பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

893ம் ஆண்டு இதே நாளில்

1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் முழங்கிய முழக்கம் அதுவரை பழமையான காட்டுமிராண்டி மதம், மூடபழகக்ம் கொண்ட மதம் என ஐரோப்பியர் நம்பிகொண்டு அந்த இழிவான நம்பிக்கையால் இந்துமதத்தை ஏளனபடுத்திகொண்டிருந்ததையும் தகர்த்து போட்டதுஅந்த ஞான உரைக்கு பின்பே உலகம் இந்துமதத்தை பெருமையாக கண்டது, ஏகபட்ட பேர் இந்துமதம் பணிந்தனர், எவ்வளவோ சமயவாதிகள் மவுனமாக இந்துமத பெருமையினை ஒப்புகொண்டனர்அந்த கூட்டத்தில் ஒரு விஞ்ஞானி இருந்தான், அவன் அன்றைய உலகில் மட்டுமல்ல என்றுமே விஞ்ஞான உலகில் மறக்கமுடியா […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 80

“கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசிநற்குண நற்செய்கை பூண்டாட்கு – மக்கட்பேறென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றேகொண்டாற்குச் செய்தவம் வேறு” அதாவது ஒரு குடும்பபெண் கற்பை ஆடாயாக உடுத்திக்கொள்ள வேண்டும், அன்பைப் பூவாக முடித்துக்கொள்ள வேண்டும். நாணம் என்னும் வெட்கத்தை உடம்பில் பூசிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் நல்ல குணம், நல்ல செயல் என்னும் அணிகலன்களை அணிந்துகொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட பெண்ணுக்கு குழந்தைப்பேறு என்பது செல்வமும் இருந்துவிட்டால் இல்லற வாழ்க்கை மிகவும் நல்லது, அப்படிபட்ட மனைவி அமைவது தவபயன் போன்றது மனைவியானவள் கற்பு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 02

“வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில்” இக்குறள் “வாக்கும் கருத்தும் மயக்கும் சமயங்கள் ஆக்கிய நூலினும் இல்” என பிரிந்து வரும்அதாவது நன்றாக பேசும் வாக்கு வன்மை உடையோர் கொண்ட மதத்தின், மானிடரை மயங்க வைக்கும் கருத்துக்களை கொண்ட மதத்தின் சமய நூல்களிலும் முக்தி அடையும் வழி இல்லை என்பது பொருள் இது இக்கால சூழலுக்கு மிகவும் சரியாக பொருந்துவதுதான் ஒளவை பெற்ற பெருஞானத்திற்கான சான்றுமிக நன்றாக பேசி பேசி மக்களை குழப்பும் அல்லது […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 79

“திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும்பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் – நறுவியவாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும்தீய விலங்கிற் சிலர்” மனைவியானவள் திருமகள் எனும் மகாலஷ்மி போல மனதாலும் குணத்தாலும் அழகாலும் வீற்றிருந்தாலும், அவளை விட அழகானவளாய் இருந்தாலும் சிலர் அடுத்தவன் மனைவிக்கு ஆசைபட்டு தங்கள் பெருமையினை இழந்து சிறுமைபட்டு நிற்பர் இப்படிபட்டவர்கள் தங்கள் வாயில் இருக்கும் நல்ல உணவை வீசிவிட்டு விஷத்தை உண்ணும் விலங்கை போன்றவர்கள் என்பது குறளின் பொருள் (இதற்காக அப்படியானால் மனைவி அழகாகவோ குணமாகவோ பெறாதவன் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 01 “மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது” இக்குறள் மனத்தோடு உறுபுத்தி ஆங்காரம் சித்தம் அனைத்திலும் இருப்பதில்லை என பிரிந்து பொருள் தரும்அதாவது சிவமாகிய பரம்பொருளை அடையும் முக்தி என்பது மனம், புத்தி, ஆங்காரம் சிந்தனை என எல்லாவற்றையும் கடந்த பெருநிலை என்பது குறளின் பொருளாகும் இந்த ஆத்மா நான்கு விஷயங்களிலும் சிக்கி ஸ்தம்பித்து கொண்டால் முக்திநிலை […]

திருவோணம்

ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை அது வழமையான தேவ அசுர சண்டையில் ஒரு புராணம் என்றாலும் அதன் தத்துவம் பெரிது, போதனை மிக பெரிது தேவர்கள் அசுரர்கள் என இருவருமே பரம்பொருளுக்கு மனிதர்களை போல கட்டுபட்டவர்கள் என்றாலும் அவர்களின் சக்தியும் ஆயுளும் அதிகம், பல சிறப்புக்களை பெற்ற மேலானவர்கள் இருவருமே உலக இயக்கத்துக்காக படைக்கபட்டவர்கள், இருவருக்குமே பொறுப்புக்கள் உண்டு […]

நாச்சியார் திருமொழி 22

நாச்சியார் திருமொழி 22 அன்றும் அதிகாலையில் தோழியரோடு நீராட வந்தாள் ஆண்டாள், கண்ணன் எழுந்து வருமுன் நீராடிவிட்டு சென்றுவிடவேண்டுமென அவர்கள் முன்னதாகவே வந்திருந்தார்கள் அவர்கள் நீராடிகொண்டிருக்கும் நேரம் இனிய குழலோசை கேட்கின்றது, ஆச்சரியபட்ட ஆண்டாளும் தோழிகளும் அது கண்ணனின் குழல் என்பதை அறிந்து புன்னகைக்கின்றனர், அதிகாலை குளிர்ந்த நேரமாதலால் நீரில் மூழ்கி இருக்கவும் முடியாது குழலோசையினை கேட்டார்களே தவிர கண்ணனை அவர்களால் காணமுடியவில்லை, ஒருவேளை அவன் அங்கே எங்காவது மறைந்திருக்கலாம் என்றவர்கள் அவன் தங்கள் ஆடையினையும் மறைத்து […]

திருவோணம்

மாந்தோப்பு போன்ற கன்னம்மயக்கிடும் கண்களோ மீன்கள்மாதுளை பிளந்தன்ன செவ்வாய்புன்னகை முத்து பந்தல்வளர்பிறை நிலவே நெற்றிதளிர்மேனி குளிர்ந்த தென்றல்கலைஅமுத கலச முகம்காட்டிடும் ஆயிரம் ஜாலம் ஒருபுறம் மன்மத சேனைமறுபுறம் மாணிக்க மாலைசீர்பெற்ற வளைவுகள் காட்டும்திருவிழா தேர்கோலங்கங்கள்கார்குழல் புரளும் உச்சிஉயிர்மருகி உருளும் காட்சிபேர்பெற்ற கேரள பெண்கள்பெண்ணுக்கு அவளே நிகராம் கடவுளின் தேசத்தில் தேவதைக்கு பஞ்சமுண்டோதேவதைகள் கொண்டாட நாளின்றி நியாமுண்டோதேவனவன் சித்தம் கொண்டான் வாமணாய் வந்துநின்றான்தேவதைகள் கொண்டாட மாவலியும் தலைதந்தான் தேவதை கூட்டம் தேர்போல் நகரும்பொலிவில்கதையும் கவிதையும் மழைபோல் கொட்டும்புதியதோர் உவமை […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78 “கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்களவொன்றோ வேனையவுஞ் செய்வார் – பழியோடுபாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்காமங் கதுவப்பட் டார்” காமவயபட்டவர்கள் என்னென்ன பாதகம் செய்வார்கள் என்பதை இந்த பாடலில் சொல்கின்றார் குமரகுருபரர் காமகொடும்நோய் என்பது தான் பாதித்த ஒருவனை அடியோடு மாற்றும், அது கற்றவர் கல்லாதவர் என எல்லோரையும் அவரவர் தகுதிக்கு கீழாக இறக்கி நாயினும் கீழாக மாற்றும், குலம் குணம் செல்வம் புகழ் மரியாதை என எல்லாம் அழிக்கும் அப்படிபட்ட காமம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 10

“ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டுவாசமலர் நாற்றம்போல் வந்து” இக்குறள் “ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து” என பொருள் தரும் அதாவது மலரின் உள்ளே வாசம் உள்ளது போல ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு என்பது பொருள். மலரின் மணம் இயல்பானது, ஆனால் அதை எல்லா உயிர்களும் உணர்ந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தேனிக்கள் அந்த மணத்தை தேடி சென்று தேனை எடுக்கின்றன, பக்தியுள்ளோர் அதை கொய்து பகவானுக்கு படைப்பார்கள் அப்படி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications