பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம் !!!

உலகில் பலவிதமான ஆராய்ச்சி நடக்கின்றது, சிலர் புதிதாக ஆராய்வார்கள், சிலர் பழம் விஷயங்களை ஆராய்வார்கள் அப்படி பழம் விஷயங்களை ஆராயும் தமிழர், புது விஷயத்திற்குள் நுழைகின்றார்கள், அதாகபட்டது கிட்டதட்ட முப்பாட்டன் நரகாசுரன் கதைதான் அதாவது மூதேவி என்பவள் பெரும் தெய்வமாம், அவள் விரட்டபட வேண்டியவளே இல்லையாம். எல்லாம் பின்னாளில் வந்த திரிபாம் ஆனால் அவ்வையாரும், வள்ளுவனும் மூதேவியினை திட்டுகின்றார்களே என கேட்டால், அது அப்பொழுதே ஆரியன் புகுந்து திரித்துவிட்டான் என்கின்றார்கள் தமிழர் மழைகடவுள் மாரியாம், அது பின்னர் […]

மருது சகோதரர்களின் மறக்க முடியா வீரமும் தியாகமும்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது . சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி […]

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி, ஆக இந்த காவல்துறையின் அஜாக்கிரதையால் ஒரு குடும்பம் அழிந்திருக்கின்றது. சந்தேகமே இல்லை, இது கொலை. கொலைக்கு தூண்டியது யாரெனில் அந்த கந்துவட்டி கும்பல் பாதி, அதை தடுக்க தவறிய காவல்துறை மீதி இவர்கள்தான் காரணம் காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி அவர் என்ன செய்கின்றார்? எங்கோ அவர் முன்னும் சிலர் கொளுத்தி சாக முயன்றார்களாம் மக்களை காக்க தவறும் இந்த அரசு பதவி விலக வேண்டும் என்றோ, […]

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! அப்பொழுதே சொன்னோம், எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் திட்டத்தோடு காய் நகர்த்துபவர். இப்பொழுது கலைஞர் தளர்ந்த நிலையில், ஜெயா இல்லா நிலையில் விஜயகாந்த் போன்றோர் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் விஜயினை பெரும் பிம்பமாக அவர் வளர்க்க நினைப்பார் என எப்போதே சொல்லியிருந்தோம் மிக சரியாக வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா? ஆனால் வந்ததும் காமெடி செய்துவிட்டார், அதாவது விஜயின் கோபம் அவரின் படங்களில் வெளிப்படுகின்றதாம் அம்மா… புரட்சி தலைவி […]

ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்

என்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை ஜெயா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது. தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார் அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன‌, ஜெயாவினை நோக்கி சொல்லபடும் மிக சில‌ நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று. அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தேற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை […]

குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள் துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள் இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது மிஸ்டர் கோபிநாத், நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள் இங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் […]

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல் சீன இயந்திரத்தில் இயக்கபடும் படகுகள் தொடர்பாக மீணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்திருக்கின்றது. மீணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல‌ கல்பாக்கம் ராமசந்திரன் காலத்தில்தான் அணுவுலை வளாகமாக மாறிற்று, இன்னும் ஏராளமான சம்பங்களை சொல்லலாம். மெரீனாவினை சுத்தமாக்கி எனக்கு கல்லறை கட்ட போகின்றேன் என ராமசந்திரன் அங்கிருந்த மீணவ குப்பங்களை வால்டர் தேவாரம் தலமையில் அடித்துவிரட்டியது எல்லாம் பெரும் கொடுமை கூடங்குள அணுவுலை விவகாரத்தில் ஜெயா காட்டிய கொடுங்கோலும் […]

மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் இது மிக மிக சீரியசான பிரச்சினை அந்த நபர் பெயர் முசோபர் கனி, இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். அது இஸ்லாமிய பெயர் என்பதற்காக சொல்லவில்லை , இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடுவது ஒன்றும் ரகசியமல்ல‌ இது எவ்வகை யுரேனியம், செறிவூட்டபட்டதா இல்லையா? இவர் கடத்தியதன் நோக்கம் என்ன? யாருக்கு கொடுக்க இருந்தார் என்பதெல்லாம் விடை கண்டே ஆகவேண்டிய கேள்விகள் யுரேனியம் […]

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம் இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது. இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம் அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த […]

ஏம்பா கோபிநாத், இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

ஏம்பா கோபிநாத் இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா? இரட்டை இலையினை பழனிச்சாமி வெல்வாரா? தினகரன் வெல்வாரா? சசிகலா வெளிவரும்பொழுது கட்சி இருக்குமா? இருக்காதா? அறிவில் சிறந்தவர் பழனிச்சாமியா? இல்லை பன்னீர் செல்வமா? டெங்கி ஒழிப்பில் முன்னால் நிற்பது மத்திய அரசா? மாநில அரசா? ஸ்டாலினின் அரசியல் திமுகவிற்கு சாதகமா பாதகமா? அன்புமணி அறிக்கைகளை அரசு கண்டு கொள்கின்றதா இலையா? தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவினை நியமித்தால் கட்சி வளருமா இல்லை சரியுமா? இப்படி எத்தனையோ தலைப்புகள் […]