பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழீழம் அமைவதை தடுத்து ஒழித்த நளினியின் காதல்

நாதா.. மேனகையே வராதே, இது கார்த்திகை மாதம் என்பதால் நான் விரதமிருக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன் எங்கே என் கண்களை பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் கண்ணே, அதை கண்டுவிட்டால் ஏதடி விரதம், எல்லாம் நொடியில் முறிந்துவிடாதா? இல்லாவிட்டாலும் உங்களால் என்னை மறந்து விரதம் இருக்கமுடியுமா சுவாமி? அதை உன் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன் என் மானே என்ன செய்கின்றீர்கள் சுவாமி? உலக செய்திகள் கந்தர் அனுபூதி என மூழ்கி கிடக்கின்றேன், போகிற போக்கில் இந்த நளினியினை இலங்கை ஜனாதிபதி […]

தென்னாட்டு சாவர்க்கர்

அந்த சுத்தமான இந்துஸ்தானி, பரிசுத்தமான பாரத புதல்வன் ஒரு வரம், மிக பெரிய வரம், தென்னாட்டு சாவர்க்கர் என வரலாற்றில் இடம் பிடித்த உன்னதமான தியாகி தியாகி என ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாதபடி அவரின் ஒவ்வொரு அசைவும் வலியுமே தியாக மூச்சாக வாழ்ந்த தியாக ஜோதி அவர் எடுத்த முயற்சியும், அவர் செய்த சாதனையும் தாதாபாய் நவ்ரோஜி காட்டிய வழியின் சாயலாய் இருந்தது இன்றும் உலகின் கப்பல் போக்குவரத்தின் பெரும் கட்டுப்பாடு அதாவது சரக்கு போக்கு கப்பல்வரத்து […]

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி சில சாபங்களின் காரணமாக ராமனை எதிர்பார்த்திருந்த அவளுக்கு இறங்கி வந்து அருள் செய்தான் ராமபிரான், அவர் அன்போடு கொடுத்த எச்சில் கனிகளை அதாவது இது சுவையானதா […]

நாச்சியார் திருமொழி : 26

அன்று ஒரு பொய்கையிலே நீராட விளைகின்றாள் ஆண்டாள், பொய்கை என்பதும் சுனை என்பதும் இயற்கையாக அமைந்தவை, குளம் என்பது செயற்கையாக அமைய பெற்றது அந்த பொய்கைக்கு தான் தன் தோழியரோடு நீராட செல்கின்றாள் ஆண்டாள், தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் தடாகம் அது வழக்கமாக கண்ணன் வருவதும் ஆடைகளை எடுத்து விளையாடுவதுமாக இருப்பதால் இம்முறை தோழி ஒருவரை ஆடைக்கு காவல் வைப்பது என முடிவாயிற்று ஆண்டாளுக்கு அதனில் மெல்லிய வருத்தம் இருந்தது, கண்ணன் வருவதும் ஆடைகளை மறையவைத்து […]

லாலா லஜ்பதி ராய்

லாலா லஜ்பதி ராய் இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி, காந்தி பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற காலத்திலே இங்கு சுதந்திரத்துக்கு போராடிய மாமனிதர், இந்திய வரலாற்றில் மறைக்கபட்ட பெரும் தலைவர் அவரும் திலகரும் விபின் சந்திரபால் என்பவர்களே 1857க்கு பின்னரான இந்திய சுதந்திர போரை முன்னெடுத்தனர், அந்த வேகத்தில் அதாவது 1907லே இந்தியா சுதந்திரம் பெறும் வாய்பும் இருந்தது லால் பால் பால் கூட்டணி ( (Lal – Bal- Pal) என அந்த முப்பெரும் தலைவர்கள் நாட்டில் […]

கால பைரவர்

இந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கையும் ஏற்பாடும் ஆச்சரியாமான ஞானம் கொண்டவை, இன்னொரு வகையில் அவையெல்லாம் விஞ்ஞானத்தின் வடிவங்கள், இன்றும் மானிடர் புரிந்துகொள்ளமுடியாத தத்துவங்களை, பிரபஞ்ச ரகசியங்களை தெய்வத்தின் பெயரால் சொல்லி வைத்தார்கள் இந்துக்கள் பாற்கடல் என பிரபஞ்ச அண்டத்தை சொல்லியதாகட்டும், சக்தி தேவி என பிரபஞ்சதை இயக்கும் சக்தியினை சொன்னதாகட்டும், நீள் வட்டமான அண்டத்தின் தோற்றத்தை முட்டையில் இருந்து உலகம் தோன்றிற்று என்றதாகட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு தெய்வ கோலத்தை நிறுத்தி மக்களுக்கு சொல்லி வைத்தார்கள் இந்துக்கள் இந்துக்களின் தெய்வங்களும் […]

திராவிடம் தமிழீழம் Vs தமிழக, இலங்கை இந்துக்கள்

இந்த சுகி.சிவம், நெல்லை கண்ணன் போன்றோரெல்லாம் அதிதீவிர பார்ப்பன வெறுப்பை கொண்டிருப்பதும், அந்த வெறுப்பால் தமிழக இந்து வேறு பார்ப்பனிய இந்துமதம் வேறு என சொல்வதெல்லாம் ஏன்? உண்மையிலே பிராமணர்கள் இந்துமதத்தில் அப்படி செய்தார்களா? தமிழக இந்துவாழ்வில் அப்படி குழப்பினார்களா விளக்க முடியுமா? என கேட்டால் எளிதில் சொல்லலாம் இந்த விவகாரமெல்லாம் கொஞ்சம் நீண்டவை, கொஞ்சம் ஆழமாக பார்க்காமல் விளங்காது இங்கு ஆதிகாலம் கொஞ்சம் குழப்பமானது, மிக தொன்மையான வரலாறு கொண்டது, ஆனால் அந்த வரலாற்றிலெல்லாம் பிராமணர்கள் […]

கோட்சேவின் நெஞ்சுக்கு நீதியானது…

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய எல்லையும் வங்க எல்லையும் கோரமாக எரிந்தது, எரிந்தது என்பதை விட இந்துக்கள் எரிந்தனர் அவர்கள் சொத்துக்கள் எரிந்தது, இந்து பெண்களெல்லாம் கற்பிழந்து சாவை பெற்றுகொண்டும் ஓடிகொண்டுமிருந்தனர் தனக்கு அள்ள அள்ள செல்வத்தை வழங்கிய இந்தியா தன் கையினை விட்டு போகும் வெறுப்பில் வெள்ளையன் செய்த சதி அது நிச்சயம் […]

பிர்சா முண்டா

18ம் நூற்றாண்டில் பொதுவுடமை பேசியவன் கார்ல் மார்க்ஸ் என்றாலும் அவன் ஐரோப்பாவில் எழுதி பேசிகொண்டிருந்தானே தவிர காரியத்தில் இறங்கவில்லை எல்லாம் பேச்சோடு நிறுத்திகொண்டான் அவனின் சில கூட்டாளிகளும் அவ்வகையே 1919ல்தால் லெனின் ரஷ்யாவில் அடித்து பிடித்து ஆட்சியினை மாற்றினான், மாவோ, காஸ்ட்ரோ, ஹோ சி மின் என எல்லாரும் லெனினுக்கு பின்னர்தான் வந்தார்கள் ஆனால் 1890களிலே ஒரு இந்தியன் கம்யூனிசம் பேசினான், சோவியத் யூனியனுக்கு முன்பே அவன் உலகில் பொதுவுடமை இயக்கத்தை நிறுவ பார்த்தான் என்றால் அவன் […]

புல்தின்ற கல்நந்தி , மிலேச்சர் மிரண்ட வரலாறு

இலஙகையில் உள்ள இந்துமத ஸ்தலங்களை சொல்லமுடியுமா என சிலர் கேட்டார்கள், அந்த தீவில் சைவம் எக்காலமும் உண்டு, ராவணன் சீதையினை சிறைவைத்த வகையில் வைஷ்ணவ அடையாளமும் உண்டு பின்னாளில் பவுத்தம் வந்தாலும் சிங்களவரில் பலர் இன்றும் இந்துக்களே, எப்படியான இந்துக்கள் என்றால் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மிக புனிதமாக போற்றி வணங்கும் சுத்தமான இந்துக்கள், இன்றும் கதிர்காமம் ஆலயம் அவர்கள் கட்டுபாட்டில்தான் உண்டு நல்லூர் கந்தசாமி கோவில் உலகெல்லாம் அறிந்த சிறப்புடையது, திரிகோணமலை சிவன் கோவில் நாயன்மார்களால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications