ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 01
“தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்தோன்றியக் காற்றூய வொளி” இக்குறள் “தோன்றியது எல்லாம் தொடக்கம் அறுத்து உய்வெளியாய் தோன்றியகால் தூய ஒளி” என பிரிந்து பொருள் தரும் அதாவது இந்த உலகில் தோன்றிய எல்லாவற்றின் மூலம் எது என்பதை உணர்ந்தும், அப்படியே உள்ளத்தில் தோன்றும் எல்லா ஆசைகளின் மூலம் எது என்பதை உணர்ந்து அந்த ஆசைகளை களைந்தும் மனதால், மனவெளியில் அந்த ஆசை மயக்கங்களை எல்லாம் அகற்றி வெறும் வெளியாக வைத்து வெறுமையாக்கினால் அங்கு ஈசனின் ஒளி பெருகும் […]