பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமல் உளற ஆரம்பித்துவிட்டார், அதாவது அரசியல்வாதியாகிவிட்டார்

கமலஹாசன் அரசியல்வாதி ஆகிவிட்டபடியால் பேட்டிகளில் இறங்கிவிட்டார், இப்பொழுது தினதந்திக்கு பேட்டி அளித்துள்ளார் மாவட்டம் தோறும் மிக பின் தங்கிய கிராமத்தை தத்தெடுத்து மார்டன் கிராமமாக வளர்ப்பாராம். இன்னும் என்னவெல்லாமோ பேசுகின்றார் மனிதர் “உன்னால் முடியும் தம்பி” எனும் சினிமாபாணியிலே இருப்பார் போலிருக்கின்றது தமிழக அரசு கடனை எப்படி அடைப்பீர்கள் என்றால் தொழிற்துறையினை வளர்ப்பாராம், லஞ்சத்தை கட்டுபடுத்துவாராம் மறந்தும் முறையாக வசூலிப்பேன் என்றோ, வரி செலுத்தா முதலாளிகளை பிடிப்பேன் என்றோ, மணல் முதல் குவாரி வரை கொள்ளையடிய்யோரை முடக்குவேன் […]

அம்பானிக்கும் அதானிக்கும் இன்று நீரவ் மோடிக்கு வந்த நெருக்கடி நிச்சயம் வரும்

ஒரு சர்ச்சை நடந்துவிட்டால் இந்தியாவில் ஆளாளுக்கு பரபரப்பாய் எழுதுவார்கள், முன்பு பத்திரிகைகள் அப்படி எழுதி தள்ளும், அவர்கள் கற்பனை சிறகினை தட்டிவிட்டு எழுதுவார்கள் இணையம் வந்தபின் எல்லோரும் எழுத ஆரம்பித்தாயிற்று, சிலர் வங்கி நடைமுறையினை புரியாத மொழியில் விளக்கி தள்ளுகின்றார்கள், சிலர் நகைகடை விவகாரங்களை சொல்கின்றார்கள், சிலரோ நேராக கோல் போஸ்ட் சென்று மோடி ஒழிக, காங்கிரஸ் ஒழிக என எழுதி தள்ளுகின்றார்கள் என்ன நடந்திருகின்றது? நீரவ் மோடி வைரமும் இன்னபிற கற்களும் வாங்கி விற்கும் வியாபாரி, […]

அஜித் விஜய் மைண்ட் வாய்ஸ்….

“அவங்க 2 பேரும் அரசியல்ல ஒரு வேளை ஜெயிச்சிட்டா, அடுத்த‌ 10 வருஷத்துக்குள்ள‌ நாமும் இப்படி கட்சி எல்லாம் தொடங்கணும், கொடி சின்னமெல்லாம் வரையணும் அவங்க தோத்துட்டா நமக்கு சிக்கல் இல்ல, ஜெயிச்சிட்டா நம்மை மேலிடம் சும்மா விடாது, கட்சி அது இதுண்ணு நம்மளை பாடா படுத்திருவாங்க. அதனால நம்ம ரசிகர்கள்கிட்ட சொல்லி அந்த ரெண்டு பேரையும் எப்படியாது ரகசியமா தோற்கடிக்கணும் இல்லண்ணா நம்ம நிம்மதி போயிரும் அதையும் மீறி நாம அரசியலுக்கு வந்துட்டா, சிம்பு கட்சி […]

ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம்

ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம் முன்பெல்லாம் கட்சிக்கு ஆள் இருக்கின்றதோ இல்லையோ கொள்கை மகா அவசியம் காங்கிரஸின் கொள்கை தேசிய விடுதலை என்றும் அதன் பின் தேசவளர்ச்சி என்றும் இருந்தது, கம்யூனிஸ்டுகளின் கொள்கை பொதுவுடமை என அக்காலத்தில் இருந்தது ஜனதா கட்சி இந்திராவின் சர்வாதிகாரத்தை பொறுக்கமுடியாமல் எழுந்த உணர்ச்சி கட்சி, காங்கிரசுக்கு எதிர்ப்பு கொடுக்க மாநில கட்சி கூட்டணியால் முடியும் என பரீசிலீத்து காட்டிய கட்சி அது பாரதீய ஜனதாவின் கொள்கை இந்துத்வா எனினும் அதனை […]

உ வே சாமிநாதன் பிறந்த தினம் இன்று…

பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 80 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி […]

தமிழகத்தின் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம்

மதுரைக்கும் கயிலாயத்திற்கும் சில தொடர்புகள் இருப்பதை நம்பத்தான் வேண்டி இருக்கின்றது, மதுரை ஆலயத்தை அடுத்து திபெத்திலும் தீவிபத்து ஏற்பட்டிருக்கின்றது ஆம், திபெத் என்பதே அக்கால கையிலாய பகுதிகள், அங்குதான் புத்த விகாரையாக மாற்றபட்ட ஆலயம் எரிந்திருக்கின்றது, ஒரு பக்கம் திகைப்பும் ஆச்சரியமும் கொண்ட விஷயம் இது இதனை விட இன்னொரு விஷயம் தமிழகத்தில் எரியதொடங்கியாயிற்று, பழனிச்சாமிக்கு மகா சிக்கலான விஷயம் அதாகபட்டது தமிழகத்தில் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம் என்றொரு பல்கலைகழகம் உண்டு பல்கலைகழகம் என்றால் அதற்கொரு […]

மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல்

மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல் பன்னீரும், அமைச்சர்களும் தங்களை அறியாமல் பெரும் அவமானத்திற்கும் பழிக்கும் தயாராகின்றார்கள் அதாவது இவர்களின் உட்கட்சி தகறாறு வரை மோடி வந்து தீர்த்திருகின்றார் என்பதை ஒப்புகொள்கின்றார்கள், அந்த அளவு அதாவது சாலையோரத்தில் ஒன்றாக டீ குடிக்கும் அளவு நெருக்கம் இருப்பதாக சொல்கின்றார்கள் ஆனால் அதே நெருக்கத்தை காவேரி மீட்பு, மீணவர் பிரச்சினை, புயல் மீட்பு பணிகளில் எல்லாம் தமிழக அமைச்சரவை காட்டி தமிழகத்திற்கு நியாயம் பெற்று தந்தால் என்ன? என […]

ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவம்

இந்தியாவின் பரபரப்பான சம்பவங்கள் என வாசித்துகொண்டிருந்தால் அதில் ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவமும் வருகின்றது ராமசந்திரன் சுடபட்டவுடன் தமிழகம் மிக பரப்பாகியிருக்கின்றது, ரசிகர்கள் அவர்களின் கடவுள் சாக போகின்றான் என பெரும் அழிச்சாட்டியத்தில் இறங்கி இருக்கின்றன‌ இது அன்றைய தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்திருக்கின்றது, ராமசந்திரன் தனிபட்ட விஷயத்திற்காக சுடபட்டிருக்கின்றார் என்கின்றார் காமராஜர் திமுக இதயகனி சுடபட்டிருக்கின்றது என அழுகின்றது ஒரு குரல் மட்டும் உரக்க உண்மையினை சொல்லியிருக்கின்றது, அது பெரியார் குரல் ” இரு கூத்தாடிகள் […]

காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது

இந்த காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது இந்த விஜயதாரணி என்பவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றது டெல்லி காங்கிரஸ், யார் இந்த ஜெயலலிதா? 1989ல் கலைஞர் நிதிநிலை அறிக்கை படிக்க தொடங்கிய பொழுது, சர்காரியாவால் விசாரிக்கபட்ட கருணாநிதி நிதிநிலை அறிக்கை படிக்க தகுதியற்றவர் என ஆடி சபையினை ரணகளமாக்கியவர் சர்காரியா கமிஷன் கலைஞரை விடுதலை செய்தது, ஆனால் ஜெயா நீதிபதியின் சம்மட்டியால் அடிவாங்கி இருக்கின்றார் அந்த ஜெயலலிதாவின் படம் , அதாவது குற்றவாளி என உச்சநீதிமன்றமே […]

மோடி வரலாறுகளை படிக்கட்டும்

நிச்சயம் காமராஜர் அப்பழுக்கற்றவர், நியாத்தின் திருவுருவம் ஆனால் எப்படி வீழ்ந்தார்? திமுகவினை குறிவைத்து அவர் பெரும் பணக்காரர்கள் நிறுத்தினார், நடேச முதலியார், பரிசுத்த நாடார் போன்ற பெரும் பணமுதலைகளை அவர் தேர்தலில் அண்ணா, கலைஞருக்கு எதிராக நிறுத்தினார் பணக்காரர்களின் செல்வாக்கு, பணம் எல்லாம் புகுந்து விளையாட விடுமா திமுக? ஒவ்வொரு அடியினையும் வோட்டாக மாற்றும் வித்தை தெரிந்த கூட்டம் அது அனாசயமாக காமராஜர் பணக்கார பங்காளன் என புகுந்து விளையாடிற்று, அண்ணாவின் தோல்வியினை பணக்காரரின் வெற்றியாய் அழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications