பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைய அரசியல் நிலவரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் டி.டி.வி. தினகரன் தரிசனம் எதற்கு? எம்ஜிஆர் காலத்தில் கட்டிமுடிக்கபட்ட கோபுரம் காக்கும் என்றா? நடக்குமா? எதற்கு அங்கு சென்றிருப்பார் தினகரன்? இந்த நாஞ்சில் சம்பத் என்பவரை கொஞ்ச நாளாக காணவில்லை, அந்த கோவில் பக்கம் ஏதும் கடைபோட்டு மாறுவேடத்தில் அலைகின்றாரோ என பார்க்க போயிருக்கலாம் தினகரன். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது : ப.சிதம்பரம் டிவிட் இவர் அதிமுகவினை சொல்கின்றாரா? இல்லை காங்கிரசை சொல்கின்றாரா? அல்லது மோடி அரசின் இந்தியாவினை சொல்கின்றாரா என்பதுதான் […]

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்

இலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம். இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌ இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் […]

அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

நாங்கள் சிவசேனை மற்றும் பாஜகவின் தயாரிப்பேதான், அதனை நிரூபித்துகொண்டே இருப்போம் என செய்துகாட்டுபவர்களில் அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது அவ்வப்போது நிரூபிப்பார்கள், இப்பொழுது பெரியார் பக்கம் வந்துவிட்டார்கள் அதாவது பெரியார் ஈழவிடுதலைக்கு உதவவில்லை, குமரி பிரிவினைக்கு உதவவில்லை, சென்னை போராட்டத்திற்கு உதவவில்லை , அதனால் அவர் தமிழின துரோகி என சொல்ல ஆரம்பித்தாயிற்று தமிழக அமைப்பின் சாதிக்கு சற்றும் குறையாதது யாழ்பாண சாதிவெறி, இது பெரியாருக்கு தெரியாதது அல்ல, அதனால்தான் யாழ்பாண வர்க்கம் இங்கு ஆதரவு […]

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

” இந்து கோவில் ஆனால் நீ உள்ளே வர கூடாது, இது இந்துக்கள் கிணறு ஆனால் நீ நீர் எடுக்க கூடாது நீனும் இந்து , நானும் இந்து ஆனால் ஒன்றாய் அமரவோ உண்ணவோ கூடாது. நீ கீழாவனன் நான் மேலாவவன், என்னை கண்டால் 10 அடி தள்ளி நிற்கவேண்டும், மேலாடை அணிய கூடாது. நீ படிக்க கூடாது, நீ சிந்திக்க கூடாது, விலங்குகளில் ஒன்றாய் நீ இருக்கவேண்டும். வாழலாம், ஆனால் நீ எப்படி வாழவேண்டும் என்பதை […]

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

https://youtu.be/sMdjTc6uwJA  அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று, அவன் போராட கிளம்பி கிட்டதட்ட 90 வருடமாயிற்று. போராட்டத்தை முடித்தும் கிட்டதட்ட 45 வருடமாயிற்று. ஆனாலும் அந்த கிழவன் பெயரை கேட்டவுடனே பலருக்கு எவ்வளவு வயிற்றேரிச்சல் வருகின்றது, எவ்வளவு அலறல் வருகின்றது? கிழவன் அப்படி அடித்திருக்கின்றான் . ஒரு பெரு மரம் இருந்திருக்கின்றது, அதில் மந்தி கூட்டம், கோட்டான் கூட்டமும் கொடுநாகமும் குழுமியிருந்திருக்கின்றன, தாங்கொணா துயரை எல்லாம் அவை கொடுத்திருக்கின்றன. ஆத்திரமடைந்த கிழவன் கோபத்தில் தைரியமாக பொங்கிவிட்டான், அது பாம்பு […]

நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல : ஜெயகுமார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன் ஏம்மா, தகுதி நீக்கும் செய்யும் ஐடியா எல்லாம் இந்த பழனிச்சாமிக்கும், தனபாலுக்கும் உதிக்கவா செய்யும்? இப்படி எல்லாம் ஆடும் அளவிற்கு அவர்கள் வொர்த் இல்லை, ஏதோ ஒரு சக்தி திட்டம் தீட்டி கொடுக்கின்றது அவ்வளவுதான் அதனைத்தான் நாங்கள் வேதனையோடு பார்க்கின்றோம் தாயே… தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் […]

உலகம் பதை பதைப்பில் இருக்கின்றது

ஆறுமுறை அணுகுண்டு வெடிப்பினை தொடர்ந்து, நீண்ட தூர ஏவுகனை சோதனையிலும் முழுவெற்றி பெற்றது வடகொரியா ஆனானபட்ட ஹிட்லரையே சமாளித்த அமெரிக்காவிற்கு வடகொரியா பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கின்றது, இனி இன்னும் பொருளாதார தடைகளை இறுக்குவார்கள் ஏற்கனவே ஒவ்வொரு பொருளாதார தடையின்பொழுதும் ஒரு ஏவுகனை + ஒரு அணுகுண்டு என சோதித்து வெறுப்பேற்றுவது வடகொரிய ஸ்டைல் இப்பொழுது புதிய தடைவேறு என்ன ஆயுதம் சோதனை செய்யபோகின்றார்களோ அல்லது எத்தனை நாள் பொறுப்பது என ஜப்பானை போட்டு அடிக்க போகின்றார்களோ என்னவோ, […]

சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்

என்ன இருந்தாலும் மராட்டியர்கள் நன்றிமிகுந்தவர்கள், ஹேம மாலினியினை அங்கே வரவேற்று கொண்டாடி ஏற்றுகொண்டு மறக்காமல் குஷ்பூவினை தமிழகத்திற்கு அனுப்பிவிட்டனர். சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்.           தமிழக அரசியலில் வைஜெயந்தி மாலாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது, ஆனால் தவறவிட்டார். தான் தவறவிட்ட வாய்ப்புகளை எல்லாம் குஷ்பூவும் விட்டுவிட கூடாது, அவர் அரசியலில் ஜொலிக்கட்டும் என வாழ்த்துகின்றார் வைஜெயந்திமாலா. வைஜெயந்திமாலா விரும்பினால் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சீனியர் பதவி அவருக்கு […]

கரியப்பா , மானெக்‌ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்

மார்ஷ்ல் அர்ஜன் சிங், இந்த தேசத்திற்கு ஆற்றிய சேவை மகத்தானது. 1962ல் சீனாவிடம் இருந்து பின்வாங்கிய நிலையில், இந்தியா பலவீனபட்டுவிட்டதாக கருதிய பாகிஸ்தான் அமெரிக்க கருவிகள் துணையோடு 1965ல் நம்மீது படையெடுத்தது. ஆனால் அமெரிக்காவே அலறும் வண்ணம் பாகிஸ்தானை பின்னி எடுத்து விரட்டியது இந்தியா, அந்தபோர் தொடர்ந்திருக்குமானால் முழு காஷ்மீரை அன்றே மீட்டிருப்போம். லால்பகதூர் சாஸ்திரியும் அத்திட்டத்தில்தான் இருந்தார் ஆனால் தாஷ்கண்ட் அமைதிபேச்சில் அவர் முழு காஷ்மீரையும் கைபற்றும்வரை யுத்தம் நிற்காது என சொல்லிவிட்டு வெளியேறிய பின்புதான் […]

பிறந்தநாள் வாழ்த்துக்கள், மோடிஜி…

நமது பத்திரிகைகள் எப்பொழுதாவது சொல்லும் சேதி அது, அதாகபட்டது மோடி தமிழகத்தை பொருத்தவரை தமிழக பாஜக மீது அதிருப்தியில் இருக்கின்றாராம். “எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் கட்சி வளர்க்க உங்களுக்கு தெரியவில்லை..” என சலித்து கொள்வாராம் நமது பத்திரிகைகள் உண்மையே சொல்லும் என்பதால் இதனையும் நம்பலாம். அந்த கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொள்வார்கள் போல.. ஆக தனக்கும் நல்ல பெயர் இருப்பதாக நம்பிகொண்டிருக்கும் அந்த அப்பாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். […]