பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார். ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பது பொருள். இந்த ஆழ்ந்த பக்தி என்பது அவர்களின் விதிப்பயனால் அவர்கள் இந்தப் பூமிக்கு வந்த கர்மாவின் பயனால் நிகழ்ந்தது. அந்த முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வகை மூலம் பகவான் மானுடர்க்கு என்ன சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் செய்தார். இந்த உலகம் யுகங்களைக் கடந்து வருவது, ஒவ்வொரு யுகத்திலும் பக்தி முயற்சிகள் என்பது மானுட சிந்தனைகளுக்கும் மனவோட்டங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வந்தது. இதனால் […]

பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை.

பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை. பாரத திருநாடு ஞானபூமி, உலகமெல்லாம் உணவும் பொன்னும் பொருளும் தேடிகொண்டிருந்த காலத்தில் ஒரு பிடி பொன்னுக்கும் ஒரு வாய் உணவுக்கும் ஓடிகொண்டிருந்த காலத்திலே அது வாழ்வை தாண்டி வாழ்வுக்குப் பின்னால் இருப்பது என்ன என்பதை சிந்தித்தது. பூமியில் பொன்கிடைக்கும், கடலை தாண்டினால் வளம் கிடைக்கும் என ஒவ்வொரு இனமும் சிந்தித்த காலத்திலே பூமியும் கடலும் ஏன் வந்தது? ஏன் இந்த உலகம் படைக்கப்பட்டு இயங்குகின்றது என யோசித்த மதம் இந்துமதம். அது […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25 சந்திரகுப்தன் தயக்கதோடு கேட்டான், “இந்த ராஷசனை வைத்து என்ன திட்ட்ம் வைத்திருக்கின்றீர்கள்?” சாணக்கியன் வாயில் குதம்பிய தாம்பூலத்தைத் துப்பிவிட்டு தன் வழக்கமான இயல்பின்படி கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு சொன்னான். “சந்திரகுப்தா, நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது, நீயும் ஆட்சியின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றும் கொண்டாய், உனக்காக சில ஏடுகளை ஆலோசனைகளாக எழுதியிருக்கின்றேன், அதனைத் தரும் நேரமும் வந்தாயிற்று. இனி மகதத்தை அசைப்பார் இல்லை, பரத கண்டத்தின் மகா வலிமையான இந்த […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 24

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 24 ராஷசன் எல்லாமும் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பாழடைந்த சோலையில் அவன் தனித்திருந்து தன் நிலை குறித்து விம்மிக்கொண்டிருந்தான். அவன் நெஞ்சமெல்லாம் வேதனை ஒன்றே குடிகொண்டிருந்தது. எவ்வளவு முயன்றாலும் சாணக்கியனை அவனால் வெல்லமுடியவில்லை; சந்திரகுப்தனை அவனால் அழிக்க முடியவில்லை; அவனின் எல்லாத் திட்டங்களும் அருமையானவை என்றாலும் சாணக்கியனின் அற்புதமான திட்டங்களால் எல்லாமே நாசமாகி நொறுங்கின‌. மிகவும் மனம் நொந்த ராஷசன் இப்படிப் பரதேசியாக எல்லாம் இழந்து ஒன்றுமில்லாதவனாக அந்தப் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 23

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 23 மலையகேதுவின் வாள் இன்னும் சில நொடிகளில் ராஷசனின் தலையினைக் கொய்யும் என எல்லோரும் கண் கொட்டாமல் நின்றனர், ராஷசன் கண்களை மூடிக் கொண்டான். அந்நேரம் சாணக்கியனால் நன்கு தயாரிக்கப்பட்டிருந்த பாராகுணன் சொன்னான். “மன்னரே, இவன் ஒரு வீரன் என்றால் நாம் வெட்டிக் கொல்வது சரி. ஆனால், இவன் கோழை, எதையுமே சரியாகச் செய்ய தெரியாத கோமாளி, அறிவாளி வேடத்தில் அலைந்த கோமாளி. இவனை நாம் வெட்டிக் கொன்றுவிட்டால் என்னாகும்? இவனை […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 22

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 22 சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் பிளவு வந்துவிட்டது என மகிழ்ந்து ராஷசன் பாடலிபுத்திரம் கிளம்பிக்கொண்டிருந்தான். அதே நேரம் மலையகேதுவுக்கு ராஷசன் மேல் சந்தேகம் ஏற்படுத்தி அதற்கேற்றபடி காட்சிகளை நடத்திக் கொண்டிருந்தான் சாணக்கியன். இதற்கெல்லாம் திட்டம் போட்டு கொடுத்துவிட்டு தான் போட்ட முடிச்சு ஒவ்வொன்றும் எப்படி வேலை செய்யும் என மனக்கண்ணால் ஓடவிட்டபடி அமர்ந்திருந்தான் சாணக்கியன். சந்திரகுப்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நிச்சயம் அவன் பெரும் வீரன்; அறிவாளி. ஆனால், சாணக்கியன் மனதை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை, […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்யம் : 21

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்யம் : 21 சாணக்கியன் எப்படிப்பட்ட திட்டத்தை வகுத்திருந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. அலை அலையாக பலரை மலையகேதுவினை நோக்கி அனுப்பினான். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அனுப்பியிருந்தான். அங்கே ராஷசன், மலையகேது என அவர்களைச் சுற்றி தன் ஆட்களை வைத்துவிட்டு, தான் இங்கே சந்திரகுப்தனுடன் சண்டையிடுவது போல் நாடகமாடினான். சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் மோதல் என்பது எல்லாம் அவன் மலையகேது அரண்மனையினையும் எட்டிற்று. ராஷசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தபடியே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான். […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 20

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 20 சாணக்கியன் கர்ஜித்த பின்னும் சந்திரகுப்தனிடம் பதிலே இல்லை. அவன் தன் போக்கில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். “சந்திரகுப்தா, என்னை மீறி இந்தப் பரிசினை அவனுக்குக் கொடுத்தால் அதன் பின் நான் ராஜகாரியங்களில் தலையிடமாட்டேன், மதியாத இடத்தில் அறிவாளி இருக்கமாட்டான்” எனச் சீறினான். ‘அரசன் விருப்பமே இங்கு இறுதியானது, உங்களிடம் கேட்ட கேள்வி ஏன் அந்தப் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது, அதற்கு முதலில் விடை அளித்தால் நல்லது” என்றான் சந்திரகுப்தன். […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19 சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் சண்டை மூட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட திட்டம் தீட்டினான் ராஷசன். சந்திரகுப்தன் அரசன் எனும் உச்சப்பதவியில் இருப்பவன், சாணக்கியனோ அவனை அமரவைத்தவன் எனப் பெரும் நிலையில் இருப்பவன். மக்கள் அரசனைத்தான் கொண்டாடுவார்கள், ஒரு அறிவாளி எவ்வளவு அறிவு படைத்திருந்தாலும் மன்னனையே இயக்கினாலும், மக்களும் அதிகாரிகளும் அரசனைத்தான் கொண்டாடுவார்கள். காரணம், அதிகாரம் அவனிடமேதான் உண்டு. எங்கு அதிகாரம் குவிந்து கிடக்குமோ அங்கே மக்கள் குவிந்து கிடப்பார்கள். ஆனால், அதை ராஜகுருவினால் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18 சந்தனதாஸனிடம் சாணக்கியன் விசாரணையினை இறுக்கமான முகத்துடன் தொடங்கினான். “அந்த ஏமாற்றுக்காரன் ராஷசனின் ரகசிய ஆளான சந்தனதாஸனே, இந்த நாடு உங்களால் மிகுந்த குழப்பம் அடைந்திருகின்றது, ராஷசனை நாங்கள் தேடும் நேரம் அவன் மனைவி, மக்களுக்கு நீ அடைக்கலம் கொடுத்திருக்கின்றாய். அது பெரிய குற்றம். இராஜதுரோகம். இப்போது நீ அந்த ராஷசனின் மனைவி மக்கள் இருக்குமிடத்தை சொன்னால் உன் குற்றம் குறையும், விடுதலை சாத்தியமாகும், அதனால் சொல்லிவிடு” என்றான். “சாணக்கியரே அவர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications