ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 03
“மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்முன்போல மூலம் புகும்” “மின்போல் உருவம் விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல் மூலம் புகும்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் இந்த குறள் யோக தத்துவத்தை மிக சரியாக சொல்லும் குறள் குண்டலின் சக்தி மூலாதாரத்தில் இருந்து கிளம்பி உச்சகச்சரமான துரியத்தினை அடையும் பொழுது மின்னல் போன்ற ஒரு வெளிச்சம் நெற்றி புருவத்தில் தோன்றும், அதனை அக கண்களால் காணலாம், அந்நிலையில் ஜீவாத்மா தன் மூலமான பரமாத்மாவுடன் ஒன்றியிருக்கும், அந்த மூலத்துடன் கலந்திருக்கும் […]