பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பண்ருட்டி ராமசந்திரன் வாய்திறக்காமல் இருக்க காரணம் என்ன?

ஈழபிம்பம் உடைய வேண்டுமானால் இங்கு செய்ய வேண்டியது பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் பகிரங்க பேட்டிகளை வழங்க வேண்டும் ஆனால் வழங்கமாட்டார், அடித்து சொல்லலாம் அவர் வாயே திறக்கமாட்டார் ஈழத்தின் எதிரி கலைஞர் என்ற கருத்து இங்கு நிலைநிறுத்தபடுவதில் பண்ருட்டியாருக்கு ஏக சந்தோஷம் காரணம் திமுகவில் இருந்தபொழுதே பண்ருட்டிக்கும் கலைஞருக்கும் ஆகாது பண்ருட்டியார் அப்பொழுதே பொறியியல் படித்தவர், சிறந்த ராஜ தந்திரி ஆனால் கட்சியின் உள்ளடி வேலைகளால் அவரை நம்பதகாதவர் பட்டியலில் வைத்தார் கருணாநிதி பின்னாளில் ராமசந்திரனோடு பண்ருட்டி […]

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள்

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள், அலறுங்கள், பிரபாகரன் மீன்பிடித்து பொரித்து கொடுத்தான் என கதையும் விடுங்கள் ஆனால் இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில, தமிழகத்தில் இதனை பற்றி பேசும் ஒரே தகுதி கொண்டவர் மிக சிலர், சில‌ர் மகா முக்கியமானவர்கள் ஆனால் அவர்கள் வாய்திறப்பதில்லை பண்ருட்டி ராமசந்திரனும் ப.சிதம்பரமும் அதில் முக்கியமானவர்கள். ப.சிதம்பரம் பிரபாகரன் இந்தியாவில் பயிற்சிபெறும்பொழுது அவனை தன் பாதுகாப்பிலே வைத்திருந்தார், திராவிட கும்பலோடு பழகிய பிரபாகரன் சிதம்பரத்திடம் […]

தலைவி ஏன் லண்டன் சென்றார் ?

தலைவி ஏன் லண்டன் சென்றார் என தீவிர விசாரணையில் இறங்கினால், லண்டனில் இருந்து சங்க புலனாய்வு பிரிவினர் தரும் தகவல் இதுதான் அதை கேட்டதில் இருந்து சங்கம் ஆனந்த களிநடனம் புரிகின்றது, கோட்டான கோடி நன்றி இயேசப்பா என சொல்லிகொண்டே இருக்கின்றது அப்படி காதில் தேன்பாய்ந்த செய்தி என்ன தெரியுமா? இளவரசர் ஹாரி என்பவருக்கு இன்று திருமணமாம், அவர் அமெரிக்க நடிகையினை மணக்கின்றாராம் ஒரு நடிகை அரச குடும்பத்தில் காலடி எடுத்துவைக்கும் நேரம் , தன் ஆற்றலால் […]

தலைவியினை எதிர்த்தால் இதுதான் கதி

தெருநாவுக்கரசர் மேல் கடும் கோபத்தில் இருக்கும் சங்கம் கொடும்பாவி எரிக்க கிளம்பியது, இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை ஒரு தெருநாயினை பிடித்து அதன் கழுத்தில் தெருநாய்க்கரசர் என எழுதி தொங்கவிடலாம் என்றால் தெருநாயுமில்லை அதனால் என்ன? காலையிலே பெரிய மீன் மீது திருநாவுக்கரசர் என பிழை இல்லாமல் எழுதி கோபத்தில் “சாவுடா டேய்..உன்னை விட மாட்டோம்டா” கண்டமேனிக்கு வெட்டி குதறி பெரும் எதிர்ப்பினை தெரிவித்தாகிவிட்டது நாளை ஆடு மேல் திருநாவுக்கரசர் என எழுதி அதன் தலையில் அவர் படத்தை […]

பிரபாகரன் திருந்தவில்லை, பாலசிங்கம் விலகினார், அப்படியே மரணமடைந்தார்

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பதே கலைஞரையும் காங்கிரசையும் திட்டுவதற்கு என்றே நடத்தபடுகின்றது, நடக்கட்டும் இதில் 2005ல் நடந்த சம்பங்கள் , 2009க்கு எப்படி வழிவிட்டது என்பதை மட்டும் எல்லோரும் மறக்கின்றார்கள், உண்மையில் புலிகள் ராஜிவ் கொலையில் சாகவில்லை. அவர்கள் செய்த ஏகபட்ட அட்டகாசங்களுக்காக சாகவில்லை 2001ல் உலகளாவிய தீவிரவாதிகள் நெட்வொர்க்கை பின்லேடன் அட்டகாசத்தையொட்டி அமெரிக்கா தேட தொடங்கியபொழுது பல்வேறு தீவிரவாதகுழுக்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது உச்சமாக வடகொரியாவிடம் இருந்தும் எல்லா தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வருவது […]

விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது

காவேரி விவகாரம் முடிந்துவிட்ட நிலையில் வாரியம் அமையாது, ஒருநாளும் தமிழருக்கு நீதி கிடைக்காது என சொல்லிகொண்டிருந்த அல்லது நம்பிகொண்டிருந்த சைமன் கோஷ்டி, திருமா கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளாகிவிட்டன‌ விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது இப்பொழுது வாரியம் தானே அமைந்தது, அரசிதழில் அச்சிட மட்டும்தானே போகின்றார்கள். தண்ணீர் வரவா போகின்றது என ஆறுதல் அடைகின்றார்கள் நாளை தண்ணீர் வந்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா? தண்ணீர் வந்தால் மட்டும் விவசாயி வாழவா போகின்றான்? எவன் விவசாயம் […]

வட கொரியா : என்ன சொன்னார் டிரம்ப்?

வடகொரியா சமாதானத்திற்கு வந்தாலும் அமெரிக்கா இப்பொழுது உச்சாணி கொம்பிற்கு ஏறுகின்றது தென்கொரிய அமெரிக்க ராணுவபயிற்சி வீம்புக்காக நடைபெறுவதில் வடகொரியா அப்செட், இதனால் பழையபடி ராக்கெட் விடலாமா? அணுகுண்டு வெடிக்கலாமா? என ஆழ்ந்த யோசனைக்கு வந்தாயிற்று அடுத்தமாதம் நடைபெற வேண்டிய வடகொரிய அமெரிக்க அதிகர்கள் சந்திப்பு கேள்விகுரியாகின்றது இந்நிலையில் டிரம்ப் என்பவர் தான் அரசியல் அறிவு அற்றவர் என்பதை நிரூபிக்கும் விதமாக பேசியதை தொடர்ந்து சி.ஐ.ஏ தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கின்றது என்ன சொன்னார் டிரம்ப்? வடகொரிய அதிபர் […]

முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று

முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று அதில் திருமா என்பவர் சொன்ன கோழிகறி கதையும் வருகின்றது உண்மையில் சைமனின் ஆமைகறி கடைசி காமெடி , அதற்கு முன்பு திருமாவின் கோழிகறி, ஜெகஸ்கஸ்பரின் இறால் கறி போன்றவை பிரசித்திபெற்றவை ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ “எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது […]

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது, இதுதான் தீர்ப்பு இதனை அரசு இதழில் உடனடியாக அச்சிட்டு ஆகவேண்டியதை பாருங்கள் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம் இனி மேலாண்மை குழு அமைக்கும் விஷயம் நடைபெற வேண்டும், ஒழுங்காக நீர் பகிரபட வேண்டும் இதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகும், முதலாவது நல்ல மழைபெய்யும் நேரத்தில் வெள்ள கணக்கை எல்லாம் நாங்கள் திறந்துவிட்ட நீர் என கன்னடம் கணக்கு காட்டும் இன்னொன்று வறண்ட காலத்தில் எப்படி பங்கிடபோகின்றார்கள் என்பது இதெல்லாம் நிபுணர்கள் […]

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு பற்றி விவாதிக்க போகின்றார்களாம் அதை அந்த மே11லே செய்திருக்கலாம் ஏன் ஒருவாரம் கழித்து வெடிக்கின்றார்கள் என தெரியவில்லை சிலர் அழைத்து விளம்பரத்தில் உங்கள் பதிவின் சாயல் என்றார்கள், அப்படி எல்லாம் இருக்கமுடியாது. அவர்கள் தனி தகவல் திரட்டி ஒளிபரப்பலாம் இங்கு அச்சேனல் வராது, வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விஷயத்தை சொன்னால் ஜெயாவிற்கு பன்னீர்செல்வம் இருந்தது போல, கலைஞருக்கு அன்பழகன் இருப்பது போல, மோடிக்கு பழனிச்சாமி இருப்பது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications