பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சமதர்மம், சமத்துவம் என்பதெல்லாம்

எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மதம் எதுவோ அதை காக்க சட்டங்களும் காவல்களும் அதிகம் இருக்கும், சிறுபான்மை மதங்களுக்கு அதிக உரிமையோ காவலோ இராது ஆனால் இந்தியாவில் மட்டும் சிறுபான்மைக்கு அதீத கவனமும் பெரும் காவலும் உண்டு, பெரும்பான்மை இந்துமதத்துக்கு அதரவாக சட்டமும் இல்லை, பெரும் உரிமையும் இல்லை இந்த அநீதிக்கு பெயர் மதசார்பற்ற நாடு “சிவாஜி, எங்கிருந்தோ வந்து நமக்குள் மதவேறுபாடு இல்லை, நாம் சமதர்மமாக மதவேற்றுமையில்லா சமூகமாக வாழ்வோம் என சொல்லபட்டபோது நாம் ஏற்றுகொண்டதே நம் […]

காசி நகர்ப்புலவர் பேசும் உரை

“காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” “கங்கை நதிபுறத்து கோதுமைபண்டம்காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்” என்றும், காசி தமிழக இணைப்பை கடந்த நூற்றாண்டிலே சொல்லிவைத்தான் நம் பாரதி.. நாம் சில நாட்களுக்கு முன்பு காசிக்கும் தமிழகத்துமான தொடர்புகளை தேசிய கட்சியான பாஜக பேசவில்லை, மோடியும் தன் காசி மறுசீரமைப்பு விழாவில் குமரகுருபரர் போன்றோரை சொல்லவில்லை என சொல்லியிருந்தோம் இப்பொழுது அந்த குறையினை களைகின்றது பாஜக, இது நல்ல விஷயம். காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்புகளை ஒவ்வொரு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 07

“மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்அன்னப் பறவையே யாம்” மினிமினி போன்று ஒரு வெளிச்சம் ஞானகண்ணில் , அகத்தில் விளக்கு போல தோன்றினால் அன்னபறவை நிலையினை எட்டிவிட்டோம் என்பது பொருள் அதாவது தியானத்தின் உச்சியில் அககண்களில் அல்லது மனதில் இருளில் மின்மினி பூச்சி ஒளிர்வது போன்ற ஒளியில் ஆத்மா தென்பட்டால் அவன் அன்னபறவை போன்ற தூய நிலையினை எட்டிவிட்டான் என்கின்றார் ஒளவையார் அன்னபறவை வெண்ணிறமானது, சுத்தமானது, அது பாலையும் நீரையும் பிரித்தறியும் தெளிவு நிறைந்தது, ஞானத்தின் அடையாளமாக சரஸ்வதியின் […]

யேசு திருமூலரின் சீடராகவே இருக்க வேண்டும்

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்குருடும் குருடும் குழிவிழுமாறே” இது திருமூலர் திருமந்திரத்தில் பாடிய பாடல் அதாவது மூவாயிரம் வருடத்துக்கு முன் பாடிய பாடல், குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவாரன்றோ என்பது பாடலின் பொருள் இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய இயேசு கிறிஸ்து போதிக்கின்றார் “குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழமாட்டார்களா?” ஆக அந்த இயேசு பேசியதெல்லாம் இந்துவும் சிவனடியாருமான திருமூலரின் வார்த்தைகளையே, அந்த இயேசு திருமூலரின் […]

அய்யோ பிரதர் சிலைகளுக்கு படைக்கபட்டதை …..

“இந்தாங்க தீபாவளி ஸ்வீட் அய்யோ பிரதர் சிலைகளுக்கு படைக்கபட்டதை உண்ண கூடாதுன்னு எங்க பைபிள் சொல்லுது அந்த பைபிள‌ நாங்களும் படிச்சிருக்கோம், “வெளியே இருந்து செல்லும் எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது , உள்ளே இருந்து வரும் வஞ்சகம், பொறாமை, அரைகிறுக்குதனமே மனிதனை மாசுபடுத்தும்னு அந்த இயேசப்பா சொல்லிருக்கார் நோ நோ, இதெல்லாம் பாவம் அப்புறம் பரலோகத்துல இடமில்லை, ஜீவபுத்தகத்துல இடமில்லை , ஆத்மா பரலோகம் போகாது அய்யா இது சிலைக்கு படைக்கபட்டது அல்ல, கிச்சன்ல செய்பட்டது சாப்பிடலாம் […]

சோழனை கண்ட‌ மஹாவலி செல்வன்…

மணிசார் சொன்ன சோழர் கதையான பொன்னி படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்திருக்கின்றார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சோழர் குடும்பம் போல ராஜபக்சே குடும்பமும் பெரிது, ஒரு வகையில் சோழகுடும்ப சண்டையெல்லாம் அவர் சொந்த வரலாற்றிலும் உண்டு, பாண்டிய தரப்பில் புலிதலைவன் பிரபாகரனை வைத்தால் விஷயம் சரியாக பொருந்தும் என்பதுதான் சுவாரஸ்யம் படம் லண்டன்வாழ் இலங்கை தொழிலதிபரும் ராஜபக்சே கூட்டாளியுமான சுபாஷ்கரன் தயாரிப்பு என்பதால் ராஜபக்சே செல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் படம் பார்த்து வெளிவந்த‌ அவர் […]

ஆச்சார கோவை : 74

“நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக மீட்டும்வினாவற்க சொல் ஒழிந்தக்கால்” இப்பாடல் குரு முன்னால் எப்படி அடங்கி இருக்கவேண்டும் என்பதை சொல்கின்றதுகுருவினை கண்டால் எழுந்து நிற்கவேண்டும் அவர் அமர சொன்ன பின்புதான் அமர வேண்டும், அவர் உத்தரவின்றி எழுந்து செல்லுதல் கூடாது, குரு சொல்வதை கவனமாக கேட்டு மனதில் பதிய வைக்க‌ வேண்டும், அவர் போதித்து முடித்தபின் மறுபடியும் அதனை கேட்க கூடாது என்பது பொருள் குருவின் மனதில் ஒரு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 06

“துல‌ங்கிய தூண்டா விளக்கொளி காணில்விளங்கிய வீடாம் விரைந்து” தூண்டா விளக்கு என்றால் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த விளக்கு, குண்டலம் போன்ற அமைப்புடன் இணைந்திருக்கும் விளக்கு அது, அதில் விளக்கை ஏற்றிவைத்தால் யாரும் தூண்டாமல் அந்த விளக்கு எரியும், நந்துதல் எனும் திரி நகர்த்தல் இல்லாமல் எரிவதால் அதுதான் நந்தா விளக்கு இது கோவில் கருவறையில் தொங்கவிடபட்டிருக்கும், இன்னும் பல இடங்களில் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இனி குறளை காணலாம் தொங்கி கொண்டிருக்கும் விளக்கில் எரியும் சுடர் போல […]

சுப்பிரமணிய சந்திரசேகர்

அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது ராம்சாமி, அண்ணா, கருணாநிதி என பிம்பம் உள்ள மாகாணத்தில் இவரை போன்றவர்கள் தெரியாது, அதுவும் பிராமணனாக இருந்தால் சுத்தமாக தெரியாது அந்த விஞ்ஞானியின் பெயர் சுப்பிரமணிய சந்திரசேகர் அவர் தமிழக பிராமண குடும்பத்து பிறப்பு, 1910ம் ஆண்டு பிறந்தார், பிரபல அறிவியல் மேதை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 05

“சங்கு நிறம்போற் றவளவொளி காணில்அங்கையி னெல்லியே யாகும்” இக்குறள் “சங்கு நிறம் போற்றவள்ச் ஒளி காணில் அங்கையிம் நெல்லியே ஆகும்” என பிரிந்து பொருள் தரும்மூச்சுகாற்றினை சீர்படுத்தி பிரணாயாமத்தை சரியாக செய்தால் வடகலை பிங்கலை மூச்சினை கலந்து சுழிமுனை நாடியினை துலக்கினால் அங்கு ஆத்ம ஒளியினை காணலாம், சங்கின் நிறம் போன்ற அந்த வெண்சுடரை உள்ளங்கையில் நெல்லிக்கனி காண்பதை போல் காணலாம் என்பது குறளின் பொருள் “ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications