பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்

இந்த ஜெயக்குமார் பட்ஜெட் வாசித்தபொழுது இது சரியில்லை நான் போடுகிறேன் சிறந்த பட்ஜெட் என அறிவாலயத்தில் செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம் சும்மா “மாதிரி சட்டமன்றம்” என அவரே முதல்வர் போல வீற்றிருந்து 4 பேர் கைதட்டுவதெல்லாம் சகிக்கவில்லை முன்பெல்லாம் திமுகவில் திருச்சி சிவா முதல் டி.ஆர் பாலு வரை பொளந்துகட்டுவார்கள் ஆற்காடு வீராசாமி முதல் கடைநிலை தொண்டன் வரை உற்சாகமாய் பேசுவான், கலைஞரும் பேசவிட்டு ரசிப்பார் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், கனிமொழி குரல் தவிர […]

பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி

பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி அந்த தளபதி வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது “கலெட்டர் சார், நீங்க எப்போவாவது ஏழையா இருந்திருக்கீங்ளா? கையில காலணா இல்லாம பசியோட தெருவில அலைச்சிருக்கீங்களா? வயிறு பசிக்கும்பொழுது கோர்ட்படி ஏறமுடியாதுசார், அங்கெல்லாம் போக வழியில்லாம இங்க வாராங்க அது ஏன் உங்களுக்கு பொறுக்கல தொட்றா.. தொட்டு பார்ரா பாக்கலாம்” உங்களுக்கு நினைவுக்கு வரும் விஷயங்களை நீங்களும் எழுதுங்கள் இந்த அனில் அகர்வால் மட்டும் பிராமணனாக […]

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார். எந்த ரஜினி தளபதி, பாஷா, கபாலி, காலா என திரையில் அடித்து நொறுக்கிய ரஜினி காலா டிரெய்லரை கண்டால் “உடம்புதான் நமக்கு பலம்..மக்களை திரட்டுங்கலே, நாம யாருண்ணு காட்டுவோம்லே” என முழங்குகின்றது “அடங்க மறுப்பவன் … புடுங்குபவன் யாருன்னு காட்டு” என பாடல் வேறு “நிலம் உங்களுக்கு அதிகாரம் எங்களுக்கு வாழ்க்கை” இதைத்தானே தூத்துகுடிகாரனும் ஸ்டெர்லைட்டிடம், அரசிடமும் சொல்லிகொண்டே இருந்தான் இவர் சொன்னால் பஞ்ச் டயலாக், மக்கள் சொன்னால் […]

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி ஆவடி முதல் கன்னியாகுமரி வரை ஏகபட்ட தொழிற்சாலை நிரம்பிய தமிழகம் இது, திருச்சி பெல் தொழிற்ச்சாலை எல்லாம் பெரும் பிரமாண்டம் எல்லா ஆலையிலுமா போராட்டம் நடக்கின்றது? தூத்துகுடியில் ஸ்பிக் முதல் இன்னும் ஏகபட்ட விஷயம் உண்டு, அதெற்கெல்லாமா போராட்டம் உண்டு? நெல்லை சிமென்ட் தொழிற்ச்சாலை பிரமாண்டம் என்ன? ஒரு குரல் கேட்டிருக்கும்? எது எல்லாம் ஓரளவு பாதுகாப்பான தொழிற்சாலையோ அங்கெல்லாம் மக்கள் நலன் […]

வையகத்து வைரச்சிலையே வாழ்க…

பிரான்சின் வெறும் கண்ணாடி மாளிகை முன் இந்தியாவின் முழு வைரசிலை கோஹினூர் வைரத்தைவிடவும் மிக பெரும் வைரம் இந்தியாவில் இருந்திருக்கின்றது என்பதை பிரான்ஸ் இப்பொழுதுதான் உணர்ந்திருக்கின்றது அச்சிலை முன் , அவர்களின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையின் பெருமை அவர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டது வையகத்து வைரச்சிலை வாழ்க…  

ரஜினி வீழ்ச்சிக்கு தயாராவது தெரிகின்றது

ரஜினி 1980களில் இருந்து மாஸ் ஹீரோ, பெரும் தயாரிப்பாளர் எல்லாம் அவருக்காக காத்திருப்பார்கள், கை கட்டி நிற்பபார்கள் சினிமாவில் அவருக்கான இடம் நிச்சயம் பெரிது, அதற்கான மரியாதை அங்கு கொடுக்கபட்டது, இன்றும் உண்டு அவரின் ரசிகர்களுக்கு அவர் கடவுள், அந்த வட்டம் வேறு எந்த இயக்குநரும் ரஜினியினை கொஞ்சமும் மரியாதை குறைவாக நடத்த முடியாது, ஏன் தயாரிப்பாளரே குனிந்து கொண்டுதான் நிற்பார் இப்படியான பெரும் மரியாதைகுரியவராக கடவுளாக ரஜினி சினிமாவில் வரலாம் அவருக்காக அரசியல்வாதிகள், ஏன் மோடி […]

மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்?

கன்னடத்தில் மழைபெய்ய ஆரம்பித்து அணைகளின் நீர்மட்டம் உயர்கின்றது, தமிழகம் இப்பொழுதே குரல் எழுப்ப வேண்டிய நேரமிது இப்பொழுது விழித்தால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க சிக்கல் இருக்காது மாறாக தூங்கிகொண்டே இருந்தால் எஞ்சிய வெள்ள‌ நீரை கன்னடம் திறந்துவிட்டு இந்த ஆண்டுக்கான மொத்த நீரையும் கொடுத்தாயிற்று என கணக்கை சரி செய்துவிடும் மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்? தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் இப்பொழுதே தமிழக அரசு சுதாரித்து களமிறங்குவதுதான் சரி ஆனால் […]

மோடி ஸ்பீக்கிங்….

அர்ரே பழ்ணிச்சாமி பையா, நம்பிள் தூத்துகுடிலே செத்தவங்களுக்கு இர்ங்கல் சொல்ல முடியாது , புரிஞ்சுக்கோ நம்பிள் இன்னும் குஜ்ராத்ல செத்தவங்க்ள்க்கு, காஷ்மீர்ல செத்தங்கட்கு கூட ஒன்னும் சொல்லலே. சொல்ல ஆரம்பிச்சா 1 வருசம் சொல்லணும் , அவ்வ்ளோ விஷ்யம் இருக்கு பைய்யா இந்த ரஜ்னி அனுப்ன மாத்ரி இன்னும் நிறையாபேர அங்கே அனுப்பு, ஆள் இல்லண்ணே காவ்ரி பத்தி பேசி அந்த குமாரசாமி பையனை அழவுடு நம்பிளை டிஸ்டர்ப் பண்ணாதே பையா, நம்பிள் சிங்கப்பூர் கோமதி விலாஸ்ல […]

மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி

அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் மானம், கோபம் இவற்றை எல்லாம் உடனே களைந்து விட வேண்டும். மிக முக்கியமாக எழுத்து,பேச்சு என எல்லாவற்றிலும் வலு கவனமாக இருக்க வேண்டும் (மற்றபடி பழிவாங்குதல், சதிதிட்டம், மிரட்டல் , உருட்டல் எல்லாம் மறைமுகமாக செய்ய வேண்டும்) யாரையும் பொதுஇடத்தில் பேசும்பொழுதோ, எழுதும்பொழுதோ காயபடாமலோ, ஆத்திரபடவைக்காமலோ செல்வது தனிபயிற்சி அண்ணா அதில் ஈடு இணையற்று இருந்தார், கலைஞர் அதை அப்படியே பின்பற்றினார் ஆற்றல் அதிகம் இல்லை என்றாலும் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓகே, […]

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

37ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது, தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது. அக்காலத்தில் யாழ்பாண தமிழரின் அறிவின் அடையாளமாக அந்நூலகம் இருந்தது. அங்கிருந்த புத்தகங்கள் அரியவை இனி கிடைக்காதவை. வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications