பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று… ஜெய்ஹிந்த்

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார் அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் […]

ஆப்பிரிக்காவில் மோடி ….

ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த மோடி உறுதி : செய்தி இந்தியாவினைத்தான் அவரால் வளர்க்க முடியவில்லை பாவம் ஆப்ரிக்காவினையாவது வளர்த்து காட்டட்டும் ஆப்ரிக்காவினை எப்படி வளர்ப்பது? மோடிக்கு தெரியாத வித்தையா? இந்தியாவினை இன்னும் நாசமாக்கி ஆப்ரிக்கா அளவிற்கு கொண்டு சென்றுவிட்டால் தீர்ந்தது விஷயம். இந்தியா அளவிற்கு ஆப்ரிக்காவினை கொண்டுவந்துவிட்டார் இந்த ஏழைத்தாயின் மகன் என கண்ணீர்விட்டு உருக்கமாக சொல்லிகொள்ளலாம் எங்கு சென்றாலும் பசுமாடு மேய்க்க வேண்டும், இதற்கு இந்திய பிரதமர் என்ற பதவி எதற்கு? நடிகர் ராமராஜன் […]

மராத்தா போராட்டம்

மராத்தா என்பது மகராஷ்டிரத்தின் குறிப்பிட்ட சாதி கிட்டதட்ட 30% அகள் அம்மாநிலத்தில் வசிக்கின்றார்கள் சக்கதவர்த்தி வீர சிவாஜி முதல், அன்னா ஹசாரே வரை பெரும் பிம்மபங்களை கொடுத்த சாதி அது. மராட்டியம் என்பது எங்கள் பூமி என சொல்லி கொள்வார்கள் அவர்களிலும் எம்.எல்.ஏக்கள் எல்லாம் உண்டு, முன்னாள் முதல்வர்களே உண்டு எனினும் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டுமாம் கிட்டதட்ட 1980களில் தமிழகத்து ராமதாஸ் வன்னியர் சங்கம் மூலம் முன்னெடுத்த போராட்டத்தின் சாயல் […]

முன்னனியில் இம்ரான்கான்

பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கின்றார் இம்ரான்கான் இது இந்தியாவில் எப்படி எதிரொலிக்குமோ தெரியாது, இங்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு இனி அரசியல் ஆசை ஊற்றெடுக்கலாம், டோனியினை பலர் சீண்டலாம், ஏன் கோலி கூட மோடிக்கு அரசியல் சேலன்ஞ் விடலாம் ஆயினும் மனோஜ் பிரபாகர், சித்து போன்ற சூடுபட்ட கிரிக்கெட் வீரர்களும் உண்டு ஒருவேளை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரமராகிவிட்டால் என்னாகும்? நமது பிரதமர் பிட்னெஸ் சேலஞ்ச் விடாமல் இருப்பாரா? பாகிஸ்தானில் இம்ரான்கான் முன்னணி எனும் […]

என்னை பற்றிய வதந்தி….

இது வதந்தி என்பது பாகம்பிரியாளுக்கும் தெரியும், நிச்சயம் நம்பமாட்டார் காரணம் அவர் கணக்குபடி இந்த வதந்தியின் அளவு மிக மிக குறைவு (எனினும் .இது பாகம்பிரியாள் கண்ணில் படாமல் இருப்பது வரைதான் உயிருக்கு உத்திரவாதம்…)

திருட்டு அரசியல் தமிழகம்

துணை முதலமைச்சரே சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய பின்னும் இந்த ஊழல் ஆட்சியினை கலைக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை ஏன் என்றால் இதுதான் திருட்டு அரசியல் தமிழகம். அப்படி செய்யும் பட்சத்தில் திமுக வளர்ந்துவிடும் என்பது பாஜக கணக்கு, அதனால் அது கள்ள அமைதி. தமிழிசை தாண்டவமாடாமல் இருப்பதற்கும், எச்.ராசா மவுன விரதம் இருக்கவும் இதுதான் காரணம் சரி திமுக சொன்னால் என்ன? அதற்கும் வேறு கணக்கு இருக்கின்றது, இந்த ஆட்சி சரியும் பட்சத்தில் பாஜகவினை […]

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு பதிவாகிவிட்டது, அந்த கட்சி கலாச்சாரம் அது. ஜெயா வழியில் கட்சி ஆட்சி என அவர் சொன்னபொழுதே இப்படி சிக்குவார் என உறுதியாயிற்று கட்சி கொள்கைபடி செயல்பட்டிருக்கின்றார் இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை ஆச்சரியம் என்னவென்றால் ஒரு துணை முதலமைச்சர் மேல் சொத்துகுவிப்பு வழக்கு தொடரபட்டிருக்கின்றது. அவர் நிச்சயம் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல‌ அவரை பதவி விலக சொல்லவோ இல்லை அவரை நீக்கு என பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் […]

நகைக் கொள்ளை

நகை கொள்ளை தொடர்பான விசாரணையில் தமிழகத்தில் திருட்டு நகைகளை வாங்கிய பிரபலநகைகடை முதலாளி கைதுசெய்யபட்டிருக்கின்றார் விசாரித்ததில் அவருக்கு 15 வருடமாக திருடி கொடுத்தவர் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதியாம் அந்த திருடன் இன்னும் அகபடவில்லை என்பதால் போலிசார் கடும் வேகத்தில் தேடி வருகின்றனர் இது ஒரு செய்தி அவ்வளவுதான் நீங்கள் அங்கிள் சைமனின் கழுத்தில் கிடக்கும் பெரும் தங்க சங்கிலியினை பார்த்து புன்னகைத்தால் சங்கம் பொறுப்பல்ல‌

மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர், இதே ஜூலை 25ல் கொல்லபட்டனர் அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்? குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள் பிரபாகரனை போல பங்கரில் பதுங்கியவனில்லை குட்டிமணி, போலிஸ் நிலையத்தை நொறுக்கிவிட்டு ஊருக்குள் வாலிபால் ஆடிகொண்டிருக்கும் அளவு அவனிடம் தைரியம் இருந்தது அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் […]

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் : ஓ.பி.எஸ்

பன்னீரை நிர்மலா விரட்டியது விஷயம் அல்ல, விரட்டபடுவது பன்னீருக்கு புதிதும் அல்ல‌ ஜெயா அப்படி பன்னீரை குட்டிகரணம் அடிக்க வைத்திருந்தார், சசிகலா கோஷ்டி பன்னீரை காதை திருகி தலைகீழாக தொங்க விட்டிருந்தகாலமும் இருந்தது மன்னார்குடி குடும்பம் இருமினாலே தலையால் நடந்தவர் பன்னீர் அவமானத்திற்கே அவமானம் கொடுத்தவர் பன்னீர் என்பது கடந்த வரலாறு விஷயம் அந்த விரட்டல் அல்ல மாறாக பன்னீரின் சகோதரருக்கு கொடுக்கபட்ட விமான உதவி பன்னீரின் சகோதரருக்கு உடல்நல தேவைக்காக ராணுவ விமானத்தை நிர்மலா ஒதுக்கினார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications