பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனிவாச ராமானுஜம்

“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என சொன்னவர்கள் தமிழக இந்துக்கள் எண்ணும் எழுத்தும் இறைவனின் வரம், அந்த வரத்தை பெற்றோர் தன்னை உணர்ந்தால் ஒரு தெய்வசக்தி துணை நின்று வழிநடத்தி அவர்களுக்கு அழியா புகழை கொடுக்கும் என சொன்னவர்களும் இந்துக்கள் அந்த நம்பிக்கையின் சாட்சியாக வந்து அகிலமெல்லாம் தமிழக இந்துக்களின் கணிதவியலை சொன்னவன் அந்த கணித மாமேதை ஆரியபட்டரும் பாஸ்கரரும் வாழ்ந்த மண் இது என்பதை நிரூபித்தவன் அவன் தமிழ்நாட்டில் கடந்த எழுபது வருடமாக இருக்கும் பொய்களில் […]

பழமொழி நானூறு : 67

“தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றிவாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்நாயைப் புலியாம் எனல்” தாய் தந்தையர் தன் பிள்ளையினை பெருமையாய் பேசுதல் இயல்பு ஆனால் அந்த இயல்பையும் பெரிதாக சொல்லி கொண்டே இருந்தால் அதை கேட்டு பிள்ளைகளும் தங்களை தாங்களே புகழ தொடங்கினால் அதனால் யாருகும் ஆபத்தில்லதான் ஆனால் அது அடுப்பில் முடங்கி கிடக்கும் நாயினை புலி என சொல்வது போல் இகழ்ச்சிகுரியதாகும் என்பது பொருள். தன்னை தானே புகழ்தல் என்பது நோய் […]

குலேசனின் கதை

பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அரசுரர்களையும் அதர்மத்தையும் அழிப்பதற்கு என்றாலும் அங்கு அந்த பரந்தாமனின் ஒவ்வொரு அசைவும் வாழ்வுக்கும் ஆன்மீகத்துக்குமான தத்துவ போதனைகள் விளையாட்டாகவும், புன்னகையடனும், இயல்பாகவும் அவன் நடத்திய ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்த போதனைகளை வாழ்வுக்கும் ஆத்மாவுக்கும் போதித்தது, அப்படி கண்ணன் நடத்தியதுதான் அந்த குலேசன் கதை அந்த குலேசனின் கதை எப்பொழுது படித்தாலும் உருக்கமானது, பல தத்துவங்களை போதிப்பது பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன் பின்னாளில் கண்ணன் பெரும் […]

சுப்பிரமணிய பாரதி

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரு பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிக சரியான ஆற்றல் மிககவர்களை, இறைசக்தி தேடி கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும் உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால்வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும் அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனை பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும், வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், குருநாணக் […]

அபிராமி அந்தாதி 63

“தேறும்‌ படிசில ஏதுவும்‌ காட்டிமுன்‌ செல்கதிக்குக்‌கூறும்‌ பொருள்‌ குன்றிற்‌ கொட்டும்‌ தறிகுறிக் கும்‌சமயம்‌ஆறும்‌ தலைவி இவளாய்‌ இருப்பது அறிந்திருந்தும்‌வேறும்‌ சமயம்‌ உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும் இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் […]

கந்தர் அனுபூதி : 06

“திணியா னமனோ சிலைமீ துனதாள்அணியா ரரவிந்த மரும்புமதோபணியா வென வள்ளி பதம் பணியுந்தணியா வதிமோக தயாபரனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “திணியான மனோ சிலை மீது உனதாள்அணியார் அரவிந்தம் அரும்பு மதோபணியா என வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே” “திணியான மனோ சிலை” என்றால் மிக உறுதியான பாறை என பொருள், மிக மிக இறுக்கமான தன் பாறை மனதை பற்றி சொல்கின்றார் அருணகிரியார் மேலும் தொடர்கின்றார் “மீது உனதாள் அணியார் […]

சக்கரவர்த்தி ராஜகோலாச்சாரியார்

அந்த மனிதன் மிகபெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகபெரும் தீர்க்கதரிசி, லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறாஅந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசபணி என பல இடங்களில் மிகபெரிய அடையாளமாய் இருந்தான், பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகபடுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்ததே அந்த மாமனிதனே அந்த […]

இந்துக்களின் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் முக்கியமானது, அந்த பவுர்ணமியோடு வரும் நட்சத்திரங்கள் படி பெரும் நுணுக்கமான பண்டிகையினை அமைத்தார்கள் நிறைந்த நிலவு கொண்ட அந்நாள் மாதம் மாதம் கொண்டாடபட வழிவகைகளையும் ஏற்படுத்தினார்கள், அதில் ஒரு தத்துவமும் ஆன்மீகமும், சுற்று சூழலும், மருத்துவமும்,நலமும் மானிட நலமும் அறிவும் தெய்வ நம்பிக்கையும் மேம்பட வழியும் சொன்னார்கள் தைபூசம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி பூரம், ஆவணி அவிட்டம் என்ற வரிசையில் கார்த்திகை தீபமும் மகா முக்கியமான ஒரு நாள் […]

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை ஏதோ விளக்கு வைத்து கொண்டாடும் வெறும் சம்பிரதாயம் அல்ல, மழைகாலத்தில் சீதோஷ்ண கிருமிகள் பரவாமல் இருக்க மட்டும் கொளுத்தபடும் பெரும் நெருப்பும் அல்ல‌ அது மாபெரும் தத்துவத்தையும் இந்திய ஞானமரபின் ஆன்மீக மரபின் பெரும் ஞானத்தையும் சொல்லும் நாள் இந்திய இந்துக்களின் பிரதான வழமை அக்னி வழிபாடு, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று என்றல்ல அதையும் தாண்டி பரம்பொருளே ஜோதிவடிவானவர் என சொல்லி அந்த ஒளியினை வணங்கும் சமூகம் இது […]

Jack Farj Rafael Jacob

அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார் அவர் பெயர் Jack Farj Rafael Jacob அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications