸ் காந்தி

அந்த குடும்பம் நேரு குடும்பம் அல்லவா? பின் நேரு பெயரை சொல்லாமல் காந்தி என மாற்றி கொண்டது ஏன் எனும் விவாதம் பாராளுமன்றம் வரை சென்றுவிட்டது ஆங்காங்கே எப்படி வந்தது காந்தி பெயர் என ஏகபட்ட விவாதங்கள், நாமும் நம் பங்கிற்கு சில விஷயங்களை சொல்லி வைப்போம் இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் அரசியலில் இருந்த அடையாளம் கூட […]

அமெரிக்க காந்தி

என்னதான் கிறிஸ்தவம் சமத்துவம் என பேசினாலும், அந்த கிறிஸ்தவ மேல்மட்டம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை என பலவாறு பிரிந்து சீர்திருத்தம் செய்தாலும் கிறிஸ்த்தவம் வெறும் அரசியல் அது ஒரு மதம் அல்ல என்பதும், கிறிஸ்தவ பெயரால் செய்யபடுவதெல்லாம் ஆட்சி, சம்பாத்தியம் மற்றபடி சமத்துவம் அங்கு இல்லை என்பதும் ஐரோப்பியரின் இனவெறியால் அறியபடும் ஐரோப்பியருக்கு 15ம் நூற்றாண்டில் இருந்துதான் அந்த அரைபயித்தியம் பிடிக்க ஆரம்பித்தது என்றல்ல, ஐரோப்பா தவிர ஏதும் அறியாமல் உள்ளே சண்டையிட்டுகொண்டிருந்த கூட்டம் வறுமையில் இருந்த […]

இந்துஸ்தான ஞான தந்தை

இந்த உலகம் பெரும்பாலும் சுயநலமானது தன் வீடு , தன் சொத்து, தன் வருமானம், தன் அதிகாரம், தனக்குஎது நல்லது என பெரும்பான்மையோர் வாழும் பூமி இது தன்னையும் தனக்கு வேண்டியதையும் தவிர எதையும் தேடாமல் கிணற்று தவளையாக சுயநல வாழ்வை மானிடர் வாழும் இயல்பில் ஒரு கட்டத்தில் பொதுநலம் சரியும், அறியாமை ஓங்கும், உன்ண உணவும் தங்கும் இடமும், கொஞ்சம் செல்வமும் போதும் அதுதான் வாழ்வு என முடங்கும் இனம் அறியாமையில் சிக்கும் அவர்களுக்கு ஆட்சி […]

ஆருத்திர தரிசனம்

ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள் ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

19ம் நூற்றாண்டின் சில மனிதர்கள் மறக்கமுடியாதவர்கள், அவர்களின் போராட்ட வாழ்வும் அவர்கள் செய்த அளப்பரிய சாதனையும் , அவர்கள் பதித்த முத்திரையும் மகத்தானது தமிழகத்தில் பிராமணர்மேல் வீசபட்ட அவதூறு, அதுவும் 19ம் நூற்றாண்டில் வீசபட்ட அவதூறு கடுமையானது, இதே அவதூறுகள் 16ம் நூற்றாண்டில் கோவாவில் பிராமணர் மேல் வீசபட்டது, பின் அவுரங்கசீப்பால் அதே பிராமணர்மேல் வீசபட்டது அதற்கு காரணம் அவர்களே இந்துமதத்தின் ஆதாரம் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌ வீரசிவாஜியின் எழுச்சி அதை தடுத்து இந்துமதத்தை நிறுத்திற்று, ஆனால் […]

ரமண மகரிஷி

இந்துஸ்தானம் எக்காலமும் மன்னர்களாலோ, வியாபாரிகளாலோ, கல்விமான்களலோ,மக்களாலோ இயக்கபட்ட நாடு அல்ல, அப்படி வெளிபார்வைக்கு தோன்றினாலும் உண்மை வேறானது இந்துஸ்தானம் எனும் இந்த புண்ணிய பூமி மகான்களாலும் ரிஷிகளாலும் ஞானியராலும் நடத்தபடும் பூமி, இங்கு அவதாரங்களே வந்தாலும் ஞானியர் முன் தோன்றி அவர்களை வழிநடத்துவார்கள் ராமனுக்கே வசிஷ்டர் விஸ்மாத்திரர் என ஞானியர் வந்தார்கள், கண்ணனுக்கும் வந்தார்கள் இன்னும் பலருக்கு ஞானியர் வந்துகொண்டே இருந்தார்கள் இங்கு அக்கிரமம் தலைதூக்கி இந்து தர்மமும் தாத்பரியமும் சவாலில் சிக்கும் பொழுது, பெரும் அதர்மம் […]

சாஹேப் பதே சிங்

இந்தியாவின் சுதந்திர போராட்டம் 1650களில் வீரசிவாஜியால் தொடங்கிவைக்கபட்டது, சிவாஜி இந்துக்களுக்கான அரசனாக எழ அவனுக்கு ஆதரவு பெருக ஒரு கட்டத்தில் பூரண இஸ்லாமிய தேசமாக இந்துஸ்தானை அறிவித்து காசி மதுரா ஆலயங்களையும் இன்னும் நூற்றுகணக்கான இந்து ஆலயங்களையும் இடிக்க தொடங்கினான் அவுரங்கசீப் அப்படியே சீக்கிய மதத்தையும் தடை செய்தான் சீக்கிய குருவான தேஜ் பகதூரை அவன் மதம்மாற கோரியபொழுது அவர் மறுத்தார், அவரையும் அவர் குடும்பத்தாரையும் மிக கோரமாக கொன்ற அவுரங்கசீப் அவரை உயிரோடு தோல் உரித்து […]

அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும் “ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும் கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு […]

உளவு வாட்சின் கதை…..

உளவு சரித்திரங்கள் எப்பொழுதும் சிலாகிப்பானவை, அதிலும் மொசாத்தின் சரித்திரம் அதிரவைப்பது, இப்பொழுது ஆளாளுக்கு வாட்ச் பற்றி பேசுவதால் அவர்களின் பிரசித்தியான வாட்ச் பற்றியும் பேசலாம் அந்த வாட்ச் தயாரித்தது இஸ்ரேலிய மொசாட், தயாரிக்கபட்டது எலிகோகன் என்பவருக்காக‌ அவர் ஒரு எகிப்து யூத பிறப்பு, 1924ல் பிறந்த அவர் பின் இஸ்ரேலுக்கு வந்து பின் இஸ்ரேலிய மொசாத்தில் இணைந்து 1950களிலே தரமான உளவாளியானார் அவரை சிரியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டது மொசாத், இஸ்ரேலின் மிகபெரிய எச்சரிக்கையில் ஒன்று சிரியா, அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications