பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார் ராகுல்

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு அதாவது டெல்லியில் வெட்டியாக‌ முகாமிட்டிருக்கும் 36 எம்பிக்களுக்கு முடிவு கட்ட போவதாக சொல்லி கொள்கின்றார் பழனிச்சாமி நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார்: ராகுல் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, பெரும் கலவரங்கள் என அந்த கோஷ்டி செய்யும்பொழுது கெடாத கவுரவம் ராகுலால் கெட்டுவிட்டதாம் சொத்து வரி உயர்வை கண்டித்து 27ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் : மு.க‌ ஸ்டாலின் அறிவிப்பு ஸ்டாலினுக்கு சொத்து […]

ஆபிரிக்கா நாடுகளுக்கு மோடி பயணம்

உகாண்டா செல்கின்றாராம் மோடி , அங்கு எண்டபே நகருக்கும் செல்கின்றாராம் எண்டபே நகரில்தான் இஸ்ரேலின் மிக புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையான ஆப்பரேஷன் என்டபே நடந்த விமான நிலையம் இருக்கின்றது அதை பார்க்கும்பொழுது காந்தகாரில் ஏர் இந்திய விமானம் கடத்தபட்டிருந்தபொழுது, லஷ்கர் தீவிரவாதியினை கொடுத்து விமானத்தை ஜஸ்வந்த் சிங் மீட்டுவந்த காட்சி மோடி மனதில் வந்து போகாமல் இருக்காது. எண்டபே இஸ்ரேலின் தீரத்தை சொல்லி நிற்கும் விமான நிலையம், காந்தகார் இந்திய உளவுதுறையின் தவறை சுட்டி காட்டி நிற்கும் […]

காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி

காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி “இப்போதைக்கு சைலன்ட் மோடுக்கு போயிரணும், இப்போ போய் கன்னடனே, தமிழனுக்கு நீர் விடுன்னு கத்தினா மொத்த அணையினையும் குமாரசாமி தொறப்பான், தமிழகமே பாதிக்கபடும் இப்போ சத்தமே காட்ட கூடாது, தொலைச்சு புடுவானுக” நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி செலுத்த டெல்லிவரை சென்றாராம் பன்னீர் செல்வம், தமிழனின் நன்றிகடன் என்றால் சும்மாவா? ஆனால் பன்னீருக்கு அப்படி என்ன செய்தார் நிர்மலா என்றால், அவரின் சகோதரர் சிகிச்சைக்கு விமானம் அனுப்பினாராம் ஜெயாவின் மேல் சிகிச்சைக்கு […]

பாலியல் கல்வி தீர்வு என்ற கோரிக்கை வலுக்கின்றது

குழந்தைகள் மீதான வன்முறை, பெருகி வரும் பலாத்கார கலாச்சார கொடுமைகள் , பருவ வயதில் தடுமாறும் பதின்மவயதினர் பிரச்சினைகளை எல்லாம் எப்படி சரி செய்வது, எப்படி வருங்கால தலைமுறையினரை காப்பது என் ஆளாளுக்கு கருத்து சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாலியல் கல்வியினை கொண்டுவருவதே அன்றி வேறு தீர்வு அல்ல‌   இதனை தமிழகத்தில் உரக்க சொன்னவர் தங்க தலைவி குஷ்பு, அவர்தான் துணிந்து சொன்னார் ஆனால் அவரை கலாச்சாரத்தை கெடுக்க வந்த காரிருள் என்றார்கள், […]

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு அதானே, நாட்டை கெடுக்க ஒருவர் பிறந்த நாளில் சமூகத்தை கெடுத்த எல்லா கைதிகளும் மகிழ்வாக இருப்பதுதானே முறை, அரசு அதனைத்தான் செய்கின்றது இனி மீதமிருக்கும் கைதிகள் ஜெயா பிறந்தநாளில் விடுதலை செய்யபடுவார்கள் ஏதும் குற்றம் செய்து சிறை செல்ல அவசியமிருப்பவர்கள் உடனே செய்துவிட்டு சிறை செல்லலாம் நிச்சயம் ராமசந்திரனின் அடுத்த பிறந்தநாளில் வந்துவிடலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது ஜெயா பிறந்த நாள் இந்த தைரியத்தில் தங்க […]

கனியிருப்ப காய்கவர்ந்தற்று..

இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய ஆடவர்களும், ஏராளமான இளம்பெண்களும் கைது, முகநூல் மூலம் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தகவல் : செய்தி இந்த தமிழக, இந்திய‌ நண்பர்களை எல்லாம் அவசரமாக அன்பிரண்ட் செய்து விட வேண்டும் கிராதகர்கள். இவர்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இலங்கையர்களை நண்பர்களாக ஆக்கிவிட வேண்டியதுதான் “கனியிருப்ப காய்கவர்ந்தற்று..” என இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொல்லி இருக்கின்றார்

இந்தியா எங்கும் லாரி ஸ்டைரக்

இந்தியா எங்கும் லாரி ஸ்டைரக் தீவிரமடைந்திருப்பது நல்லதல்ல, அரசு உடனே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் லாரிகள் இந்நாட்டின் ரத்த நாளங்கள், எல்லா வித சரக்கு போக்குவரத்தும் அதன் மூலமே பரிவர்த்தனை செய்யபடும் லாரிகள் ஸ்டிரைக்கினை தொடங்கி பல இடங்களில் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர், வியாபாரிகள் படு மோசமான விலை வீழ்ச்சியினையும் சிக்கலையும் சந்திக்கின்றனர் காய்கறி முதல் பால் வரை அத்தியாவசிய பொருட்கள் கெட்டுபோய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் இருகின்றார்கள் இதில் இப்பொழுது டேங்கர் லாரியும் சேர்ந்துகொள்ள போகின்றதாம் இதனால் பெட்ரோல் […]

சென்னையில் மின்சார ரயில் விபத்து

சென்னையில் மின்சார ரயில் விபத்தில் நேற்று இருவர் உயிரிழந்தார்கள், அந்த அதிர்ச்சி விலகும் முன்பே இன்று 5 பேர் இறந்திருக்கின்றார்கள் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் இதற்கு ஒரே காரணம் சம்பந்தபட்ட தரப்பின் அஜாக்கிரதையே பேருந்துகளிலும், கார்களிலும், ஆட்டோ, பைக்களில் அனுமதிக்கபட்டவர்களை தவிர கூடுதல் நபர் இருந்தால் உடனே பிடிக்கின்றார்கள், அது நல்ல விஷயமும் கூட‌ ஆனால் மின்சார ரயியில் இதனை கண்டுகொள்வார் யாருமில்லை, இதனால் காலை நேர நெருக்கடி நேரத்தில் தொங்கி கொண்டுசென்ற இந்த மாணவர்கள் […]

தலைவி சென்ற இடமெல்லாம் ….

கொஞ்ச நாளைக்கு முன்பு பிரான்ஸுக்கு சென்று வந்தார் தலைவி, அதன் பின் உலக கோப்பையினை வென்று அசத்தியது பிரான்ஸ் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்து சென்றார் தலைவி, இப்பொழுது காவேரி வெள்ளத்தில் மகிழ்ந்திருக்கின்றது திருச்சி தலைவி கால்பட்ட இடமெல்லாம் மகிழ்ச்சி பெருகும் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்  

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது, நீர் வரத்து அதையும் தாண்டி வருவதால் காவேரியில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது இந்நிலையில் தண்ணீரை கடலுக்கு விடாமல் இருக்க தமிழகம் கூடுதல் அணை கட்ட வேண்டும் என பல திடீர் புவியியல் நிபுணர்கள் கருத்து சொல்ல தொடங்கியாகிவிட்டது உண்மையில் காவேரியில் இருக்கும் அணைகளில் மேட்டூரே மிக பெரிது, தமிழக பாசன பரப்புகளை கருத்தில் கொண்டு அன்றே அப்படி கட்டபட்டிருக்கின்றது, வெள்ளையன் அப்படித்தான் கட்டி இருக்கின்றான் அதனை ஒப்பிடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications